ஹீரோ ஜூம் ஸ்கூட்டரின் நிறைகளும் குறைகளும் என்ன ?

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற அமைப்பினை கொண்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் ஜூம் 110 ஸ்கூட்டர் மாடல் மிக சிறப்பான வசதிகளுடன் ஸ்கூட்டரின் நிறைகளும், குறைகளும் சோதனை செய்ததில் கிடைத்தவற்றை தொகுத்து அறிந்து கொள்ளலாம். 110cc சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் கொண்டுள்ள ஹீரோ ஜூம் 110 ஸ்கூட்டர் என்ஜின் 7250RPM-ல் அதிகபட்ச குதிரைத்திறன் 8 bhp பவர், 5750 RPM-ல் 8.7 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஹீரோ Xoom நிறைகள் மிக ஸ்டைலிஷான தோற்ற … Read more

Tamil News Live Today: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு; சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் கெஜ்ரிவால்!

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு; சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் கெஜ்ரிவால்! டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானக் கொள்கையில் வியாபாரிகளுக்குச் சாதகமான அம்சங்கள் இருப்பதாகவும், அதற்காக ரூ.100 கோடி வரை ஆம் ஆத்மி தலைவர்களுக்குப் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கப் பிரிவும், சிபிஐ-யும் இந்தப் புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து … Read more

இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று இன்று 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநில தலைவர் வன்னியராஜன தெரிவிக்கையில், சென்னை கொரட்டூர், ஊரப்பாக்கம், திருவள்ளூர், அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 45 இடங்களில் இன்று மாலை 3 மணிக்கு அணிவகுப்பு தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து கொரட்டூர் விவேகனந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் பொதுக்கூட்டமும் நடக்க உள்ளது என்று கூறினார்.

ஆருத்ரா மோசடி: சிக்கியுள்ள \"பெரிய\" தலைகள்.. நானும் பணம் கொடுத்தேன்.. போட்டு உடைத்த கிருஷ்ண பிரபு!

Tamilnadu oi-Vignesh Selvaraj சென்னை : “ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை. பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் தொடர்வதற்கு நானும் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளேன்” என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய கிருஷ்ண பிரபு பகீர் தகவல்களைக் கூறியுள்ளார். பாஜக மாநில ஐடி விங் தலைவராக நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர்கள் … Read more

உலகளவில் 68.56 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.56 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.56 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.42 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 65.83 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்க பா.ஜ.க. விரும்புகிறது- கபில்சிபல்

கெஜ்ரிவாலுக்கு சம்மன் நாடெங்கும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது சி.பி.ஐ., அமலாக்கத்துறையின் வழக்குகள் பாய்வதும், சோதனைகள் நடத்தப்படுவதும் எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்போது மதுபானக்கொள்கை ஊழல் விவகாரத்தில், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா இது தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரசில் இருந்து விலகி ‘இன்சாப்’ என்ற அமைப்பை நடத்தி வருகிற மூத்த வக்கீல் கபில் சிபல் கருத்து தெரிவித்து … Read more

ஸ்கூட்டரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் .. பின்னணியில் யார் ? போலீசார் தீவிர விசாரணை

காசர்கோடு, கேரள மாநிலம் காசர்கோடு, கல்லுராவி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை சோதனை செய்ததில், ஒரு பையில் 67 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ஸ்கூட்டரை ஓட்டி வந்த புஞ்சாவியை சேர்ந்த ஹாரிஸை கைது செய்து விசாரித்தபோது, விஷூ மற்றும் ரம்ஜான் பண்டிகைக்கு பல்வேறு இடங்களில் விநியோகம் செய்வதற்காக, வளைகுடா நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் … Read more

சி.பி.ஐ., அமலாக்கத்துறை மீது அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மதுபான ஊழல் வழக்கில் சம்மன் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் மதுபான கொள்கை ஊழல் நடந்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுபான கொள்கையில் வியாபாரிகளுக்கு சாதகமான அம்சங்களையும், சலுகைகளையும் சேர்த்து, பிரதிபலனாக ரூ.100 கோடி அளவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு லஞ்சம் கைமாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்த ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி … Read more

திமுக இப்தார் விழாவில் பங்கேற்க துபாயிலிருந்து 1 நாள் விசிட் அடித்த நிர்வாகி! என்ன பின்னணி?

Tamilnadu oi-Arsath Kan சென்னை: திமுக இப்தார் விழாவில் பங்கேற்பதற்காக துபாயிலிருந்து சென்னைக்கு 1 நாள் விசிட் அடித்து கட்சித் தலைமையின் கவனம் ஈர்த்திருக்கிறார் அமீரக திமுக நிர்வாகி ஒருவர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மீரான் அமீரக திமுக பொறுப்பாளராக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்தார் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. … Read more