கண்ணீரில் நனையும் முள்ளிவாய்க்கால் மண்! கதறியழும் உறவுகள் (Live)

முல்லைத்தீவு – முள்ளிவாய்காலில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 13 வருடங்களுக்கு பின்னரும் கண்ணீருடன் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  அத்துடன் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வரும் அதேவேளை முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறும் பிரதான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வடக்கு, கிழக்கினை சேர்ந்த பலரும் படையெடுத்து வருகின்றனர். இதேவேளை அப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.    Source link

சுற்றுலா பயணிகளின் திடீர் முடிவால் இலங்கைக்கு தொடரும் நெருக்கடி

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக முன்பதிவு செய்த பல வெளிநாட்டவர்கள் அதனை இரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியே அதற்கான காரணம் என கூறப்படுகின்றது. 35 முதல் 40 வீதமான வெளிநாட்டவர்கள் தமது முன்னைய முன்பதிவுகளை இரத்து செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்கா விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இதுவரை வந்த பெரும்பாலான வெளிநாட்டவர்கள் பெரிய அளவில் நெருக்கடியை சந்திக்கவில்லை என்றே இலங்கை வந்து சென்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சில வெளிநாட்டவர்கள் இலங்கையில் … Read more

இன்று முதல் மீண்டும் விஹார மஹாதேவி பூங்காவில் கொவிட் தடுப்பூசி

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் இராணுவ கொவிட் தடுப்பு தடுப்பூசி வேலைத்திட்டம் இன்று முதல் மீண்டும் செயற்படுத்தப்படும் என்று இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையான ஆறு நாட்களிலும காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார். 20 வயதுக்கு மேற்பட்டவர்களும்இ 4வது கொவிட் தடுப்பூசியைப் பெற விரும்புபவர்களுக்கும் இங்கு கொவிட் தடுப்பூசியைப் … Read more

பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பிய மகிந்த, நாமல் – குளிரூட்டப்பட்ட அறையில் சந்தேக நபர்கள்

கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கான பட்டியலில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்காமை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  இந்த சம்பவம் தொடர்பில் 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த 22 பேரின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமலின் பெயர் உள்ளடங்கவில்லை … Read more

இன்றும் (18) நாளையும் (19) பெட்றோல் விநியோகம் இல்லை : வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்

பெற்றோல் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களிலல் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளர். தற்போது எதிர் நோக்கப்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து பாராளுமன்றத்தில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இன்று மாலைக்குள் நாட்டில் உள்ள 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தொடர்ந்து டீசல் விநியோகம் செய்யப்படும். தற்போது பெட்ரோலுடனான கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இருப்பினும் அதனை கொள்வனவு செய்வதற்கு … Read more

டொலர் ஒன்றின் இன்றைய பெறுமதி

டொலர் ஒன்றின் விற்பனை  பெறுமதி 364.63ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.  இதேவேளை,  டொலரின் கொள்வனவு விலை 354.66 ரூபாவாக பதிவாகியுள்ளதாக  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Source link

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பாராளுமன்றத்துக்கு வருகை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்தார்.  இவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் சபை அலுவல்களில் கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

டான் பிரியசாத் கைது செய்யப்பட்டார்

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Source link

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஈகைச்சுடர் (Live)

கொழும்பு – காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகமவில் தற்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், யுத்தத்தின்போது காணமலாக்கப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை நினைவுகூரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கொழும்பில் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Source link

கொழும்பில் இன்று எதிர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள்

நாட்டின் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் இன்று எதிர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பாடசாலை நேர நிறைவின் பின்னர் பிற்பகல் 2 மணியளவில் இந்தப் போராட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே, கள்வர்கள் தேவையில்லை … Read more