`உரிமை இருந்தும் முட்டை விலையை நிர்ணயிப்பதில் வியாபாரிகள் கையே மேலோங்கியுள்ளது' பண்ணையாளர்கள் வேதனை!

மேலும், இந்த கூட்டத்துக்குப் பின் பேசிய முட்டைக்கோழி பண்ணையாளர்கள், “என் முட்டை, என் விலை என்ற நோக்கத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம், பண்ணையாளர்கள் கூட்டத்தில், முட்டைக்கான விலையை நிர்ணயிக்க வழி வகை செய்யப்பட்டது. ஆனால், தற்போது என்.இ.சி.சி அறிவிக்கும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்க வேண்டும் என்று முட்டை வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். எனவே, முட்டை விலையை நிர்ணயிப்பது வியபாரிகள்தான். இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் … Read more

இளவரசர் ஹரி -மேகன் குழந்தைக்கு திருமுழுக்கு: சார்லஸ் மன்னருக்கு அழைப்பு

இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியின் இரண்டாவது குழந்தை லிலிபெட்டுக்கு தனிப்பட்ட முறையில் திருமுழுக்கு அளிக்கப்பட்டதாகவும், இந்த விழாவானது அமெரிக்காவில் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சார்லஸ் மன்னர் கடந்த வாரம் நடந்த இந்த விழாவில் இளவரசர் வில்லியம் குடும்பம் மற்றும் சார்லஸ் மன்னர் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. @getty மார்ச் 3ம் திகதி நடந்த இந்த திருமுழுக்கு விழாவில் சுமார் 25 விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் இளவரசர் வில்லியம் குடும்பம், மன்னர் சார்லஸ் குடும்பம் என எவரும் … Read more

அதிமுக ஆட்சியின்போது விஜயகாந்த்மீது போடப்பட்ட அவதூறு வழக்கு வாபஸ்!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது போடப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்கியது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் கட்சியினர்மீது தொடரப்பட் அனைத்து அவதூறு வழக்குகளும் கைவிடப்படுவதாக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 2012 முதல் 2021 பிப்ரவரி வரை பதிவான அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 … Read more

சென்னை அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அருகே துரைப்பாக்கத்தில் குற்றவழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதிகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி துரைப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெளி மாநில தொழிலாளர் விவகாரம் வதந்தி பரப்பியவருக்கு முன் ஜாமின்| Bail before the person who spread the rumor about the issue of foreign workers

புதுடில்லி, தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூகவலைதளத்தில் வதந்தி பரப்பிய வழக்கறிஞருக்கு வரும், 20ம் தேதி வரை முன் ஜாமின் அளித்து புதுடில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் பணியாற்றும் பீஹார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில், ‘வீடியோ’க்கள் பரவியது. இதனால் தமிழகத்தில் பதற்றம் ஏற்பட்டது. வெளி மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். சமூக வலைதளத்தில் பொய் தகவலை பரப்பியவர்கள் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கறிஞர் பிரசாந்த் … Read more

இந்தியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சடுதியாக தங்க விலை குறைவு!

 தங்கவில்லை குறையுமா?குறையாதா?என்று பலர் எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில் சுங்க வரி அதிகரிப்பினால் தங்க மற்றும் வெள்ளி விலையில் திடீர் அதிகரிப்பு இருந்தது.  இந்நிலையில் பிப்ரவரி மாதம் அதிகமாக இருந்த தங்க மற்றும் வெள்ளிவிலை பிப்ரவரி இறுதியில் ரூ.5201 ஆக இருந்தது.  பின் மீண்டும் அதிகரித்தது.ஆனால் இன்று மறுபடியும் விலையில் சற்று குறைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று 24 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5527 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,216 ஆகவும் … Read more

அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும்! திருமாவளவன்

சென்னை: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் பாஜகவால் எந்த பயனும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மோதலின் உச்சக்கட்டமாக, பாஜகவின் தொழில்நுட்பபிரிவைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் உள்பட தொடர்ந்து பலர் … Read more

அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை: அமர்பிரசாத் ரெட்டி கண்டனம்

சென்னை: அண்ணாமலையின் செயல்பாட்டுக்கு அதிமுகவின் சான்றிதழ் தேவையில்லை என அமர்பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தலைவர் தேர்வு எப்படி என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம் என்று அதிமுகவுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அதிமுகவினர் கண்டத்திற்கு அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான ரெட்டியின் பதிலடியால் இரு கட்சிகளின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.