கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று முன்தினம் (23) கலந்துகொண்டார். 59வது வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார். பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சந்தன மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை ஊவா மாகாண பிரதம சங்க நாயக்கவும் கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் விஹாராதிபதியுமான மஹரகம நந்தநாயக்க தேரர் மற்றும் உடவௌ … Read more

உயர்கல்வி இராஜாங்க அமைச்சரை பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சந்திக்க முடியும்

நாளை  26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை  உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவனை சந்திக்க முடியும். பொதுமக்கள் சந்திப்பதற்கு முன்னதாக 011 2687 637 / 011 2687 510 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அல்லது Book an Appointment  என்ற லிங்க் (Link ) ஊடாக இதற்கான முன் பதிவுகளை செய்து கொள்ள வேண்டும்.

இலங்கையில் சுற்றுலா துறையை மேம்படுத்த இந்தியாவில் “தெரு நிகழ்ச்சிகள்”

இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சு ,இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ச்சியான தெரு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. தெரு நிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவுடன் இணைந்து இரு தரப்பு உறவுகளையும், கலாச்சாரத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறையினை மேம்படுத்த முடியும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்நிகழ்ச்சிகளை 2022 செப்டெம்பர் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது நிகழ்ச்சி செப்டம்பர் 26 ஆம் திகதி புதுதில்லியில் உள்ள தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும். அதைத் … Read more

பதினொரு (திருத்தச்) சட்டமூலங்களை இரண்டாம் மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நீதி அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி  

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் பதினொரு சட்டமூலங்கள் மற்றும் நான்கு ஆண்டறிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அபாயகரமான விலங்குகள் (திருத்தச்) சட்டமூலத்தில் தண்டப்பணத்தொகையை ஆயிரம் ரூபாவிலிருந்து இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரும் ரூபாவரை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதுடன், சிறுவர் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தச்) சட்டமூலத்தில் சிறுவர்கள் என அழைக்கப்படும் வயது எல்லையை பதினாறிலிருந்து பதினெட்டாக அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ளது. … Read more

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்க குறுகிய காலத்தில் வேலைத்திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர

மயில், குரங்கு உள்ளிட்ட விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கு குறுகிய காலத்தில் பிரயோகரீதியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக கமத்தொழில் அமைச்சர் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தெரிவித்தார். கமத்தொழில் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டம் அண்மையில் (20) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வனவிலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பில் குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியயமைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் … Read more

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு) மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (22) பி.ப 12.30 மணி வரை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 1982ஆம் ஆண்டு 06ஆம் இலக்க இலங்கைத் தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தின் ஊடாக சட்டத்தின் மூன்றாவது பிரிவு திருத்தப்படுகிறது. இதன் ஊடாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உள்ளடக்கம் (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) மாற்றப்படுகிறது. இதன்படி கூட்டுத்தாபனத்தின் எண்ணிக்கை (பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை) 07 … Read more

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை குறித்து புதிய சுற்றறிக்கை

அரசாங்க உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (26) சுற்றறிக்கையை வெளியிடக்கூடியதாக இருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்தார். பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்லும்போது சேலை அல்லது அலுவலகத்திற்கு பொருத்தமான ஆடையொன்றை அணியலாம் என்று ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால் இந்த சுற்றறிக்கை … Read more

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரோஹினி கவிரத்ன தெரிவு

சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் புதிய தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன  (21) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவருடைய பெயரைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார். இதன் இணை உப தலைவர் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே நியமிக்கப்பட்டதுடன், இவருடைய பெயரை கௌரக ரோஹினி கவிரத்ன முன்மொழிந்ததுடன், கௌரவ கின்ஸ் நெல்சன் வழிமொழிந்தார். மற்றுமொரு இணை உபதலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வேலுகுமார் நியமிக்கப்பட்டார். … Read more

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள்,தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு உயர்பதவிகள் குழுவின் அனுமதி

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (20) வழங்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அதற்கமைய, ஜப்பானுக்கான புதிய தூதுவராக ரொட்னி மனோரஞ்சன் பெரேராவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக பீ.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராக பி.எச்.சி. ரத்நாயக்க மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக … Read more