தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு| Case filed against 4 persons for assaulting private bus operator

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; தனியார் பஸ் நடத்துனர். இவர் நடத்துனராக பணியாற்றும் தனியார் பஸ் நேற்று முன்தினம் மதியம் 3:30 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் போது, தமிழகப் பகுதியான கொண்டலாங்குப்பம் கிராமத்தில் சிலர் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக நின்று … Read more

துருக்கி : 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் – 3,600-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காஸியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் நேற்று அதிகாலை 3:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் உறுதிசெய்திருக்கிறது. துருக்கி – நிலநடுக்கம் சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன. அதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதியில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. துருக்கி … Read more

அதிசய சாஸ்தா திருக்கோயில், சுசீந்திரம்

அருள்மிகு அதிசய சாஸ்தா திருக்கோயில், கன்னியாகுமரி மாவட்டம், கேப் ரோடு, ஆசிராமம், சுசீந்திரத்தில் அமைந்துள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்பு இவ்வூரில் வசித்த பக்தர்கள், சாஸ்தாவைக் குல தெய்வமாக வணங்கினர். தங்களது இருப்பிடத்தில் அவருக்கு கோயில் எழுப்ப வேண்டுமென எண்ணியவர்கள் ஒரு சாஸ்தா சிலை வடித்தனர். இங்கு பிரதிஷ்டை செய்து சிறிய அளவில் கோயில் எழுப்பினர். பிற்காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். … Read more

பிப் -07: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ஆலோனை கூட்டம்| Alonai meeting | Dinamalar

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கொசு மூலம் பரவும் நோய்களை கண்டறிந்து அதை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் கொசு உற்பத்தியை தடுப்பது, கொசுவால் ஏற்படும் நோய்களை கண்டறிந்து கட்டுப்படுத்துவது குறித்து பேசப்பட்டது. கூட்டத்தில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கொசு மூலம் பரவும் … Read more

இந்த வார ராசிபலன்: பிப்ரவரி 7 முதல் 12 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

2000 உயிர்களை பலிகொண்ட துருக்கி, சிரியா பேரழிவு! ட்ரூடோ வெளியிட்ட பதிவு

துருக்கி மற்றும் சிரியாவில் நடந்த பூகம்பம் குறித்து கனேடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். பூகம்பம் மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. @Reuters மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அவர்கள் மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. @REUTERS இந்த நிலையில் துருக்கி மற்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,772,854 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.72 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,772,854 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 676,338,771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 648,817,772 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 41,596 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகார் பெட்டி| Complaint box | Dinamalar

சுடுகாட்டு பாதை சேதம் புதுச்சேரி, சோரியாங்குப்பம் சுடுகாட்டு பாதை மிகவும் மோசமாக உள்ளதால் சடலங்களை கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர். கோவிந்தராஜ்,முதலியார்பேட்டை. வாகன ஓட்டிகள் அவதி வழுதாவூர் சாலை, ராஜீவ்காந்தி சிக்னல் அருகே ஒரே சாலையில் பாதி ரோடு மட்டுமே போட்டுள்ளதால், வாகனங்களை ஓட்டி செல்வோர் அவதியடைகின்றனர். நேதாஜி, புதுச்சேரி போக்குவரத்து பாதிப்பு வில்லியனுார் கடை வீதியில், சாலையின் இருபுறங்களிலும் திடீர் கடைகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. ரஜினிமுருகன்,வில்லியனுார். சுடுகாட்டு பாதை சேதம்புதுச்சேரி, சோரியாங்குப்பம் சுடுகாட்டு … Read more

துருக்கி, சிரியாவில் 3500 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள்..10 ஆயிரம் வரை உயரும் என எச்சரிக்கை

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தில் 3,500 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயரும் பலி எண்ணிக்கை மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பம் ஏற்படுத்திய பேரழிவால் பலியானோரின் எண்ணிக்கை 3,500ஐ எட்டியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். எனினும் மக்கள் பலர் உதவிக்காக கெஞ்சுகின்றனர். சிலர் பேஸ்புக் நேரலையில் உதவி வேண்டியுள்ளனர். இந்த கோர சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெஞ்சை … Read more