அரச ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் ஊழல், முறைகேடுகளை விசாரிப்பதற்கு விசேட பிரிவு
அமைச்சின் ஊழியர்கள் அல்லது அதிகாரிகளினால் ஊழல், மோசடி அல்லது முறைகேடுகள் மேற்கொள்ளப்படடிருந்தால், அல்லது அது குறித்து தகவல் தெரிந்திருந்தால், குற்றப்குலனாய்வுப் பிரிவுக்கு நேரடியாக எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்; ஊடக வியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். … Read more