2026 சட்டமன்ற தேர்தல்: பெண்களுக்கு மாதம் ரூ. 2000 – ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து – இலவச ஸ்கூட்டர் நிதி உதவி! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக தரப்பில் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை  முன்னள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். அதன்படி,   பெண்களுக்கு மாதம் ரூ. 2000, பெண்களைப் போல,  ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து, இலவச ஸ்கூட்டர் நிதி உதவி உள்பட பல்வேறு அறிவிப்புகளை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவபடத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை … Read more

போலந்து துணை பிரதமர் இன்று இந்தியா வருகை

புதுடெல்லி, போலந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் வெளியுறவு துறை மந்திரியான ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகருக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், போலந்து துணை பிரதமர் ரதோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று இந்தியாவுக்கு வருகிறார். இதன்பின்பு, நாளை நடைபெற உள்ள ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வார். … Read more

மும்பை மாநகராட்சி தேர்தல்: மராத்தியர்களை (மட்டும்) தக்கவைத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்!

மும்பை மாநகராட்சியை எப்படியும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உத்தவ் தாக்கரே 20 ஆண்டுகள் கழித்து ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்தார். இக்கூட்டணியால் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியை தாக்கரே சகோதரர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிவசேனா(உத்தவ்) 65 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. கடந்த தேர்தலில் 84 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மான் சேனாவும் எதிர்பார்த்த அளவு தேர்தலில் வெற்றி பெறவில்லை. இத்தேர்தலில் மராத்தியர்களை குறிவைத்து … Read more

எம்.ஜி.ஆர். பிறந்த நாள்: பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, விஜய் வாழ்த்து…

சென்னை:  தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான மறைந்த  எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி, அதிமுகவினர் கொண்டாடி மகிழும் நிலையில்,  பிரதமர் மோடி, முன்னாள் அதிமுக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர்  விஜய்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். எம்.ஜி.ஆரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாங்கள் எப்போதும் பாடுபடுவோம்  என பிரதமர் மோடியும்,  தீய சக்தியின் ஆட்சியில் இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுத்த எம்.ஜி.ஆரை போற்றுவோம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். … Read more

டெல்லியில் குளிர் அலை பரவல்; விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி, டெல்லியின் பல்வேறு நகரங்களிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்தே கடுமையான குளிர்ச்சி நிலவுகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி என்ற அளவுக்கு குறைந்து காணப்படுகிறது. பாலம், சப்தர்ஜங், டெல்லி-என்.சி.ஆர்., இந்தியா கேட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இது தவிரவும் முக்கிய நகரங்களில் காற்று மாசும் அதிகரித்து உள்ளது. தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது. இதனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் சில … Read more

`பந்தக்கால் ஊன்றிய அதிமுக; பொருமலில் பாஜக முதல் சிக்கலில் கதர் கட்சி தலைமை வரை' | கழுகார் அப்டேட்ஸ்

உறுமும் சிறுத்தைக் கட்சியினர்!தட்டிக்கொடுக்கும் மாண்புமிகுக்கள்… வரும் தேர்தலில் யாருக்கு சீட் அளிப்பது என்ற முடிவுக்கு, சிறுத்தைக் கட்சியின் தலைமை இதுவரையில் வரவில்லை. ஆனால், அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்களை தொடர்புகொள்ளும் சூரியக்கட்சி மாண்புமிகுக்கள் சிலர், ‘இந்த முறையும் உங்களுக்கே சீட்… நீங்க தேர்தல் வேலையைப் பாருங்க…’ என்று தட்டிக் கொடுக்கிறார்களாம். இந்த தகவலறிந்த சிறுத்தைக் கட்சியின் சீனியர் உறுப்பினர்கள் சிலர், தங்கள் பகுதிகளில் செல்வாக்காக உள்ள மாண்புமிகுக்களை தொடர்புகொண்டு, சீட் பெற ஆதரவு கேட்கிறார்களாம். அண்ணா அறிவாலயம் இதனால், … Read more

முதல் ‘ஸ்லிப்பர் வந்தேபாரத்’ உள்பட, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி…

கொல்கத்தா:   பிரதமர் மோடி, இந்தியாவின்  முதல் ‘ஸ்லிப்பர் வந்தேபாரத்’ உள்பட, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு – மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை இன்று  பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் பல பகுதிகளுக்கான அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் மற்றும் மேற்கு வங்கம் செல்கிறார். அப்போது … Read more

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது – ராகுல்காந்தி

புதுடெல்லி, மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் மார்க்கர் பேனாக்களில் பயன்படுத்தப்பட்ட அழியாத மையின் தரம் குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த மை மூலம் வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்ட அடையாளத்தை எளிதில் அகற்ற முடியும் என்றும், இது போலி வாக்குப்பதிவுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அவதூறு பரப்புகின்றன என மராட்டிய மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘உண்மை என்ன என்பதை பார்க்காமல் மாநில தேர்தல் ஆணையம், … Read more

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன்; விரைவில் திருமணம் அருளும் குடைக்கல்யாணம் வேண்டுதல்!

அம்மன் அருள் செய்யும் தலங்கள் நம் தேசமெங்கும் உள்ளன. அவற்றில் கருணையே வடிவாக அம்பிகை பவானியாக அருளும் தலம் பெரியபாளையம். சென்னையிலிருந்து செங்குன்றம் வழியாகச் சென்று தச்சூருக்கு முன்பாக இடப்புறம் திரும்பி, கன்னிகைபேர் வழியே பெரியபாளையம் செல்லலாம். சென்னையிலிருந்து 43 கி.மீ தொலைவில் உள்ளது. வாருங்கள் அத்தல மகிமையையும் அத்தலம் சக்தி வாய்ந்த நேர்த்திகடன் செலுத்தும் தலம் என்று சொல்வதில் இருக்கும் கருத்தையும் அறிந்துகொள்வோம். உத்தர வாகினியாக ஓடும் ஆரணி நதிக்கரையில் புற்று உருவில் அமர்ந்தாள் அன்னை … Read more

ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஜனவரி 19ம் தேதி தமிழக காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 19ம் தேதி காலை 10 மணிக்கு மாநில  காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,மத்திய மற்றும் மாநில அரசுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு … Read more