சமூக வலைதளத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. சமூக வலை தளங்கள் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்திய காலம் மாறி, அதற்குள் சிக்கிக்கொண்ட மனநிலைக்குப் பலரும் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரீல்ஸ், ஷார்ட்ஸ் போன்ற குறும் வீடியோக்களில் இன்றைய தலைமுறை அதிக நேரத்தைச் செலவிடு வதால் கல்வி, வேலை, உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. உலகம் முழுவதும் மாணவர்கள் சுமார் 1-2 மணி நேரத்தில் 300-400 ரீல்ஸ்கள் பார்ப்பதாகவும், சராசரியாக ஒரு நபர் … Read more

இன்ஸ்டகிராமில் இந்தியர்கள் முன்னிலை

531 கோடி: 2025 ஏப்ரல் நிலவரப்படி உலக அளவில் 531 கோடி பேர் சமூக வலைதளத்தைப் பயன் படுத்துவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது உலக மக்கள் தொகையில் 64.7% பேர் சமூக வலை தளத்தைப் பயன்படுத்துகின்றனர். 15 கோடி பேர்: இந்தியாவைப் பொறுத்தவரை கல்வி, வேலைவாய்ப்புத் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கெனப் பிரத்யேகமாகப் பயன்படுத்தப் படும் ‘லிங்க்டுஇன்’ (LinkedIn) தளத்தைச் சுமார் 15 கோடி இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். 4 செயலிகள்: உலக அளவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலிகளின் பட்டியலில் … Read more

நாளை முதல் ரயில்வே புதிய விதிகள்: ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி?

How to link Aadhaar with IRCTC account: ரயில் பயணங்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது பயணிகள் தட்கல் டிக்கெட் மூலம் தங்களின் டிக்கெட்தாய் முன்பதிவு செய்துக் கொள்கின்றனர். இதன்படி பயணம் செய்யும் நாளுக்கு முந்தைய நாள் நாம் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது சாமானிய மக்களுக்கு மிகவும் கடினமான விஷயமாகும். பொதுவாக … Read more

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள், காணொளிகள், பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சமூக வலைதளத்தை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? இதைப் பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா? சமூகப் பொறுப்பு: யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகக் கணக்குகளில் எதை, எவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் என்பதில் தொடங்கி எதைப் பார்க்கக் கூடாது என்பதுவரை தனிநபர்தான் முடிவு … Read more

சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை – உஷாருங்க உஷாரு..!

வடிகட்டுங்கள்: நீங்கள் எந்தெந்தப் பக்கங்களை அல்லது யாரைப் பின்தொடர்கிறீர்கள் என்பதையும் உங்களை யாரெல்லாம் பின்தொடரலாம் அல்லது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடுங்கள். அதையும் மீறி தேவையற்றவை உங்கள் பக்கத்தில் தென்பட்டால், அவை குறித்துப் புகார் (ரிப்போர்ட்) செய்யுங்கள். வன்முறையைத் தூண்டும் விதத்திலோ தவறான சித்திரிப்புகளுடனோ தொழில்நுட்ப உதவியோடு பிறரைத் தொந்தரவு செய்ய முனைவோரை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள் (பிளாக்). பூட்டுப் போடுங்கள்: பொதுவாக எல்லாவிதமான சமூக ஊடகக் கணக்குகளிலும் ‘பிரை வசி … Read more

கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’

2020ஆம் ஆண்டுக்குப் பிறகு இணையவழி கல்வி என்பது பரவலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது வழக்கமாகி விட்டது. படிக்கவும், வாசிக்கவும், பொழுதுபோக்கவும் என எல்லா விஷயங்களுக்கும் திறன்பேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்க இன்ஸ்டகிராம், யூடியூப் போன்று சமூக வலைதளம் வழியே ஆக்கபூர்வமான விஷயங்களையும் கண்டிப்பாகச் செய்ய முடியும். என்ன செய்யலாம்? – ஒரே நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதுபோல சமூக வலைதளத்துக்கும் நன்மை, தீமை என இரண்டு பக்கங்கள் உண்டு. … Read more

BSNL அற்புதமான சலுகை.. வெறும் 1 ரூபாய்க்கு 1GB அதிவேக 4G டேட்டா

Amazing BSNL Offer: BSNL (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) சமீபத்தில் ஒரு ஃபிளாஷ் விற்பனையை அறிவித்துள்ளது. தற்போது அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த விற்பனையின் கீழ் ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி நேற்று அதாவது ஜூன் 28, தொடங்கி ஜூலை 1, 2025 வரை தொடரும். இந்த நேரத்தில், பயனர்கள் 4G அதிவேக டேட்டாவை மிகவும் மலிவான விலையில் பெறுவார்கள். டேட்டா வவுச்சர்களை வாங்கும் நுகர்வோருக்கு இது மிகவும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் … Read more

ஃபேஸ்புக் பயனர்கள் கவனத்துக்கு: போனில் உள்ள போட்டோக்களை ஸ்கேன் செய்யும் மெட்டா ஏஐ?

நியூயார்க்: மெட்டா நிறுவனத்தின் ஏஐ பிரிவான ‘மெட்டா ஏஐ’-க்கு ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் போனில் உள்ள புகைப்படங்களை அக்சஸ் செய்வதற்கான அனுமதியை வழங்கினால் ‘கிளவுட் பிராசஸிங்’ என்ற பெயரில் மொத்தமாக அந்த படங்களை ஸ்கேன் செய்து கிளவுடில் ஸ்டோர் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா நிறுவனம் தொடர்ச்சியாக அதன் பயனர்களின் பிரைவசி சார்ந்த விவகாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பயனர்களின் தரவுகளை கொண்டு தங்களது … Read more

மூத்த குடிமக்களுக்கான குட் நியூஸ்! சுகம்யா பாரத் செயலி அப்டேட் செய்த மத்திய அரசு

Sugamya Bharat App : இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இனி வரும் நாட்களில் சுகம்யா பாரத் செயலியைபயனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாட்பாட் தளம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான புதிய அறிவிப்புகள் அனைத்தும் … Read more

ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar address update : மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. மற்ற ஆவணங்களைக் காட்டிலும் அரசின் சேவைகளைப் பெற பிரதான ஆவணமாக ஆதார் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களால் முகவரியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் UIDAI-இன் myAadhaar போர்ட்டலை பயன்படுத்தி எளிதாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட … Read more