கேரளாவில் பரவும் காய்ச்சல்; அடுத்த 2 வாரங்கள் கவனமாக இருக்க வேண்டும் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 309 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களில் 5 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்த நிலையில், 1,067 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 4 நாட்களில் மட்டும் 40 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் எலி காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்த 2 வாரங்கள் … Read more

பணி புரியும் இடங்களில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம் : தமிழக அரசு

சென்னை பணிபுரியும் இடங்களில் குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் அவசியம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.  அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த மசோதா தற்போது சட்டமாகி … Read more

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெறுவது கட்டாயமில்லை – பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

புதுடெல்லி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் உதவிப் பேராசிரியர் மற்றும் இதர கல்வி ஊழியர்களை நியமிப்பதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளில் உள்ள விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு(யு.ஜி.சி.) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யு.ஜி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய தகுதித் தேர்வு(நெட்) மாநில தகுதித் தேர்வான(செட்), மாநில அளவிலான தகுதித் தேர்வு(ஸ்லெட்) போன்ற ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

இன்றைய ராசிபலன் 06.07.23 | Horoscope | Today RasiPalan | வியாழக்கிழமை | July 06| Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் வருடம்முழுவதும் தினமும் 1200 கிமீ பறந்து பறந்து படித்து லட்சியத்தை எட்டிய மாணவன்…

வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் சுமார் ஒருவருடமாக தினமும் விமானத்தில் 1200 கி.மீ. பறந்து சென்று படித்த மாணவன் குறித்த தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் பில் என்ற அந்த மாணவன் சான்பிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகில் கேல் பெர்க்லி-யில் உள்ள பல்கலை கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார். அதுவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் பணிபுரிந்த நிறுவனம் வழங்கி வந்த கட்டணமில்லா தங்கும் இடத்தில் தங்கி வந்த பில், … Read more

People are suffering because of peak vegetable prices | உச்சத்தில் காய்கறி விலை மக்கள் கடும் அவதி

புதுடில்லி, நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதர காய்கறிகளின் விலைகளும் உச்சம் தொட துவங்கியிருப்பது, மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தக்காளி கிலோ 120 ரூபாய் வரை விற்கப்படுவதை அடுத்து, ரேஷனில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையை மாநில அரசு துவங்கி உள்ளது. புதுடில்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை கிலோ 130 – 160 ரூபாய் வரை … Read more

டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – சரத் பவார் அழைப்பு

மும்பை, மராட்டிய மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அஜித்பவார் மற்றும் அவரது 8 ஆதரவு எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி ஆளும் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தனர். தொடர்ந்து சிவசேனா-பா.ஜ.க. கூட்டணி அரசின் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 8 பேருக்கும் கவர்னர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். மராட்டிய சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், இதில் சிலர் அஜித் பவாருக்கு … Read more

தேனி: “கலந்தாய்வுக் கூட்ட அரங்கில் 15 முறை மின்தடை; விடியல் அரசே… முடியல அரசே!" – சீமான்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் `நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்’ என்ற பெயரில் நடந்த ​பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழர்கள் அதிகம் வாழும் தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்டப் பகுதிகளை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டம் கேரளாவிடம் சென்றதால்தான் முல்லைப்பெரியாறு பிரச்னை ஏற்பட்டது. இதேபோலதான் நில உரிமையை விட்டுக்கொடுத்துவிட்டு காவிரி தண்ணீருக்காகவும் கர்நாடகத்துடன் போராடிக் கொண்டிருக்கிறோம்.  கண்ணகி கோயில் சேரன் செங்குட்டுவனால் கண்ணகிக்கு கட்டப்பட்ட கோயில் தமிழக எல்லைக்குள் இருந்தது. கண்ணகிக்கு விழா எடுத்து கொண்டாடிவந்த நிலையில், கேரள … Read more

கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது : சரத்பவார் உரை

மும்பை கட்சியின் சின்னம் தங்களிடம் உள்ளதாகத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்வராகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதிதி தட்காரே, ஹசன் முஷ்ரிப்,  உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த திடீர் மாற்றம் … Read more