பொங்கல் பரிசு ரூ.3000 வாங்காதவர்கள் ரேசன் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வாங்காதவர்கள் வாங்கிக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. தமிழர்களின் திருநாளாம், அறுவடை திருநாளான  பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சில ஆண்டுகள் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு  வருகிறது. அந்த வகையில் … Read more

"என் மகள் கட்டாயப்படுத்தினார்" – முன்னாள் மனைவி, பிள்ளைகளோடு மராத்தானில் பங்கேற்ற ஆமீர் கான்!

மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் வந்திருந்தனர். பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது முன்னாள் மனைவி கிரண் ராவ், மகள் இராகான், மருமகன் நுபூர், மகன் ஜுனைத் கான், ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார். ஆமீர் கான், இரா கான், … Read more

BB Tamil 9: "எல்லா விருது நிகழ்ச்சிகளுக்கும் போவேன்; ஆனா.!"- டைட்டில் வின்னர் திவ்யா கணேஷ் எமோஷனல்

கடந்த அக்டோபர் மாதம் ஒளிப்பரப்பாக தொடங்கிய ‘பிக் பாஸ்’ சீசன் 9 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று (ஜன.18) நடைபெற்றது. இந்த ஆண்டும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் என மொத்தம் 20 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர். BB Tamil 9 பிரஜின், சாண்ட்ரா, அமித், திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி கொடுத்திருந்தனர். எவிக்‌ஷன் மூலம் ஒவ்வொருவராக வெளியேற, கம்ருதீன், … Read more

தஞ்சை: கோயில் வளாகத்தில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளி; கேள்விக்குறியாகும் கல்வி! – கவனிப்பார்களா?

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் அருகே திருமங்கை ஊராட்சி சோழியவிளாகம் கிராமத்தில் காந்தி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி ஒன்று 70 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்தது. இப்பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கட்டடம் சிதிலமடைந்த நிலையில் கட்டடத்திற்கு தர சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளியானது அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த 8 மாதங்களாக இயங்கி வந்தது. கோயில் விழா நடத்துதல் போன்ற காரணங்களால் பள்ளியானது … Read more

தங்கம், வெள்ளி விலை இனி சரிவுக்கு வருகிறதா? முதலீட்டில் கவனம் தேவையா? – நிபுணர் கருத்து

தங்கம், வெள்ளி விலை நாம் யாரும் நினைத்துப் பார்த்திராத உயரத்தை 13 மாதங்களில் கண்டுள்ளது. இந்த ஆண்டும் அது தொடருமா என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ். “தங்கமும், வெள்ளியும் புதுப்புது உச்சங்களைத் தொட்டு வருகிறது. காப்பரும் ஏற்றத்தைக் கண்டு வருகிறது. தற்போது தங்கம், வெள்ளியில் அதிக நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. அதனால், இது டிரேடிங்கிற்கான ஏற்ற நேரம். நீண்ட கால முதலீடு என்று எடுத்துக்கொண்டால், தங்கத்தின் விலை இன்னமும் உயரலாம் என்று உலகப் … Read more

டான் 3 படத்தில் நடிக்க ஷாருக் கான் விதிக்கும் புதிய நிபந்தனை: பர்ஹான் அக்தர் சம்மதிப்பாரா?

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இதற்கு முன்பு நடித்த டான் படம் பெரிய அளவில் ஹிட்டானது. டான் 2 படமும் வெளிவந்துவிட்டது. இப்போது டான் 3 படத்தை இயக்க இயக்குநர் பர்ஹான் அக்தர் திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் மீண்டும் நடிக்க ஷாருக் கான் மறுத்துவிட்டார். இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது டான் 3 படத்தில் இருந்து ரன்வீர் சிங்கும் விலகிக்கொண்டார். நடிகர் ரன்வீர் சிங் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, லோகேஷ் … Read more

கர்நாடகாவில் சோகம்; ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் விபத்தில் பலி

பெங்களூரு, கர்நாடகாவின் தேவனஹள்ளி நகரில் அகலகோட் கிராமம் அருகே மாநில நெடுஞ்சாலையில் இளைஞர்கள் 3 பேர் ஒரே பைக்கில் சென்றுள்ளனர். அவர்கள் தேவனஹள்ளியில் இருந்து புடிகெரே சாலையை நோக்கி சென்றபோது, விரைவாக எதிரே வந்த லாரி ஒன்று அவர்களின் பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து லாரியில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்க முயற்சித்தனர். ஓட்டுநர்களின் அலட்சியத்தினால் இதுபோன்ற விபத்துகள் … Read more

'விண்ணை முட்டும் ஆம்னி பஸ் டிக்கெட்; தவிக்கும் மக்கள்!' – கண்டுகொள்ளாத அரசு?

பொங்கல் விடுமுறையை முடித்துவிட்டு சொந்த ஊர்களிலிருந்து மக்கள் சென்னை திரும்ப ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில், சென்னையை நோக்கிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்திருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அமைச்சர் சிவசங்கர் வழக்கமாக திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சமாக 700 முதல் 800 ரூபாயிலிருந்தே அமர்ந்து செல்லும் வகையிலான டிக்கெட்டுகள் கிடைக்கும். ஆனால், இப்போது அந்த வகை டிக்கெட்டுகள் குறைந்தபட்சமாக சராசரியாக 2500 ரூபாயிலிருந்து 4000 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டு வருகிறது. படுக்கைவசதியுடன் கூடிய … Read more