ரதல்ல வீதி விபத்து: ஆத்மசாந்திக்கான சர்வ மத பிரார்த்தனை

நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான சர்வ மத பிரார்த்தனை நாளை (27) நுவரெலியா மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது. மகா சங்கத்தினரின் தலைமையிலான சர்வ மதத்தலைவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வ மத பிரார்த்தனை நடைபெறவுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலப்பட இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.  

சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்கவின் முறைப்பாடு:பொலிஸ் விசாரணை

சிரேஷ்ட ஊடகவியலாளர்மொஹான் சமரநாயக்கவின் முறைப்பாட்டின்படி, விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆனந்த பாலித மற்றும் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் இருந்தபோதிலும் ஒரு அரச அதிகாரியின் கடமைகளில் தலையிடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என்று  … Read more

மின்சாரக் கட்டணத் திருத்தம்: எவ்வித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அதன் உறுப்பினர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இராஜினாமா செய்துள்ளார். அதன் தலைவர் தனியாக தீர்மானங்களை எடுக்க முடியாது. நேற்று (25) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மொஹான் சமரநாயக்கஇதுதெடர்பாக மேலும் தெரிவிக்கையில் மின் கட்டண திருத்தம் … Read more

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த அவசியமான நவீன தொழில்நுட்பத்தை இந்நாட்டின் தொழில்துறைகளில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவிப்பு

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் … Read more

சூர்யகுமார் யாதவுக்கு, ஐ.சி.சியின் 2022 சிறந்த T 20 கிரிக்கெட் விருது

2022 ஆம் ஆண்டின் சிறந்த T 20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருது ,இந்திய அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ்க்கு வழங்கப்பட்டுள்ளது. வீரர் சூர்யகுமார் யாதவ் 2022 ஆம் ஆண்டில் 31 ரி 20 போட்டிகளில் விளையாடி 1164 ஓட்டங்கள் பெற்றுள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ஓட்டங்களை எடுத்துள்ளார். ஒரு ஆண்டில் ரி 20 சர்வதேச போட்டிகளில் இந்திய துடுப்பாட்ட வீரர் ஒருவர் 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தமை இதுவே முதல் … Read more

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 74 ஆவது குடியரசு தின விழா இன்று (26) கொண்டாடப்படுகின்றது. குடியரசு தினத்தையொட்டி இன்று டெல்லி கடமையின் (முன்பு ராஜபாதை) பாதையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இந்திய அரசு சார்பில் குடியரசு தின விழா ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் … Read more

ரயில் மூலம் ,மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகள், பழங்கள்

மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைவாக மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கு மரக்கறிகள் மற்றும் பழங்களை ரயிலில் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஹாலிஎல, ஒஹிய, அம்பேவெல, பட்டிபொல, நானுஓயா போன்ற புகையிரத நிலையங்களை மத்திய நிலையமாக கொண்டு , தனியார் துறை நிறுவனங்களின் பங்களிப்புடன் மலையகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறிகள் … Read more

யாழில் நடைபெற்ற இந்திய குடியரசுதின நிகழ்வுகள் (Photos)

இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் யாழ்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்றுள்ளது. இன்று (26.01.2023) நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றுள்ளது. இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்துள்ளார்.  இந்திய குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இதனைத் தொடர்ந்து, இந்திய குடியரசு தலைவருடைய சிறப்புரையை இந்தியத் துணைத் தூதுவர் வாசித்துள்ளார். மேலும், குடியரசு தின சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இந் நிகழ்வில் அதிகாரிகள், … Read more

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதினால் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என, பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும்; புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் … Read more