இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கி காலி முகத்திடலில் போராட்டம்(video)

காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக  வைக்கப்படுகின்றது.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள்  ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. எனினும், கடந்த சில … Read more

பெருநாள் முழுவதும் மண்ணெண்ணெய் தேடி அலைவதிலேயே முடிந்தது: சலிப்பின் உச்சத்தில் முஸ்லிம் மக்கள்

நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான முறையில் சந்தோசமாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை; மண்ணெண்ணெய் தேடி அலைவதிலேயே பெருநாள் முடிந்தது என இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.  அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மண்ணெண்ணெய்யுமில்லை, எரிவாயுவுமில்லை. இதனால் நோன்பின் இறுதி நாளை சிறப்பாகக் கொண்டாட முடியவில்லை. நோன்பு காலத்தில் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் தேடி அலைந்தோம். போதாமைக்கு மின்சாரமுமில்லை. உணவை சமைத்துக் கொள்ள முடியாமல் உள்ளது. இதற்குமேல் பட்டினிதான். பொருட்கள் … Read more

துரிதமான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம் காண்பதில் அரசாங்கம் கூடுதல் கவனம்

முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளம்; காண்பதற்காக உப குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 10.  துரித முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காணல் நாட்டில் தற்போது நிலவுகின்ற வெளிநாட்டு செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக துரிதமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான முதலீட்டு வாய்ப்புக்களை அடையாளங் காண்பதற்காக கீழ்வரும் அமைச்சர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா அவர்கள் வெகுசன ஊடக அமைச்சர் … Read more

மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் நிலை! கதறும் இலங்கை மக்கள் (Video)

இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும் காலகட்டம் வரும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் துயரத்தினை சந்தித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். விண்ணை முட்டும் விலைவாசியால் வசதிப்படைத்த செல்வந்தர்களே திக்குமுக்காடி நிற்கும் பொழுது சாதாரண மற்றும் அடிமட்ட மக்களின் நிலை சொல்லி அறிய வேண்டியதில்லை. நாளுக்கு நாள் வாழ்வா சாவா என்ற போராட்டத்தையே அடிமட்ட மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். … Read more

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் கௌரவ பிரதமரினால் இணையத்தில் வெளியிடப்பட்டது

மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியன கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (03) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து இணையத்தில் வெளியிடப்பட்டது. தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நாட்டின் கலாசாரம் தொடர்பில் பிரசாரம் செய்வதும், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். மத்திய கலாசார நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ccf.gov.lk இல் அணுகலாம் மற்றும் “எங்கள் பாரம்பரியம்” (“අපේ උරුමය”) (Our heritage) என்ற புதிய யூடியூப் … Read more

நுரைச்சோலை மின்நிலைய நிலக்கரி கையிருப்பின் நிலை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு போதியளவு நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவில் இருந்து இரண்டு மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தை இந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை இயக்குவதற்கு இந்த நிலக்கரி இருப்பு போதுமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  Source link

“மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு

“மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு “என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள  வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புனித ரமழான் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி வருமாறு: நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள், அவர்களின் நம்பிக்கையின்படி ஈதுல் பித்ர் எனும் நோன்புப்  பெருநாள் தினத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.  நீங்கள் எதிர்பார்க்கும் … Read more

மதுவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  மதுவரித் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமார சிங்க நிறுவனங்களுக்கு  இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில்  அவர் மேலும் தெரிவிக்கையில்,  திருத்தப்பட்ட விலை இன்மையால் மதுபானசாலைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் மதுவரித் திணைக்களத்திற்கு சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் அது தொடர்பான … Read more

நெருக்கடி நிலையில் எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், எவரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (03) காலை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி தரப்பினரும் ,இப்போதைய சூழ்நிலையில் தேர்தலை வலியுறுத்த வில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ,புதிய அரசியலமைப்பு … Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு கொடுப்பனவு தொகை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.  இதற்கு அமைவாக சமுர்த்திஇ வயோதிப, சிறுநீரக மற்றும் வலுவிழந்தோர் கொடுப்பனவுகளைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு தொiகை பொதுவாக ரூபா 2500.00 வினால் அதிகரிக்கப்படுகிறது.   இதுதொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:   07. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி … Read more