மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மாநிலங்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி மணிப்பூர் விவகாரம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. மக்களவை இன்று கூடியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடியதும் மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை மீண்டும் வரும் திங்கட்கிழமை கூட உள்ளது. இதுபோல் மாநிலங்களவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மீண்டும் வரும் திங்கட்கிழமை காலை … Read more

`மோடி மீதும் ஒருநாள் ED நடவடிக்கை பாயும் என்பதை மறந்துவிடக் கூடாது!' – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, எதிர்க்கட்சிகளின்மீது தொடர்ந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றை ஏவிவருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன. டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர்கள், மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது உயர் கல்வித்துறை … Read more

மழைக் கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மருந்து கடைகளில் வலிநிவாரணிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு

டெல்லியில் மழைக்கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஆஸ்பிரின், ப்ரூபின், டைக்லோபினாக் உள்ளிட்ட வலி நிவாரணிகளை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட தொற்று காய்ச்சல் பரவிவருவதை அடுத்து மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் இந்த வகை மாத்திரைகளை விற்க வேண்டாம் என்று மருந்து கடைகளுக்கு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வகை மருந்துகள் ரத்த பிளேட்டிலெட்டுகளை மேலும் சிதைக்கக் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

கருப்பு கோட்! காரில் ஆயுதம்.. மம்தா பானர்ஜியின் வீட்டுக்குள் நுழைய முயன்ற நபர்.. யார் இவர்? ஷாக்

India oi-Nantha Kumar R கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டுக்குள் ஆயுதம், கஞ்சா உள்ளிட்டவற்றுடன் நுழைய முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் அந்த நபர் பற்றிய அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த தேசிய அளவில் கூட்டணி அமைப்பதில் மம்தா பானர்ஜி ஆர்வமாக … Read more

இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: மன்சுக் மாண்டவியா கடிதம்

புதுடெல்லி, தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் www.violation.reporting.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியுள்ளார். தினத்தந்தி Related Tags : மன்சுக் மாண்டவியா  Manchuk Mandavia 

Ola S1 Air escooter – ஜூலை 28., ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ₹ 1,09,999

வரும் ஜூலை 28 ஆம் தேதி ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் குறைந்த விலை S1 Air எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1,09,999 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. அதிகபட்ச வேகம் 95 கிமீ கொண்டுள்ள ஸ்கூட்டரின் IDC ரேன்ஜ் 125 கிமீ ஆக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுக சலுகை விலை ஜூலை 28 முதல் ஜூலை 30 வரை மட்டும் முன்பாக ஓலா ஸ்கூட்டர் மாடல்களை வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தற்பொழுது முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே ரூ.10,000 குறைவான விலையில் கிடைக்கும்.  … Read more

திருவையாறு: பெண்கள் வடம் பிடித்து இழுத்த ஐயாறப்பர் கோயில் தேரோட்டம்; பரவசத்தில் பக்தர்கள்!

திருவையாறில் பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெற்றது. இந்தத் தேரினை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுப்பது வழக்கம். அதன்படி ஏராளமான பெண்கள் திரண்டு ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கும் ஐயாறப்பர் கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். அப்பர் பெருமானுக்குக் கயிலைக்காட்சி கொடுத்த சிறப்பை பெற்ற இந்தக்கோயில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமானது. தேரை வடம் பிடித்து … Read more

தமிழக அரசு எம் எல் ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.351 கோடி விடுவிப்பு

சென்னை நடப்பு நிதியாண்டு எம் எல் ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்கு தமிழக அரசு ரூ..351 கோடி விடுவித்துள்ளது. இந்த 2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்ட ரூ.702 கோடியில் 50% நிதியை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி நிதி ஒதுக்க நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அந்த தொகையில் … Read more

உங்க வீட்டு பக்கத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்களா.. அருமையான விஷயம்.. உடனே சொல்லிடுங்க

Tamilnadu oi-Velmurugan P திருப்பூர்: தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள், மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகளின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் 1.20 கோடி நிதியினை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. … Read more

DY Chandrachud writes to Chief Justices after judge complains over train journey | சலுகைகளை தவறாக பயன்படுத்தக்கூடாது: நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை, மற்றவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுவெளியில் நீதித்துறை மீது விமர்சனம் ஏற்படுத்தும் வகையிலும் பயன்படுத்தக்கூடாது என அனைத்து மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடிதம் மூலம் அறிவுறுத்தி உள்ளார். உ.பி., மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் கவுதம் சவுத்ரி, இவர் கடந்த 14 ல் டில்லியில் இருந்து உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகருக்கு ரயிலில் சென்ற போது அசவுகரியம் … Read more