சுயாதீன ஆணைக்குழு விரைவில் நியமிக்கப்படும்

சுயாதீன ஆணைக்குழு விரைவில் நியமிக்கப்படும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இவற்றுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் சபாநாயகர் கூறினார். சுயாதீன ஆணைக்குழு தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரையாடலின் போது சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கோட்டா – மகிந்த சகோதரர்கள் போல் நாம் இருக்க மாட்டோம்! நாடாளுமன்றத்தில் சாணக்கியன் உறுதி (Video)

எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்விற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, தடைகளுக்கு மத்தியில் எம் உறவுகளை நாங்கள் நினைவுகூருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (21.11.2022) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.  பேனா பறிக்கப்பட்டு ஆயுதம் வழங்கப்பட்டது மேலும் தெரிவிக்கையில், எமது மண்ணுக்காகவும், … Read more

பேருவளையில் 'பேரலைகளின் சக்தி' – பேரலைகளை கடந்த அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் சர்வதேச தினம்.

பேரலைகள் போன்ற சவால்களை முறியடித்த அமைச்சர் டக்ளஸின் தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப் பொருளில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். மேலும், நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள காலகட்டத்தில் சவால்மிக்க பொறுப்பினை ஏற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆகியோரின் செயற்பாடுகளை பாராட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு கடற்றொழில் துறையிடமிருந்து கணிசமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். கடற்றொழில் சமூகத்தை … Read more

மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் உண்மைகளை தெளிவுபடுத்தி முதலீட்டாளர்களை ஊக்குவிக்க புதிய பொதி ஒன்றை தயாரிக்க வேண்டும்

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள முதலீட்டுப் பொதிகள் போதுமானதாக இல்லை என்றும், மத்திய வங்கி மற்றும் திறைசேரி என்பவற்றுக்கு உண்மைகளைத் தெளிவுபடுத்தி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் புதிய பொதியொன்றைத் தயாரிக்க வேண்டும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு முதலீட்டுச் சபைக்கு அறிவுறுத்தல் வழங்கியது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தலைமையில் அண்மையில் (15) நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இங்கு கருத்துத் தெரிவித்த … Read more

மல்லிப்பூ பாடலுடன் குளியலறையில் குத்தாட்டம் போட்ட குழந்தை! வைரல் வீடியோ

மூன்று வயது குழந்தையொன்று குளிக்கும் போது நடனமாடும் வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிறுமியின் குளியலறை நடனம் சமீபத்தில் சிலம்பரசனின் நடிப்பில் வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்திலிருந்து  “மல்லிப்பூ பாடல்” வைரலானது. இந்த பாடலுக்கு சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுமியொருவர் குளியலறையில் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையவாசிகளின் இதயத்தை கொள்ளையடித்துள்ளதுடன், இணையத்திலும் வைரலாகி வருகின்றது.   😊😊😊😊😘😘😘☺️😘😘😘😘😘 pic.twitter.com/d5k9y1yDjF — Dhushyanthi Francis (@DhushyanthiF2) November 21, 2022 Source link

புதிதாக இரண்டு நிலையியற் குழுக்களை அமைப்பது தொடர்பான நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் ……….

ஜனாதிபதியின் பிரேரணைக்கு அமைய அமைக்கப்படவுள்ள இரு குழுக்கள் தொடர்பான நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கையை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன  (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கமைய வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு மற்றும் பொருளதார உறுதிப்படுத்தல் பற்றிய குழுக்களின் அமைப்பு, பணிகள் மற்றும் அதிகாரங்கள் ஆகியன இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 16ஆம் திகதி நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு கூடி இந்த இரண்டு குழுக்களையும் நிறுவுவதற்கும், இது … Read more

கோப், கோபா, அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்கள்

அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) மற்றும் அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றில் பணியாற்றுவதற்காக தெரிவுக் குழுவினால் பெயரிடப்பட புதிய உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன  (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதற்கமைய, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) கடமையாற்றுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேக்கர மற்றும் கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிடிய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். அரசாங்கக் … Read more

எரிபொருளுக்கான QR பாவனை தொடர்பில் அமைச்சு வெளியிட்ட தகவல்

எரிபொருளுக்கான QR நடைமுறை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் அடுத்த மாதம் முதல் QR நடைமுறை நீக்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன. எனினம் அது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை என அமைச்சர தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் வரை QR முறை தொடரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு டொலர் கையிருப்பு இல்லாததால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து … Read more

சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஊடாக சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில்முயற்சிகளின் அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய அந்தத் துறைக்கு நிதி வழங்குவதற்கும் ஆதரவளிப்பதற்கும் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகப் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரமேஷ் பதிரண அண்மையில் குறிப்பிட்டார். அண்மையில் இடம்பெற்ற கைத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தற்போதைய பொருளாதார நிலைமையில் சிறிய … Read more