தலைப்பு செய்திகள்
துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த அதிசய குழந்தை!
துருக்கியில் இரண்டு நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இடிபாடுகளில் பெற்றோர் உயிரிழந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்ததால், இந்தக் குழந்தையை அதிசய குழந்தை என அழைக்கப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கனக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 5000-த்தை கடந்ததாக கூறும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறு வருகிறது, இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என … Read more
இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமனம்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி: குடும்பத் தகராறு: மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி! – இரு குழந்தைகள் பலியான சோகம்
தேனி மாவட்டம், போடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் கணவன்-மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரன்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழம்கொண்ட மொட்டைக்கிணறு ஒன்று இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து சத்தம் வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட … Read more
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானைக்கு நீச்சல் குளம் திறப்பு…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணி குளிப்பதற்காக ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டியை அமைச்சர் சேகர்பாபு இன்று திறந்து வைத்தார். இதையடுத்து யானை கல்யாணி அந்த நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்தது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு மிகப்பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல கோவில்களில், யானைகளுக்கு குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள நிலையில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் … Read more
ஈரோட்டில் பிப்.24ல் முதல்வர் பிரச்சாரம்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்.24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
கலவர வழக்கு: காங்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் சிறை| 6 months imprisonment for Congress LA in riot case
காந்திநகர்: கலவர வழக்கில் குஜராத் காங்., எம்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. குஜராத்தில் 2010-ல் ஜூனாகத் மாவட்டத்தில் இரு தரப்பு மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக காங். கட்சியைச் சேர்ந்த விமல் செளதாசமா உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விமல் செளதாசமா தற்போது காங். எம்.எல்.ஏ.வாக உள்ளார். 11 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு … Read more
621 கிராம் தங்க நகையைக் கொள்ளையடித்த மேற்கு வங்க ஊழியர்! – ஆறு மணி நேரத்தில் கைதுசெய்த கோவை போலீஸ்
கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகைப்பட்டறை வைத்திருப்பவர் பியூஸ். தங்க நகைகளை ஆர்டர் தருவோருக்கு ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுத்துவருகிறார். அவரது பட்டறையில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிவருகின்றனர். சதாம் உசைன் அந்த வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரும் அவரது பட்டறையில் பணியாற்றிவந்தார். இந்த நிலையில், சதாம் உசேன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்க நகைகளை ஃபினிஷிங் செய்யும் இடத்திலிருந்து கைச்சங்கிலி, தோடு தங்க நகைகளைப் பெற்றிருக்கிறார். அவற்றை பியூஸிடம் … Read more
ஹரி தன்னை மயக்கியதாக கூறியுள்ள பெண்: முகம் சுழிக்கும் ஒரு புகைப்படமும் காரணமும்…
தனது பிறந்தநாளின்போது தன்னை ஹரி மயக்கிவிட்டதாக கூறியுள்ள பெண்ணின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரே முகம் சுழிக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. ஹரி தன்னிடம்தான் தன் கன்னித்தன்மையை இழந்ததாக கூறியுள்ள பெண் இளவரசர் ஹரி, தான் தன்னை விட மூத்த ஒரு பெண்ணிடம் தன் கன்னித்தன்மையை இழந்ததாக தனது ‘Spare’ புத்தகத்தில் எழுதியுள்ள விடயம் புதுப்புது சர்ச்சைகளை உருவாக்கிவருகிறது. அந்தப் பெண் நான்தான் என்று ஊடகங்களுக்கு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பெண்ணின் பெயர் சாஷா (Sasha … Read more
அதானி விவகாரம்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி சரமாரி குற்றச்சாட்டு…
டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வரும் நிலையில், மத்திய பாஜக அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் சரமாரி குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். அதானி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு பணம் கொடுத்தார்? என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு நிறுவனம் ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை வெளியிட்டது. அதில், … Read more