சிறைச்சாலையில் கையடக்கதொலைபேசி: தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தானிஷ் அலிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் கையடக்கதொலைபேசியை பயன்படுத்திய குற்றத்திற்காக இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முன்னிலையில் சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி, அவருக்கு 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். 2022.07.27 கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த தானிஷ் அலி என்று குறிப்பிடப்படும் குறித்த சந்தேகநபர், … Read more

இரண்டு நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது! வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  இன்றைய தினத்திற்கான மின் துண்டிப்பு இதேவேளை இன்றைய தினம் ஒரு மணிநேரம் மட்டுமே மின் துண்டிப்பு செய்யப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது. நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் … Read more

வங்கிக் கடன்கள், வரிச்சலுகை உள்ளிட்ட பல நிவாரணங்கள்! அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினருக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினர் தமது உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான டொலரைப் பெற்றுக் கொள்ளவும், உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யவும் மற்றும் வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் விடுத்துள்ள வேண்டுகோளைக் கவனத்தில் கொண்டு அதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கு கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அமைச்சரவைப் பத்திரிமொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அனுமதி அமைச்சரவையினால் … Read more

மின் துண்டிப்பு இன்று ஒரு மணி நேரத்திற்கு வரையறை

மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் மற்றும் நீர் இல்லாத காரணத்தினால் சுமார் ஒரு மாத காலமாக அமுல்படுத்தப்பட்ட 3 மணிநேர தொடர்ச்சியான மின் துண்டிப்பு இன்று (5) ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் திரு.ஜனக ரத்நாயக்க நேற்று (4) தெரிவித்தார்.

கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான பல ரயில் சேவைகள் இரத்து

மலையக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் இடம்பெறவிருந்த பல ரயில் சேவைகள் இன்று(05) இரத்து செய்யப்பட்டுள்ளன. நாவலப்பிட்டி மற்றும் ஹட்டனுக்குமிடையிலான ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவே இதற்கு காரணம். இதற்கமைவாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு காலை 5.55மணி, 8.30மணி மற்றும் 9.45 மணிக்குக்கு சேவையில் ஈடுபடவிருந்த ரயில்களும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காலை 5.45மணி, 8.30மணி மற்றும் 10.15மணிக்கு புறப்படவிருந்த ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்ட காரர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்

காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள அனுமதியற்ற நிர்மாணங்கள் மற்றும் பயிர் செய்கை முதலானவற்றை அகற்றுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. கோட்டைப் பொலிசார் நேற்றுமுன்தினமும் நேற்றிரவும் இந்த பகுதிக்கு சென்று  இவற்றை பார்வையிட்டதுடன் போராட்டக்காரர்களுக்கு இது குறித்து அறிவித்தனர். அத்துடன், நாட்டில் தற்போதுள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் கோட்டை பொலிஸார் மேலும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த அறிவுறுத்தல்களை … Read more

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள துப்பாக்கி கலாசாரம் – இரண்டு மாதங்களில் 23 பேர் பலி

இலங்கையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இன்று வரை 23 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ள துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் மொத்தம் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா தெரிவித்தார். போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணியில் இருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார். நேற்றைய தினம் மாத்திரம் … Read more

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளேட்டன் (3) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையில் நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இலங்கை இராணுவத்தினருக்கான … Read more

இலங்கை வரும் சீன ஆய்வு கப்பலால் இந்தியா கவலையடைவது ஏன் – 10 காரணங்கள்

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறன் கொண்ட சீன ஆய்வு கப்பல் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ள நிலையில், இது இந்தியாவில் பாதுகாப்பு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகையுடன் தொடங்கிய தைவான் கடற்கரையில் சீன இராணுவ ஒத்திகையுடன் இந்த நடவடிக்கை ஒத்துப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது எச்சரிக்கையை மீறி மூத்த அமெரிக்க அரசியல்வாதி நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, தைவான் அருகே மிகப்பெரிய இராணுவ ஒத்திகையின் ஒரு பகுதியாக சீனா … Read more