முட்டைக்கான ஆகக்கூடிய விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி இடைநிறுத்தம்
முட்டைக்காக ஆகக்கூடிய விலை நிர்ணயித்து நுகர்வோர் சேவை அதிகார சபையினால், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை இடைநிறுத்துவதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதேவேளை ,முட்டைக்கான ஆகக்கூடிய விலையை நிர்ணயிக்குமாறு அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு நேற்று (14) கவனத்தில் கொள்ளப்பட்டதை அடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனு இன்று (15) மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.