1,000 ஓட்டங்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சாதனை

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 1,000 ஓட்டங்களை கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுற்றுலா நியூசிலாந்து அணிக்கு எதிராக முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் இரட்டை சதத்தால் இந்திய அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. … Read more

நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம்! வெளியான தகவல்

நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு மற்றும் நீண்ட எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் வரிசைகள் ஏற்படும் அபாயம் அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். மேலும், மின் உற்பத்திக்காக வாரியம் பெற்ற எரிபொருளை செலுத்தாவிட்டால், … Read more

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்கு பொன்டெரா நிறுவனத்தால் 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மா

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 70,000 குடும்பங்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ‘உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான தேசிய கூட்டுப் பொறிமுறை’ ஊடாக 174 மில்லியன் ரூபா பெறுமதியான பால்மாவை பெற்றுக் கொடுக்க பொன்டெரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டன் (Michael Appleton) உள்ளிட்ட அதிகாரிகள் இப்பால்மாவை நேற்று முன்தினம் (17) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாக கையளித்தனர். நாடுமுழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள பொருளாதார … Read more

தேசிய இளைஞர் படையணி இளைஞர்களுக்காக, ஜனாதிபதி முன்னெடுத்த தொலைநோக்கு வேலைத்திட்டத்தில் மற்றொரு பணியாகும் – பிரதமர்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்தபோது திறமையும் ஆளுமையும் நிறைந்த இளைஞர் தலைமுறையை உருவாக்குவதற்காக முன்னெடுத்த தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே தேசிய இளைஞர் படையணி என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தேசிய தலைவர்களை உருவாக்குவதற்கான தேசிய இளைஞர் படையணி முன்னெடுக்கும் வேலைத்திட்டம் பாராட்டுக்குரியது என்றும் பிரதமர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம்(17) நடைபெற்ற தேசிய இளைஞர் படையணியின் வருடாந்த கலை விழா மற்றும் பரிசளிப்பு … Read more

வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி! (Photos)

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமி பிணையில் செல்ல அனுமதி வழங்கி  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.  வேலன் சுவாமிகளுக்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன், சட்டதரணி சுகாஸ் ,சட்டத்தரணி மணிவண்ணன்,சட்டத்தரணி சிவஸ்கந்த சிறி ஆகியோர் மன்றில் முன்னிலையாகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்த வேளை, எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகளை யாழ்ப்பாண … Read more

உக்ரைனில் திடீரென விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்! 16 பேர் பரிதாபமாக பலி

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். உள்துறை அமைச்சர் டென்னிஸ் மொனாஸ்டிர்ஸ்கி உயரதிகாரிகளுடன் பயணித்த அரசு ஹெலிகாப்டர் ப்ரொவாரி நகரிலுள்ள மழலையர் பள்ளி அருகே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உள்துறை அமைச்சர் மொனாஸ்டிர்ஸ்கி, துணை அமைச்சர் யெனின், உள்துறை செயலாளர் லுப்கோவிச், 2 பள்ளி குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 15 பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, … Read more

தேர்தல் செலவின வரம்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை…..

தேர்தல் செலவு மட்டுப்படுத்தல் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்கவே அன்றி அதனை சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு பொது நிறுவனங்கள் குழு தீர்மானிக்கவில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆளும் கட்சி இவ்வாறான சட்டமூலங்களை கொண்டுவரும் போது எதிர்க்கட்சிகள் இரு கைகளையும் உயர்த்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார் தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்த கூற்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் … Read more

சிறுநீரக கடத்தல் சம்பவம்

  சிறுநீரக கடத்தல் சம்பவம் பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவரும், வெல்லம்பிட்டிய … Read more

வேலன் சுவாமியின் கைதை கண்டிக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன்

“இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தான் கண்டிப்பதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவி்ட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.  அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது மனிதனின் அடிப்படை உரிமை எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.  I agree with Human Rights Watch’s recent assessment … Read more

நிர்வாக இடைஞ்சலால் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடன் நியமனம் வழங்குக! சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

நிர்வாக இடைஞ்சலால் வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலை வழங்குங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.  நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  நிர்வாக இடைஞ்சல் காரணமாக 60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிய திட்டத்தில் இருந்து 465 பட்டதாரிகள் வெளியேறியுள்ளனர். இது தொடர்பில் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்துக்கும், சம்பந்தப்பட்ட விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கும் அறிவித்த போதும் உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த 2023 ஆம் … Read more