சம்பியன்ஸ் உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பம்

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் சம்பியன்ஸ் லீக் தொடர் நேற்று (03) ஆரம்பமானது என இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் தெரிவித்துள்ளது. சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடர் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 3 வருட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் நேற்று (3) ஆரம்பமானது. இந்த போட்டி தொடர் கடந்த மே மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது. எனினும், நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் பிற்போடப்பட்டன. இந்நிலையில் இன்று (4) … Read more

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்றை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி வெளியிட்டுள்ளார். அதன்படி சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்  யாழில் 5000 ரூபா கொடுப்பனவு … Read more

மாத்தறை மாவட்டத்தில் போர் வீரர்களுக்கு செயற்கை கால்கள்

நாட்டிற்காக தமது உடல் உறுப்பை தியாகம் செய்த மாத்தறை மாவட்டத்தில் உள்ள போர்வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு மாத்தறை மாவட்ட செயலாளர், சட்டத்தரணி வை.விக்ரமசிறி தலைமையில் மாத்தறை மாவட்ட செயலக காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நேற்று (03) இடம்பெற்றது. செயற்கை உறுப்புகள் உட்பட ஏனைய பொருட்கள் போர் வீரர் சேவைகள் அதிகார சபையினால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் திருமதி லக்மாலி தேனுவர மற்றும் மாத்தறை மாவட்ட போர்வீரர்கள் மற்றும் அவர்களது … Read more

மாத்தளையில் ஆதரவற்ற குடும்பத்திற்கு தையல் இயந்திரம்

மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்னவின் பணிப்புரையின் பேரில், மாவட்ட செயலக ஊழியர்களின் உதவியுடன் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு ஜுக்கி தையல் இயந்திரம் அண்மையில் பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டது. சமூக சேவை உத்தியோகத்தர் தர்மரத்ன ,ஆதரவற்ற குடும்பத்தை அடையாளம் கண்டதையடுத்து இந்த குடும்பத்திற்கான ஜுக்கி தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாத்தளை மாவட்ட மேலதிக செயலாளர் நிஷாந்த கருணாதிலக மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஏற்படும் மற்றொரு சிக்கல் நிலை

முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்துள்ள நிலையில், சத்துணவு தொடர்பில் இலங்கையில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முட்டை, கோழி இறைச்சி மற்றும் திரவ பால் கொள்வனவு வெகுவாக குறைவடைந்து வருவதாக விவசாயத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  மூலப்பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என அதன் செயலாளர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.  இலங்கையில் ஏற்படப் போகும் மற்றுமொரு சிக்கல் … Read more

கொழும்பு மாவட்டத்தில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்படும்

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. அதன்படி, இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணிவரையான ஏழு மணித்தியால நீர் விநியோகத்தடை இடம்பெறவுள்ளது. எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான, மாதிவெல, தலப்பத்பிட்டிய, உடாஹமுல்ல, எம்புல்தெனிய மற்றும் நுகேகொடை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் jilgLk;.. இதேவேளை, கொழும்பு ஒன்று தொடக்கம் கொழும்பு 04 வரையும், … Read more

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை இன்று ஆரம்பம்

கொழும்பு கோட்டை – மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவை இன்று(04) பிற்பகல் தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகும் என ரயில்வே கட்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையிலான ரயில் இன்று பிற்பகல் 03.05ற்கு புறப்படும்.

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை

கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார். தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், சுகாதாரத்துறையில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, சுகாதார அமைச்சின் … Read more

19 வயகுக்குட்பட்டோருக்கான புதிய லீக் தொடர் இம்மாதம் ஆரம்பம்

19 வயகுக்குட்பட்டோருக்கான புதிய லீக் தொடர் இம்மாதம் ஆரம்பம் 19 வயதுக்குட்பட்ட வீரர்களை இலக்காகக் கொண்ட இளையோர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றை ஏற்பாடு செய்ய இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி இன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண போட்டி மற்றும் அதனைத் தொடர்ந்து இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியைத் தயார்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டித் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. இப்போட்டித் … Read more

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் பிரதமரின் தீர்மானம்

எதிர்காலத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். கலந்துரையாடப்பட்ட விடயங்கள்  நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து முச்சக்கரவண்டி தொழிற்துறையை பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   Source link