New Zealand beat Sri Lanka by 5 wickets | இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

பெங்களூரு: இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. நியூசிலாந்து அணியில் இஷ் சோதிக்கு பதிலாக பெர்குசன் இடம் பெற்றார். இலங்கை அணியின் ரஜிதா நீக்கப்பட்டு சமிகா கருணாரத்னே சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பவுலிங் தேர்வு செய்தார். … Read more

Hero Vida Electric – EICMA 2023ல் விடா V1 புரோ மற்றும் கூபே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

சர்வதேச சந்தைக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டை V1 புரோ ஸ்கூட்டர் மற்றும் வி1 புரோ கூபே என இரு மாடல்களை கொண்டு வருவதுடன் டர்ட் எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக இரண்டு இருக்கை அமைப்பினை கொண்ட வி1 புரோ ஸ்கூட்டரில் உள்ள ஒற்றை இருக்கையை நீக்கிவிட்டு கூபே வகையில் ஒற்றை இருக்கை மட்டும் வழங்கப்படதாகவும் கிடைக்க உள்ளது. Vida V1 Pro escooter வி1 புரோ ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல், … Read more

இறுக்கமான முகத்துடன் அமைச்சர் எ.வ.வேலு; `தீபாவளி சர்ப்ரைஸ்' எதிர்பார்த்து, அப்செட்டான விசுவாசிகள்!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில், ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் சல்லடைபோட்டுச் சோதனை நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். கடந்த 3-ம் தேதி தொடங்கிய இந்தச் சோதனை, 7-ம் தேதி இரவுதான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘வருமான வரித்துறையினர் மனஉளைச்சலை உருவாக்கிவிட்டனர். என்னைத் தொடர்புபடுத்தி விழுப்புரம், கோயம்புத்தூர், வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். கண்ணீர் … Read more

டிசம்பர் 4 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

டில்லி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. வ்ழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கி டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். தற்போது 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளன. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டிசம்பர் 4-ந்தேதி … Read more

India Files Appeal In Case Of 8 Navy Veterans On Death Row In Qatar | கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: மேல் முறையீடு செய்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கத்தாரில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்திய கடற்படையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உட்பட பல்வேறு சேவைகளை … Read more

`Please sit down; மோடி ஆட்சியில் இருந்து பாருங்கள்' – அமெரிக்கப் பாடகியைச் சாடிய பிரியங்கா சதுர்வேதி

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், `நான் பேசியது தவறாகச் சித்திரிக்கப்பட்டிருக்கிறது’ எனக் கூறி, மன்னிப்பு கேட்டுக்கொண்டார் நிதிஷ். இந்த நிலையில், பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றபோது, அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய அமெரிக்கப் பாடகியும், நடிகையுமான மேரி மில்பென், இந்தியாவின் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைக் கடுமையாகச் சாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேரி மில்பென் அதில், “பீகார் முதல்வரின் … Read more

பீகார் சட்டசபையில்  65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

பாட்னா பீகார் சட்டசபையில் 65% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக பீகாரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். இந்த விவரங்களை வெளியிட்ட பிறகு நிதிஷ்குமார், “பீகாரில் தற்போது அமலில் இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீடு 65 சதவிகிதமாக உயர்த்தப்படும்” என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு 30%-ல் இருந்து 43% … Read more

Visit of US Minister | அமெரிக்க அமைச்சர் வருகை

புதுடில்லி: இந்தியாவுடன், வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை குறித்த பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இன்று (நவ., 09) டில்லி வந்து சேர்ந்தார். புதுடில்லி: இந்தியாவுடன், வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை குறித்த பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இன்று (நவ., 09) டில்லி வந்து புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

`ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ'… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?!

ஸ்மார்ட்வாட்ச்சுகள் பல சந்தர்ப்பங்களில் உயிர் மீட்பராக செயல்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, இசிஜியை அளவிடும் ஸ்மார்ட்வாட்ச், அதனைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள 42 வயது நபர் பால் வாப்ஹம் (Paul Wapham), ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து காலை ரன்னிங் பயிற்சி செய்கையில், இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகி உள்ளது. Heart … Read more

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 15% குறைவு!வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  தொடங்கி உள்ள நிலையில், இதுவரை இயல்பை விட 15% குறைவாக மழை பெய்துள்ளது என  சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. மேலும், தமிழ்நாட்டின்  19 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  அக்டோபர் 21ந்தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, அவ்வப்போது சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து … Read more