அஜ்மீர்-டெல்லி இடையே வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி.. சிறப்பே இதுதான்! அடடே

India oi-Nantha Kumar R ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இது ரயில் தான் உலகில் முதல் முதலாக ஓஎச்இ எனும் மேல் வழித்தட எலக்ட்ரிக் வயருக்கு கீழ் இயங்கும் அதிவிரைவு ரயிலாகும். இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி அஜ்மீர்-டெல்லி கண்டோன்மென்ட் இடையேயான புதிய வந்தே பாரத் ரயில் … Read more

ஆருத்ரா வழக்கு; ஹரீஷிடம் விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள் – பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்!

சென்னை, அமைந்தகரை மேத்தா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் `ஆருத்ரா கோல்டு டிரேடிங்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. தங்களிடம் `ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ரூ.36,000 வரை வட்டியாக வழங்கப்படும்’ என்று இந்த நிறுவனம், கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது. இதை நம்பிய பலர் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதற்கிடையே, இந்தத் திட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையைத் தூண்டி, அந்த நிறுவனம் மோசடியில் … Read more

வெயில் நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அறிவுரை

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கோடைகால கடும் வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த அவர், வெயில் அதிகரிக்கும் நிலையில் மதுபானங்கள், டீ, காபி, கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களையும், அதிக புரத … Read more

எளிமை.. வயநாட்டில் சாதாரண லாரியில் வலம் வந்த ராகுல் காந்தி! குவிந்த தொண்டர்கள்! அடேங்கப்பா..வீடியோ

India oi-Nantha Kumar R வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கத்துக்கு பிறகு அங்கு முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி சாதாரண லாரியில் வலம் வந்த நிலையில் அவரை பார்க்க ஏராளமான மக்கள் குவிந்திருக்கும் வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி கவனத்தை … Read more

பஞ்சாப்: மாயமான துப்பாக்கி; ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு; 4 ராணுவ வீரர்கள் பலி – ராணுவம் விசாரணை

பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் ராணுவ முகாம் இருக்கிறது, இந்த முகாமில் இன்று அதிகாலை 4;30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கிறது. இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியிருக்கின்றனர். தற்போது அந்தப் பகுதி ராணுவ அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராணுவ முகாம் இது குறித்து பஞ்சாப் ராணுவ முகாம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,” அதிகாலை 04;35 மணி அளவில் பதிண்டா  ராணுவ … Read more

பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் 4 ராணுவ வீரர்கள் பலி…

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதிகாலை 4:30 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த ராணுவ முகாமில் இருந்து இன்சாஸ் ரக துப்பாக்கியும் 28 தோட்டங்களும் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சாதாரண உடையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இது பயங்கரவாத தாக்குதல் … Read more

அடுத்த சிக்கல்.. உணவு விஷயத்திலும் கட்டுப்பாடா? தலிபான்கள் புதிய சட்டம்.. திணறும் ஆப்கன் பெண்கள்

International oi-Halley Karthik காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பல சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் ஓட்டலுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் கூறியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேட்டையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கா கடந்த 2021ம் ஆண்டு முற்றிலுமாக அந்நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஏற்கெனவே கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வந்தனர். இந்த … Read more

பயங்கரவாத தாக்குதலா? பஞ்சாப் போலீசார் மறுப்பு!| Punjab: Four dead in firing at Bathinda Military Station, search ops on

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர்: பஞ்சாபின் பதிண்டா ராணுவ தளத்தில் நடந்த தாக்குதல், பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பு இல்லை என பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பஞ்சாபின் பதிண்டா ராணுவ தளத்தில் இன்று (ஏப்., 12) அதிகாலை 4:35 மணியளவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முதலில், இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், … Read more

DCvMI: தவறுகளைத் திருத்திக் கொண்ட மும்பையும்; `தப்பெல்லாம் தப்பே இல்ல' மோடில் டெல்லியும்!

`உங்களில் யார் மோசமான டி20 டீம்?’ என ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தினால் அதன் இறுதிப்போட்டிக்கு நேரடியாக இந்த சீசனின் டெல்லியையும் மும்பையையும் அனுப்பிவிடலாம். டெல்லி அணியின் பேட்டிங்கோ படுமோசம். இதுவரை 60 ஓவர்கள் முழுக்க ஆடி 447 ரன்கள். இப்போதெல்லாம் ஒரே டி20 போட்டியில் மொத்தமாய் இதைவிட அதிக ரன்கள் அடித்துவிடுகிறார்கள். மும்பை அணியோ பவுலிங்கில் சொதப்பல். இந்த சீசனில் 34 ஓவர்கள் வீசி மொத்தமே ஐந்து விக்கெட்கள்தான் எடுத்திருக்கிறது. ஒரு அணியின் கேப்டனோ ரன் … Read more

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வருகையை பதிவு செய்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் துவங்கிய நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். 38 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இதனால் சட்டமன்றம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து இந்தக் கூட்டத்தொடரில் இன்று … Read more