Central government bans export of rice other than basmati rice | பாசுமதி அரிசி தவிர பிற வகை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பாசுமதி அல்லாத பிற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: உள்நாட்டில் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்து வதற்காகவும், நியாயமான விலையில் போதுமான அரிசி உள்நாட்டில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் , அரிசியின் சில்லறை விலை ஓராண்டிற்கு 11 சதவீதத்திற்கும் மேலாக இருப்பதால் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற நாடுகளின் … Read more

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2023 மார்ச் 23 ம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து … Read more

பேரிடியாக வந்த கருத்துக்கணிப்பு.. பாஜக ஷாக்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்

India oi-Noorul Ahamed Jahaber Ali போபால்: பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்கும் என லோக் போல் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. இதில் சத்தீஸ்கரில் வலுவான வெற்றியை காங்கிரஸ் பெற்றாலும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நூலிழையில் வெற்றிபெற்றது. மூன்று மாநிலங்களில் ஆட்சியை … Read more

மணிப்பூர் வன்முறை சம்பவம் – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை

புதுடெல்லி, மணிப்பூர் வன்முறை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்லும் நிலையில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. மணிப்பூரின் இந்த கொடூர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ நாடு முழுவதும் கடும் … Read more

சிறிய ரக விமானம் விழுந்து கொலம்பியாவில் 5 அரசியல்வாதிகள் மரணம்

கொலம்பியா சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் கொலம்பியாவில் 5 அரசியல்வாதிகள் உயிரிழந்துள்ளனர். சிறிய ரக விமானம் ஒன்று மத்திய கொலம்பியாவில் விபத்துக்குள்ளானதில் ஐந்து அரசியல்வாதிகள் மற்றும் ஒரு விமானி என 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் ஆவார்கள். சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அவர்கள் போயாகா துறையில் சான் லூயிஸ் டி காசினோ என்ற … Read more

பழனி முருகன் கோயிலில் இப்படி ஒரு மாற்றமா.. பக்தர்களுக்காக அசத்தல் திட்டம் அறிமுகம்

Tamilnadu oi-Velmurugan P பழனி: பழனி மலை முருகன் கோயிலுக்கு போறீங்களா.. இப்ப சூப்பரான மாற்றம் நடந்துள்ளது. முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு படத்துடன் இலவச டிக்கெட் தருவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தண்டாயுதபாணி சாமி கோவிலில் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதியை செய்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை முருகன் கோவில் அறுபடை வீடுகளில் பிரசித்தி பெற்றது. இங்குதான் கடைசியாக முருகன் வந்ததாக ஐதீகம் உண்டு. பழனி மலை முருகன் கோயில் தான் தமிழ்நாட்டின் … Read more

If Government Doesnt Act, We Will: Supreme Court On Manipur Horror | ‛‛அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் எடுப்போம்: மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: மணிப்பூர் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு, நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாங்கள் எடுக்க வேண்டி வரும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியதாவது: மணிப்பூர் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் மிகுந்த வேதனை ஏற்படுத்தியது. தற்போது அரசு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இது. அரசு … Read more

பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற கொடூர வீடியோ; மணிப்பூரில் என்ன நடக்கிறது…?- முழு விவரம்

புதுடெல்லி, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மூன்று முக்கிய இனக்குழுக்களான நாகா, குகி மற்றும் மைதேயி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் நாகா மற்றும் குகி இன மக்கள் பழங்குடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மைதேயி இன மக்கள் மணிப்பூரில் நாகா மற்றும் குகி இன பழங்குடி மக்கள் 40 சதவீதத்திற்கு மேல் வசித்து வருகின்றனர். பழங்குடி அல்லாத மைதேயி இன மக்கள் இம்பாலைச் சுற்றியுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் பெருமளவில் வசித்து வருகின்றனர். ஆனால் பழங்குடி மக்களான நாகா … Read more