செக்ஸ் அடிமை…! கொலை…! வலை விரிக்கும் ஆபத்தான ஆன்லைன் டேட்டிங் செயலிகள் – உண்மைக் கதைகள்

புதுடெல்லி இந்த நவீன உலகில் அனைத்துமே ஆன்லைன் என்றாகிவிட்டது. உட்கார்ந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பெற முடிகிறது. டேட்டிங் தொடங்கி இப்போது ஷாப்பிங் வரை அனைத்துமே ஆன்லைனில் தான் நடக்கிறது. ஆன்லைன் செயலிகளின் வருகைக்குப் பின் காதலிக்கும் முறையே முற்றிலுமாக மாறிவிட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட பல நகரங்களிலும் டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சில நொடிகளில் நமக்குப் பிடித்த நபரை வலதுபுறம் ஸ்வைப் செய்தால் போதும்.. அவர்களும் அதேபோல செய்தால் டேட்டிங் … Read more

மறக்க முடியாத தேர்வனுபவம்! – வாசகர் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஆனந்த விகடனில் வாசகர் மேடை என்ற பகுதி ஆரம்பிக்கப்பட புதிது அது. விகடனார் கேட்கும் கேள்விகளுக்கு வாசகர்ளுடைய சுவையான பதில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரிக்கப் படும்.  அப்படியாக ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் ஆனந்த விகடனை வாங்கி வாசித்த எனக்கு விகடனாரின் வாசகர் மேடை கேள்விகளும் … Read more

கனேடிய நகரமொன்றில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட ஆசிய பெண்கள்?: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

கனேடிய நகரமொன்றில் வீடு ஒன்றிற்குள் ஆசிய நாட்டவர்கள் என கருதப்படும் பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இருவர் சடலங்களாக கண்டெடுப்பு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Richmond நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள். பொலிசார் அங்கு விரைந்தபோது, அந்த வீட்டிற்குள் 43 வயது பெண் ஒருவரும், 14 வயது இளம்பெண் ஒருவரும், சடலங்களாக கிடப்பது தெரியவந்துள்ளது. யார் அவர்கள்? ஒருவர் மற்றவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என … Read more

திருச்செந்தூர் சுப்பிரமண்யசுவாமி திருக்கோயில் 12 நாட்கள் மாசித்திருவிழா – முழு விவரம்…

திருச்செந்தூர்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா இம்மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. அதற்கான முழு விவரம் வெளியாகி உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டு பல விழாக்கள் நடைபெற்று வந்தாலும், அங்கு நடைபெறும் சூரசம்காரம் மற்றும் மாசித்திருவிழா போன்றவை மிகவும் பிரசித்தி பெற்றது.   மாசி மாதத்தில் … Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 44.4-ஆக பதிவு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 44.4-ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இருந்து கிழக்கு திசையில்143 கி.மீ. தொலைவில் 10 Km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வுக்கான தேசியமையம் தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து துறை அமோக வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்| Air Transport Department Amoka Varachi: Prime Minister Modi is proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: விமான போக்குவரத்து துறை சிறப்பாக(அமோகம்) வளர்ச்சி அடைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னர், ஒரு நாளின் உள்நாட்டு விமானப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை, 3 லட்சத்து 98 ஆயிரத்து 579 ஆக இருந்தது. கொரோனா தொற்றுக்கு பின்னர் உள்நாட்டில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த … Read more

விப்ரோ நிறுவனத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் பாதியாக குறைப்பு

புதுடெல்லி, புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்தை பாதியாக குறைப்பதாக பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ அதிரடியாக அறிவித்துள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 பேரை கடந்த மாதம் வேலை நீக்கம் செய்த விப்ரோ நிறுவனம், அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது. சுமார் மூன்றாயிரம் புதிய ஊழியர்களை, ஆறரை லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்திற்கு பணியமர்த்த வேலை உறுதி கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் அவர்களின் ஆண்டு சம்பளத்தை மூன்றரை லட்சம் ரூபாயாக குறைப்பதாக அறிவித்துள்ளது . இதற்கு விருப்பமுள்ளவர்கள் … Read more

ஈரோடு கிழக்கு: சிறுபான்மை, பட்டியலின வாக்காளர்களை குறிவைத்து தீவிரம் காட்டும் கட்சிகள்!

தமிழகமே உற்று நோக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் 27-ம் தேதி நடைபெற உள்ளதையொட்டி தொகுதி முழுவதும் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான், பிரேமலதா, ஜி.கே.வாசன், அண்ணாமலை என தொகுதி முழுவதும் முதற்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு சென்று விட்டனர். இரண்டாம் கட்டமாக எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரும் 24, 25 ஆம் தேதிகளில் ஈரோட்டில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்தத் தொகுதியை பொருத்தவரை சிறுபான்மையினரின் … Read more

வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டம்! ஆய்வின் முடிவால் மகிழ்ச்சியில் பிரித்தானிய நிறுவனங்கள்

பிரித்தானியாவில் செயல்படுத்தப்பட்டு வந்த வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற சோதனைத் திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 நாள் சோதனை திட்டம் பிரித்தானியாவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை என்ற பரிசோதனை திட்டத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பல்வேறு துறைகளை சார்ந்த 61 நிறுவனங்கள் செயல்படுத்தி வந்த நிலையில் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை திட்டத்தின் மூலம் சில சுவாரசியமான மாற்றங்கள் காணப்பட்டதாக ஆக்ஸ்போர்டு … Read more

ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு வழக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் கோரிக்கை…

டெல்லி:  ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளதால்,  ஆண்டு இறுதி தேர்வு தொடங்க உள்ளதால், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முஸ்லிம் மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று … Read more