8 இலட்சம் பெறுமதியுள்ள எரிபொருட்களுடன் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரம் இன்றி 8 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுள்ள எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (6) கல்முனை பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் சம்மாந்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை கட்டி எழுப்ப இந்தியாவில் இருந்து சுற்றுலா பயணிகள்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை கட்டி எழுப்பவும், வெளிநாட்டு அந்நிய செலவாணிகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலும், இந்தியாவிலுள்ள முக்கிய ஐந்து நகரங்களில் வீதி கண்காட்சிகளை இலங்கை நடத்த உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அழகிய கடற்கரைகள், குன்றுகள், அழகான கடலோர நகரங்களுக்கு பெயர் பெற்ற இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களிலும் மிக மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது எனவும், பொருளாதார சிக்கல்கள், கொவிட்-19 தொற்று நோய் என்பன காரணமாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது … Read more

வடக்கு – கிழக்கில் தரையிறங்க தயாராகும் இந்தியாவின் புதிய வியூகம் (VIDEO)

வடக்கு – கிழக்கில் இந்தியா பொருளாதாரத்தினை மையமாக பயன்படுத்தி காலூண்ட ஆரம்பித்துள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தோ – பசுபிக் சமுத்திரத்தில் இன்று ஏற்பட்டுள்ள கேந்திர முக்கியத்துவம் தமிழர் பகுதிகளுக்கும்,இந்தியாவிற்கும் சமமாக உள்ளது.இவற்றில் தமிழர் பகுதிக்கான பெறுமதி சிறியளவில் காணப்படுகின்றமையினால், இந்தியாவிற்கான பெறுமதியும்,கேந்திர தன்மையும் அதிகரித்துள்ளது. இந்த பெறுமதியை இந்தியா … Read more

எரிவாயு குறித்து பிரதமர்….

எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் தினமும் 112,000 எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த மாதம் 11 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை 33,000 மெற்றிக் டொன் எரிவாயு கிடைக்க உள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தற்போதைய … Read more

வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் அவதானம்

வடகடல் நிறுவனத்தின் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுதல் தொடர்பாக, குறித்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் மற்றும்  கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, ஆகியோருடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். இந்த சந்திப்பு இன்று (07) அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதேவேளை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்கள், ஒருநாள் மீன்பிடிப் படகுகளை செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை … Read more

கொழும்புக்கு செல்லும் மக்கள் சிந்திக்க வேண்டியது! அவசர அறிவுறுத்தல்(Video)

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலை தலைவிரித்தாடுகின்றது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கும், உணவுக்காகவும், எரிபொருள், எரிவாயு போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளவும் வரிசைகளில் காத்திருக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால் நாளுக்கு நாள் வரிசைகள் மாத்திரமே அதிகரிக்கின்றன, ஆனால் தீர்வு கிடைக்கப்பெறவில்லை. அரச, தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களும், போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பவர்களும், விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன், பலர் தொழிற்துறையை கைவிட்டுச் சென்றுள்ளனர். இந்தநிலையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொது போக்குவரத்துச் … Read more

காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கவும்

தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும் மற்றும் குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் தெரிவித்துள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை முகக் கவசம் அணியுமாறும், வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக மேலும் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்த நாட்களில் காய்ச்சல் ஏற்படுமிடத்து உடனடியாக மகப்பேற்று மற்றும் மகளிர் … Read more

வெயாங்கொட, களுத்துறை நகரங்களுக்கு இடையில் அடிக்கடி பயணிக்கக்கூடிய ரயில் சேவை

ரயில்வே துறையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனெவிரட்ன தெரிவித்துள்ளார். வெயாங்கொட, களுத்துறை நகரங்களுக்கு இடையில் அடிக்கடி பயணிக்கக்கூடிய ரயில் ஒன்று விரையில் சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கிறது. பல்வேறு பகுதிகளிலும் இரட்டை ரயில் பாதைகள் காணப்பட்டாலும், சில இடங்களில் ஒன்றை வழி ரயில் பாதை மாத்திரமே காணப்படுவதாகவும், இதனால், புதிய ரயில்களை சேவையில் ஈடுபடுத்தும் போது, நெரிசல்நிலை ஏற்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் தற்சமயம் கூடுதலாக ரயில்களை பயன்படுத்துவதால், அலுவலக ரயில்களில் அதிக … Read more

கடவுச்சீட்டு வரிசையில் காத்திருப்பவர்களுக்கு அவசர அறிவிப்பு!

அத்தியாவசிய காரணங்களுக்காக தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக  கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நேரத்தில் வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் பந்துல ஹரிஷ்சந்திர, இதனை குறிப்பிட்டுள்ளார்.  அவசியமின்றி வரிசையில் நிற்காதீர் இந்த நேரத்தில், அத்தியாவசிய தேவையின்றி வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் அத்தியாவசி தேவை கருதி வருபவர்கள் தங்களுக்கான  வாய்ப்பை இழக்கிறார்கள். எனவே, மிகவும் அவசியமானால் தவிர, இந்த நேரத்தில் வரிசையில் … Read more

போலி இரத்தினக் கற்களை விற்பனை செய்த நபர் கைது

போலி இரத்தினக் கற்களை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவரை எம்பிலிபிடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் இருந்து இரத்தினக் கற்களாக வடிவமைக்கப்பட்ட கற்கள், இரத்தினக்கற்களைப் பரிசோதிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி என்பன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எம்பிலிபிட்டிய, மொரகட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் . சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளம் ஊடாக சந்தேக நபர் மோசடி வியாபாரத்தை செய்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் முதல் … Read more