முடிவுக்கு வந்தது விமான விவகாரம் – இலங்கைக்கு நன்றி தெரிவித்த ரஷ்யா

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் தொடர்பான சிக்கலைத் தீர்த்தமைக்காக இலங்கை அதிகாரிகளுக்கு ரஷ்ய விமானப் போக்குவரத்துக்கான பெடரல் முகமை (ரோசாவியட்சியா) தனது நன்றிகளை தெரிவித்துள்ளது. ஏரோஃப்ளோட் விமானம் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த உத்தரவை இலங்கை நீதிமன்றம் இன்றைய தினம் இடைநிறுத்தியது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மேல் வர்த்தக நீதிமன்றம் பரிசீலித்ததை அடுத்து இந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விமானம் கொழும்பில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்பட்டதை ஏரோஃப்ளோட் நிறுவனம் … Read more

மிருகக்காட்சிசாலை விலங்குகளுக்கு உணவளிப்பதில் நெருக்கடி

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் உணவுப் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதிகளவான விலங்குகளை கொடூரமான விலங்குகள் நடமாடாத சரணாலயங்களில் விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலக் பிரேமகாந்த அறிவித்துள்ளார். மிருகக்காட்சிசாலையில் ஒரு இனத்தைச் சேர்ந்த நான்கு விலங்குகளை மாத்திரம் மக்கள் பார்வைக்கு வைத்தல் போதுமானது. வனவிலங்கு திணைக்களத்தின் அனுமதியுடன் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு மான் போன்ற விலங்குகள் விடுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் … Read more

கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறிய 12 வயது சிறுமி! மூங்கிலாற்றில் சம்பவம் (Photos)

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு கிராமத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மூங்கிலாறு வடக்கு பகுதியில் 12 அகவையுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் இரவு நித்திரை கொள்ளச் சென்ற குறித்த சிறுமி அதிகாலையில் வீட்டிலிருந்து காணாமல் போனாதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணை  வீட்டிலிருந்த பணம், தந்தையின் தொலைபேசி என்பன காணாமல் போயுள்ள நிலையில், தன்னை … Read more

இந்தியாவில் 3 மாதங்களில் இல்லாத வகையில் கொரோனா அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 4 ஆயிரத்து 518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று 4 ஆயிரத்து 270 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,544, மகாராஷ்டிராவில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 107 பேருக்கு தொற்று உறுதியாகிவுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 779 … Read more

ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள்: பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்

ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை பொறுப்பேற்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். விமானப் பயண சிக்கல் காரணமாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை தபால் அலுவலகங்களில் உள்ள கருமபீடங்களில் பொறுப்பேற்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுவருகின்றது. அதேபோல் மாற்று பயணப் பாதை ஊடாக ரஷ்யாவுக்கு அஞ்சல் பொருட்களை அனுப்பி வைக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எனினும் பொறுப்பேற்கப்படும் அஞ்சல் பொருட்கள் சம்பந்தப்பட்ட அடைவிடத்திற்கு செல்ல தாமதமடையலாம் என்று தபால்மா … Read more

தேவாலயத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்ட வணபிதா சந்திராவின் நெகிழ வைக்கும் சரித்திரம்

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற்பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம் என்பது வரலாறு. இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலை காணப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க வேண்டிய காலத்தின் கட்டாயம் எமக்கு உள்ளது. அருட்தந்தை சந்திரா மட்டக்களப்பில் அருட்தந்தை சந்திரா என்று எல்லோராலும் … Read more

இலங்கைக்கு பங்களாதேஷ் உருளைக்கிழங்கு

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு பங்களாதேஷ் முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் பங்களாதேஷ் இல் இருந்து உருளைக்கிழங்கு,இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆலோசித்துவருகிறார். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான் கணபாபனில் வீரகோனை  சந்தித்த போது பங்களாதேஷ் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று நோய் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போரைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் உணவுப் பிரச்சினையை எதிர் கொண்டுள்ளதாகவும், அதிகளவு உணவுப் பயிர்களை … Read more

நாளை பாராளுமன்றத்தில் 69 ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை

அத்தியாவசிய அரச சேவையை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை பாராளுமன்றத்தில் 69 ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளார். குறைநிரப்புப் பிரேரணை தொடர்பான விவாதம் நாளை மாலை 5.30 வரை இடம்பெறவுள்ளது. பிரேரணையை சமர்ப்பித்ததன் பின்னர், நாட்டின் தற்போதைய நிலை குறித்து விசேட கூற்றொன்றை முன்வைத்து பிரதமர் உரையாற்றயுள்ளார். சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் நாளை இடம்பெறவிருக்கிறது. பாராளுமன்றம் இம்மாதம் 10ஆம் திகதி வரை கூடவிருக்கிறது.  

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இயற்கை விவசாய நடவடிக்கை ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இயற்கையான முறையிலமைந்த அலுவலக உணவுப் பயிர் தோட்டத்தினை அமைக்கும் நிகழ்வு இன்று(06) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது. ஓன்றாக வளர்வோம் : நாட்டை வெல்வோம் – உணவுப் பயிர் உற்பத்திப் போர் 2022″ எனும் தொனிப்பொருளில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது விவசாய போதனாசிரியர்களால் அனைத்து அலுவலர்களுக்கும் பயிர்ச் செய்கை செயன்முறைகள் தொடர்பான விளக்கவுரைகள் வழங்கப்பட்டன. இயற்கை உரம் தயாரித்தல், பைகளில் பயிரிடுவதற்கான மண் , நாற்று மேடை … Read more