கோவையில் தஞ்சமடைந்துள்ள காட்டு யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயற்சி

கோவை: கோவை பேரூரில் தஞ்சமடைந்துள்ள மக்னா காட்டு யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன், சதாசிவம், சுகுமார், பிரகாஷ் ஆகியோர் யானைக்கு மயக்க மருந்து செலுத்த ஆயுத்தமாகியுள்ள நிலையில் நொய்யல் ஆற்றுப்பகுதிக்கு 120 பேர் கொண்ட வன ஊழியர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்களும் சென்றுள்ளனர்.

மதுபானக் கொள்கை முறைகேடு: கெஜ்ரிவால் உதவியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை| Liquor Policy Irregularity: Enforcement Directorate probes Delhi Chief Minister Kejriwals aide

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி மதுபானக் கொள்கை முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை இன்று(பிப்.,23) விசாரணை நடத்தினர். புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது மதுபான வியாபாரிகளுக்கு உரிமம் வழங்கும் இந்த புதிய கொள்கை குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு சாதகமாக … Read more

இந்தியாவில் மேலும் 95 பேருக்கு தொற்று

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2000 ஆக பதிவாகியுள்ளது.இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,763 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,687 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,63,60,778 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 7,3947 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தினத்தந்தி Related Tags : இந்தியா

நிலநடுக்கத்தில் உயிரிழந்து குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த நபர்: திடீரென நிகழ்ந்த அற்புதம்…

சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஒருவருடைய உடல் இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தபின்னரும், அவர் திடீரென உயிர் பெற்றெழுந்த அற்புதம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இரண்டு நாட்கள் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடல் நிலநடுக்கத்தல் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே இருந்து அஹமது (Ahmed al-Maghribi) என்பவரின் உயிரற்ற உடல் மீட்கப்பட்ட நிலையில், அவரை முறைப்படி அவரது உறவினர்கள் அடையாளம் காண்பதற்காக, அவரது உடல் மருத்துவமனை ஒன்றில் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்துள்ளது. இரண்டு நாட்களுக்குப் பின், அவரது … Read more

“தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”  – ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது”   என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை தெரிவித்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலை வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானபோது,  எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் … Read more

பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் நடைபெறும் பணப்பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் படையும், அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் கொள்ளு பேரன் காங்கிரசில் இருந்து விலகல்

புதுடெல்லி, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சாரி. இவரது கொள்ளு பேரன் சி.ஆர். கேசவன். பாரம்பரிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த அவர், கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதுபற்றி அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பி உள்ளார். அதன்படி, கடந்த 2001-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து உள்ளார். அவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் … Read more

"இனி ஓ.பி.எஸ்ஸின் அரசியல் வாழ்க்கை `ஜீரோ' தான்!" – நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஜெயக்குமார்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அந்தக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க எடப்பாடி தரப்பு தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கௌரவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரமே இல்லை. பாண்டவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தெளிவான தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறோம். நாங்கள் … Read more

"பழைய சோறால் தான் என் நீண்ட நாள் உடல் உபாதை சரியானது” ஸ்ரீதர் வேம்புவின் பதிவுக்கு குவியும் பாராட்டு

 தனது காலை உணவாகப் பழைய சோறு மாறிவிட்டதால் தான் என் உடல் ஆரோக்கியம் மீண்டது எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்ரீதர் வேம்புக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. காலை உணவாக பழைய சோறு சோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நமது மூதாதையர்களின் அருமருந்தான பழைய சோறு கஞ்சி தான் எனது காலை உணவாக இருக்கிறது என்றும் அதனால் எனக்கிருந்த ஐபிஎம் என்ற உடல் உபாதை சரியானது என்று … Read more