சமுதித்த சமரவிக்ரம ஊடகவியலாளரின் வீட்டிற்கு வெகுஜன ஊடக அமைச்சர் விஜயம்

சமுதித்த சமரவிக்ரம சிரேஷ்ட ஊடகவியலாளரின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். பொலிஸ் மா அதிபரினால் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கான விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறியதுடன், 60 பொலிசாரை கொண்ட குழு ஒன்று CCTV காட்சிளை ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். நேற்று (14) தனிப்பட்ட முறையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீட்டுக்கு தான் சென்றதாக குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்பு … Read more

யாழில் 70 வயதில் முதுநிலை பட்டம் பெற்ற நபர் – பாராட்டும் தென்னிலங்கை மக்கள்

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பட்டம் பதிவிட்டுள்ளார். “எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார். வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. … Read more

மிகை வரி சட்ட மூலத்தில் ETF, EPF நீக்கப்படும்

மிகை வரி சட்ட மூலத்தில் ,ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன நீக்கப்படும் என்று நிதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான திருத்தம் பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர் தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சரினால் சமர்பிக்கப்படும் என்றும் … Read more

இலங்கை சீனாவிற்கு சொந்தமாக மாறும் அபாயம்!! செய்திகளின் தொகுப்பு

இன்னும் 10 வருடங்களின் பின்னர் கொழும்பு மாத்திரமல்ல, முழு நாடும் சீனாவிற்கு சொந்தமாக மாறி விடும் என தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ கூறியுள்ளார். அதிகரிக்கும் சீனப் பிரசன்னம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன், நமது நாட்டின் உள்நாட்டு வளங்களை சீனா பறித்து நம்மை கடனில் தள்ளியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு, Source … Read more

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள்

அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள் என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில் வெளிவிவகாரம், … Read more

இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடு

நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் அரிசி, தேங்காய் மற்றும் மஞ்சள் என்பனவற்றை கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சதொச விற்பனை நிலையங்களில் இவ்வாறான பொருட்கள் கணிசமான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எனவே மக்கள் அவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். “சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக தனிநபர் ஒருவர் ஒரே … Read more

விசேட சலுகை விலையில் லங்கா சதொச தண்ணீர் போத்தல்கள்

அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களுக்கு லங்கா சதொச தண்ணீர் போத்தல்களை விசேட சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இவ்வாறு விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல் ஒன்றை மீள ஒப்படைக்கும் போது ஏற்கனவே அறவிடப்பட்ட 10 ரூபா மீள செலுத்தப்படும். இதற்கமைவாக 19 ரூபாவுக்கு 500 மில்லி லிட்டர் தண்ணீர் போத்தலை அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை லங்கா … Read more

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களுக்கு அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் மீண்டும் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அடையாளம் காணப்படும் அனைத்து கோவிட் நோயாளிகளும் ஒமிக்ரோன் வகையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒமிக்ரோன் ஆபத்தான நோய் அல்ல என தவறான கருத்து உள்ளதாகவும் ஆபத்தான நிலைக்குள்ளான நோயாளிகளும் உள்ளனர். ஆபத்துக்குள்ளானவர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் கோவிட் … Read more

இந்தியப் பிரதமரின் வடபகுதி கரிசனை! பலாலியில் களமிறங்கவும் திட்டம்: செய்திகளின் தொகுப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க பயணம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடி இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு செல்ல திட்டமிடுவதான செய்திகள் வெளிவந்துள்ளன. பீம்ஸ்ரெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், பிரதமர் மோடியின் இந்தப் பயணம் குறித்து இந்தியத்தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்களை வெளியிடவில்லை.  இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது … Read more