மிகை வரி சட்ட மூலத்தில் ETF, EPF நீக்கப்படும்

மிகை வரி சட்ட மூலத்தில் ,ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன நீக்கப்படும் என்று நிதி அமைச்சர் வழங்கிய உறுதிமொழி தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக வர்த்தக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இதற்கான திருத்தம் பாராளுமன்ற விவாதத்திற்கு பின்னர் தெரிவுக்குழு சந்தர்ப்பத்தில் நிதியமைச்சரினால் சமர்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ இது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.

5 சதவீத மிகை வரியில் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 11 நிதியங்கள் உள்ளடங்காது .

2020ஆம் 2021ஆம் ஆண்டுகளுக்காக இரண்டாயிரம் பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரியை அறவிடக் கூடிய வருமானம் ஈட்டும் நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் ஒரு தடவை மாத்திரம் அறவிடும் 25 சதவீத மிகை வரியை அறவிடுவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் பத்தாயிரம் கோடி ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் உட்பட 11 நிதியங்களை இதில் சேர்ப்பதற்கு ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என நிதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.