ஐந்து ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த பெண்ணை கொன்ற இளைஞர்! நடந்தது என்ன?

இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால், இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகால காதல் கர்நாடக மாநிலம் டோம்லூரில் பணியாற்றி வந்தவர் தினகர்(28). இவரும் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த லீலா என்ற இளம்பெண்ணும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. லீலா கர்நாடகாவின் முருகேஷ்பால்யாவில் பணியாற்றி வந்தார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சாதியை காரணம் காட்டி … Read more

70-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சோனியாகாந்தி வாழ்த்து…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமீபத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மேலும் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளை  கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு உதவிகளை … Read more

உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை

சென்னை: உணவுப் பொருட்களை கிடங்குகளுக்கு கொண்டு செல்வது தொடர்பான டெண்டர் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. நுகர்பொருள் வாணிப கழகம் கோரிய டெண்டர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. டெண்டர் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிப்., மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடி: கடந்தாண்டை விட 12 % அதிகம்| GST collections rise 12 pc to Rs 1.49 lakh crore in February

புதுடில்லி: இந்தாண்டு பிப்., மாதம் ஜிஎஸ்டி ரூ.1.49 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக கூறியுள்ள மத்திய நிதியமைச்சகம், இது கடந்தாண்டு பிப்., மாதத்தை விட 12 சதவீதம் அதிகம் எனக்கூறியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: 2023 பிப்., மாதம் வசூலான ரூ.1,49,577 கோடி ஜிஎஸ்டியில் சிஜிஎஸ்டி – ரூ.27,662 கோடி எஸ்ஜிஎஸ்டி – ரூ.34,915 கோடி ஐஜிஎஸ்டி – ரூ. 75,069 கோடி( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.35,689 கோடி அடங்கும்) … Read more

பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் ராகுல்காந்தியின் 'புது லுக்' – லண்டன் கெம்பிரிஜ் பல்கலை.யில் விரிவுரை…!

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற்ற இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி தனது தலைமுடியை வெட்டாமலும், தாடியை ஷேவ் செய்யாமலும் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். இதனிடையே, பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம், காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திலும் ராகுல்காந்தி தாடியை … Read more

`எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு' – ஓபிஎஸ், சசிகலா, டிடிவி-யின் எதிர்கால திட்டத்தில் சறுக்கலா?!

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து அரங்கேறிய அரசியல் நிகழ்வுகளில் சசிகலாவும், டிடிவி தினகரனும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் எடப்பாடி பழனிசாமியும் – ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பணியாற்றி வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் போக்கு ஏற்பட்டது. குறிப்பாக கடந்த ஜூலை 11-ம் தேதியில் நடைபெற்ற பொதுக்குழுவில் இருவருக்குமான பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் 23, ஜூலை 11-ம் தேதிகளில் அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டங்கள் … Read more

70வது பிறந்தநாள்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து – புகைப்படங்கள்

சென்னை: 70வது பிறந்தநாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி உள்பட கூட்டணி  கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1.49 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்: ஒன்றிய நிதியமைச்சகம் தகவல்

டெல்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1,49,557 கோடி ஜிஎஸ்டி வரி வசூல் நடந்துள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தை விட 12% அதிகம் கிடைத்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து..!

புதுடெல்லி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியில்அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு: “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

காணாமல்போன மாடல் அழகி; சூப்பில் கண்டெடுக்கப்பட்ட தலை… போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

அப்பி சோய் என்ற 28 வயது மாடல், ஹாங்காங்கில் வசித்து வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து இவரைக் காணவில்லை. இவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள், இரண்டு நாள்கள் கழித்து தாய் போ என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், துண்டாக்கப்பட்ட உடல் பாகங்களைக் குளிர்சாதனப் பெட்டியில் கண்டுபிடித்தனர். அப்பி சோய் இது மட்டுமல்லாமல் அந்த வீட்டில் எலெக்ட்ரிக் ரம்பம், கறி வெட்டும் கருவி மற்றும் சில ஆடைகளும் இருந்துள்ளன. இப்பெண்ணின் தலை, முண்டம் மற்றும் … Read more