அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்றி விருப்பம் – கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு

அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அந்தோனி அல்பானீஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பேணுவதற்கும், அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் புதிய பிரதமருடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித்தலைமையிலான கூட்டணி அதிக ஆசனங்களை வென்றுள்ளது. 151 ஆசனங்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கான … Read more

எரிபொருள் வரிசைக்கு முடிவு – அமைச்சர் வெளியிட்ட விசேட அறிவிப்பு

எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருளை பெறுவதற்கான நேரங்களை பொதுமக்களுக்கு வழங்க எரிசக்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் தாங்கிய லொறிகள் புறப்பட்டவுடன் மக்களுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அறிவிப்பை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். Since many have questioned – A notification SMS generated automatically is sent to the fuel station managers when the petroleum products are dispatched from … Read more

காஸ் விநியோக தகவல்களை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு விசேட செயலி 

காஸ் விநியோகம் மற்றும் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிற்றோ காஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செயலி எதிர்வரும் திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்படுமென்று லிற்றோ காஸ் நிறுவனத்தலைவர் விஜித ஹேரத் கூறினார். இதன் மூலம் நுகர்வோரும் விற்பனை முகவர்களும் குறித்த பிரதேசத்தில் பகிர்ந்தளிக்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்கள்

கொலன்னாவை பிரதேசத்தில் பேக்கரியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 காஸ் சிலிண்டர்களை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. வர்த்தகர் சந்தையில் நிலவும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை நுகர்வோர் அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்

உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடம் கொடுத்தார்கள் ஒரு பிரித்தானிய தம்பதியர். பத்தே நாட்களில் தன் மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, அந்த உக்ரைன் அகதியுடன் ஓட்டம் பிடித்துவிட்டார் அந்த பிரித்தானியர். இங்கிலாந்திலுள்ள Bradfordஇல் வாழும் Tony Garnett (29), Lorna (28) தம்பதியர், உக்ரைனிலிருந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த Sofiia Karkadym (22) என்ற இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், Sofiiaவைப் பார்த்த உடனே Tonyக்கும், Tonyயைப் பார்த்த … Read more

எரிபொருளை களஞ்சிய படுத்துபவர்களுக்கு எதிராக நாளை முதல் நடவடிக்கை

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்துபவர்களைக் கண்டுபிடிப்பதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுமென்று பொலிசார் அறிவித்துள்ளனர். இவ்வாறானவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கான பணிகளில் ஈடுபடுபவர்கள் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நாளை விசேட வேலைத்திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவுக்குள் பிரதமருக்கு எதிர்ப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தான் பிரதமராக பதவியேற்ற பின்னர், 5 பில்லியன் டொலர் கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க, பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கூறியிருந்தமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. எனினும் இதுவரை 5 பில்லியன் டொலர்களை மாத்திரமல்ல, டொலர்கள் எதனையும் நாட்டுக்கு கொண்டு வர பிரதமர் தவறியுள்ளதாக கூறியே பொதுஜன பெரமுனவுக்குள் இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more

திருகோணமலை,மட்டக்களப்பு மாவட்டங்களில் “டெங்கு” தீவிரம்

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு வீரியம் அதிகரிப்பு உயர் சிவப்பு வலயங்களாக திருகோணமலை,கிண்ணியா,மூதூர்,உப் புவெளி,குச்சவெளி முதலான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை பகுதியில் 203 பேரும், மூதூரில் 203 பேரும், கிண்ணியாவில் 77பேரும் ,உப்புவெளியில் 76பேரும்  டெங்கு நோயாளர்ளாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.கிண்ணியா சுகாதார பிரிவில் ஒருவர் டெங்கு நோய் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் இறந்துள்ளார். திருகோணமலை சுகாதார பணிமனையில் இன்று (21) … Read more

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு

மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ள வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமானது. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் வைபவ ரீதியாக இதனை ஆரம்பித்து வைத்தார். காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவின் சகல நடவடிக்கைகளும் இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக ஒவ்வொரு நோயாளருக்கும் தனித்தனியாக அட்டை சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகிறது. இதற்காக வெளி நோயாளர் சிகிச்சை பிரிவுக்கு வரும் நோயாளி யொருவர் தேசிய அடையாள அட்டை … Read more