ஏப்ரல் 17: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 331-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 331-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டாலினைப் புகழும் அதிமுக தொகுதி மக்கள்- அப்படி என்ன செய்தார் ஸ்டாலின்?

Tamilnadu oi-Kadar Karay போளூர்: அதிமுக கைவசம் உள்ள சட்டமன்றத் தொகுதி போளூர். இத்தொகுதியின் எம்.எல்.ஏ ஆக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பதவி வகித்து வருகிறார். ஆளும் கட்சியின் தொகுதியாக இது இல்லை என்றாலும், முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் மின்துறை சார்ந்து பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது போளூர். ‘மாற்றான் தாய்’ மனப்பான்மை இல்லாமல் ஸ்டாலின் செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்து மகிழ்ந்து போய் உள்ளனர் இத்தொகுதி மக்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வரும் போளூரில் நெசவுதான் பிரதான தொழில். அதை … Read more

Vikram: அம்மா திறமையான அதிகாரி; செல்ல மகன் கென்னி; `தங்கலான்' விக்ரம் பெர்சனல் பக்கங்கள் இதோ!

நடிப்பின் எல்லைகளை உடைத்தெறிந்து தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட தங்கலான் விக்ரமின் பிறந்த தினத்தை முன்னிட்டு… சில தகவல்கள் இதோ! * எப்பவும் அம்மா செல்லம். அம்மா உயர் அதிகாரியாக இருந்தபோது அதிரடியாக செயல்பட்டு இருப்பதைப் பற்றி எப்பவும் பெருமையாகப் பேசுவார். கடத்தல் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளை ஒற்றை ஆளாக வழிமறித்துப் பிடிப்பதை அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரித்ததை எடுத்துச் சொல்லி பெருமைப்படுவார். * துருவ்வும், விக்ரமும் கிட்டத்தட்ட நண்பர்கள் மாதிரிதான். அப்பாவின் கண்டிப்பு அறவே கிடையாது. … Read more

சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு – ஆட்சேபம் தெரிவித்த துணை நிலை ஆளுநர்

புதுடெல்லி: சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளதற்கு துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். மதுபான கொள்கை முறைக்கேடு தொடர்பாக நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இந்நிலையில், இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, விதிகளை பின்பற்றமால் இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

மனைவி, குட்டியை விபத்தில் இழந்த சோகம்.. வாகன ஓட்டிகளை மட்டுமே கடிக்கும் ஆண் குரங்கு.. நடந்தது என்ன?

Tamilnadu oi-Vishnupriya R செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் ஆண் குரங்கு ஒன்று துரத்தி துரத்தி வாகன ஓட்டிகளை கடித்து தாக்கும் சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பூதூர் கிராமம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகளில் அதிகமான குரங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது கிராமத்திற்குள் உணவு தேடி வருவது வழக்கம். அந்த வகையில் வழக்கம் போல் சில குரங்குகள் உணவு தேடி கிராமத்திற்குள் வந்தன. அப்போது ஒரு குரங்கு குடும்பத்தில் இருந்த … Read more

Tata Nexon – டாடா நெக்ஸான் EV MAX டார்க் எடிசன் விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV MAX காரில் கூடுதல் வசதிகளை பெற்ற கருப்பு நிறத்திலான டார்க் எடிசன் விற்பனைக்கு ₹ 19.04 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்டிரியரில் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டு, #Dark பேட்ஜ் உடன் கூடி இருக்கை கொண்டுள்ள இந்த காரில் முதன்முறையாக நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் 10.25 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஹர்மானில் இருந்து பெறப்பட்ட உயர்தர எச்டி டிஸ்ப்ளே உடன் வயர்லெஸ் ஆப்பிள் … Read more

திருப்பதி தேவஸ்தானம் பெயரில் 40 போலி இணையதளங்கள்; போலி டிக்கெட்டுகள்; போலீஸில் புகார்; நடந்தது என்ன?

திருமலை திருப்பதி பெருமாளுக்கு நாடு முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறையேனும் திருப்பதிக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம். எனவே சாதாரண நாள்களிலேயே 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு வந்து தரிசனம் செய்வார்கள். விசேஷ மற்றும் விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தைத் தொடும். தற்போது கோடை விடுமுறை தொடங்க இருப்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. திருமலை திருப்பதி எனவே தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தான இணைய வெளியான உடன் விற்றுத் … Read more

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் : மல்லிகார்ஜுன கார்கே

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ம் ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக்கொண்டுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன தவிர பாராளுமன்றத்திலும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2011 – 12 ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி … Read more

அசத்தலான \"பிளான் 50\".. லண்டனில் இருந்து டீமை இறக்கிய ஸ்டாலின்.. மொத்தமாக மாற போகுதாம்! குட்நியூஸ்!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து முக்கியமான டீம் ஒன்றை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர்களுக்கு சிறப்பு ப்ரொஜெக்ட் ஒன்றும் கொடுக்கப்பட உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை குறைகிறது. வருவாய் பற்றாக்குறை 7000 ஆயிரம் கோடி ரூபாய் குறையும். 4.16ல் இருந்து 3.08 சதவிகிதமாக … Read more

ஃபிளிப்கார்டில் ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவக்கம்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 Pro மாடலுக்கான விற்பனையை ஃபிளிப்கார்ட் மூலமாக துவங்கப்பட்டுள்ளது. இந்த இ-காமர்ஸ் தளத்தில் இந்தியா முழுமைக்கு முன்பதிவு நடைபெறும் என குறிப்பிட்டிருந்தாலும் தற்பொழுது பெங்களூரு, ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி நகரங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. சமீபத்தில் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது. 95 கிமீ ரேஞ்சு வழங்குகின்ற விடா வி1 புரோ ஸ்கூட்டர் சிறப்பான மாடலாக உள்ளது. Vida எலக்ட்ரிக் ஸ்கூட்டர் V1 … Read more