எப்பப் பாரு இட்லி ,தோசை, பொங்கல் தானா? – ஆரோக்கியமான ராகி ரெசிபிகள் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் எப்பப் பாரு இட்லி ,தோசை , அப்பா பொங்கல் தானா? சனிக்கிழமையாவது ஏதாவது வித்தியாசமா செய்ப்பா அப்படின்னு உங்க வீட்ல சொல்றாங்களா..? டோண்ட் ஒர்ரி நண்பர்களே! கேழ்வரகு மாவில் சில வித்தியாசமான ரெசிபிகளை செய்து அசத்துங்கள். நீங்களும் சாப்பிட்டு விளம்பர அம்மாக்களைப் போல் … Read more

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்! கடலில் இடிந்து விழுந்த கட்டிடங்கள்.. நால்வர் பலி

இந்தோனேசியாவின் பப்புவா வடக்கு கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் பலியாகினர். 5.4 ரிக்டர் அளவு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகரின் தென்மேற்கில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஒரு ஹொட்டலின் கட்டிடங்கள் கடலில் இடிந்து விழுந்தது. இதில் குறைந்தது நான்கு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது மக்கள் … Read more

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை!

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு உறுதிப்படுத்தினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து, இன்று வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாளாக உள்ளது. இன்று பிற்பகல் 3மணிக்கு மேல் வேட்புமனு தாக்கல் தொடர்பான இறுதி பட்டியல் மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்  வெளியிடப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு … Read more

11 ஆண்டுகளில் 16 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்தனர்| In 11 years, 16 lakh people renounced their Indian citizenship

புதுடில்லி : கடந்த 11 ஆண்டுகளில், 16.63 லட்சம் பேர், இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பார்லி.,யின் ராஜ்ய சபாவில் நேற்று இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் குறித்து விவாதிக்கப்பட்து. அப்போது பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடந்த 11 ஆண்டுகளில் 16.63 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளதாகக் கூறினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது: நம் நாட்டினர், 2011ல் 1.23 லட்சம் பேரும், 2012ல் 1.21 லட்சம் பேரும் இந்திய … Read more

அதானி விவகாரத்தில் உடனடி விசாரணை வேண்டும் – மகளிர் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி, அதானி நிறுவனங்கள் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரசார் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண் தொண்டர்கள் கலந்துகொண்டு, அதானி விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் நீதா டிசோசா செய்தியாளர்களிடம் கூறுகையில், … Read more

பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் மயானக்கொள்ளை மாசித் திருவிழா – சிறப்புகள் என்ன? எப்போது நடக்கிறது?

விழுப்புரம் மாவட்டத்தில், ஆன்மிகச் சிறப்பு பெற்ற ஆலயங்களுள் ஒன்று ‘அருள்மிகு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்’. செஞ்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன், புற்று மண்ணால் சுயம்புவாக உருவானவள் என்கிறது தல வரலாறு. நான்கு திருக்கரங்களுடன், இடதுகாலை மடித்து, வலதுகாலைத் தொங்கவிட்டபடி, பிரம்ம கபாலத்தை மிதித்தவாறு, வடக்கு திசை நோக்கி அருட்காட்சி புரிகிறார் அம்மன். புற்று வடிவில் தோன்றிய இந்த அம்மனுக்கு ‘புற்று தேவி’ என்றும் பெயருண்டு. பிரம்மனுடைய ஐந்தாவது சிரத்தைத் … Read more

பிரித்தானியாவை நடுங்கவைக்கும் சம்பவம்: வெளியான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

பிரித்தானியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், 1946க்கு பின்னர் உச்சம் கண்டுள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. 282 கத்திக்குத்து இறப்புகள் மட்டுமின்றி, 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான 12 மாதங்களில் மட்டும் பிரித்தானியாவில் 282 கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது. Credit: Facebook இது முந்தைய ஆண்டைவிட 20% அதிகம் என்றே தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, 77 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதில் இருந்து இது … Read more

‘ஆசாதி சாட்’ உள்பட 3செயற்கை கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ திட்டமிட்டபடி இன்று காலை  9:18க்கு மணிக்கு எஸ்எஸ்எல்வி டி2 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இதில் பள்ளி மாணவர்கள் தயாரித்த ஆசாதி சாட் உள்பட 3 செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டு உள்ளன. புவி கண்காணிப்பிற்காக இஓஎஸ் 7, ஆசாதி சாட் 2 மற்றும் ஜேனஸ் 1 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்துகிறது.. இதில், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ் 7 செயற்கைக்கோள் சுமார் 156 கிலோ எடை கொண்டதாகும். ஆசாதி சாட்2 செயற்கைக் கோளை, … Read more

கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ்.சிவஞானம் நியமனம்

கொல்கத்தா: கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.எஸ்.சிவஞானத்தை நியமிக்க, குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. கொல்கத்தா தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சா, மார்ச் மாத இறுதியில் ஓய்வு பெறுவதால் டி.எஸ்.சிவஞானம் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

குழந்தைதனமான ஆர்வம் பொதுநலனாக மாற முடியாது| Childish interest cannot become public interest

ஆமதாபாத் : பிரதமர் கல்வி விவகாரம் பற்றி உயர் நீதிமன்றத்தில் பதிலளித்துள்ள குஜராத் பல்கலைக்கழகம், ‘ஒருவரின் பொறுப்பற்ற குழந்தைதனமான ஆர்வம் பொது நலன் வழக்காக மாற முடியாது’ என தெரிவித்துள்ளது. புதுடில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி பெற்ற பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து, இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டில்லி மற்றும் குஜராத் பல்கலைக்கழகங்களுக்கு … Read more