8000 அப்பாவி உக்ரேனிய மக்களை கொன்று குவித்த ரஷ்யா: ஐ.நா

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த பின்பு கிட்டதட்ட 8000 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. வெடிகுண்டு தாக்குதலால் உயிரழப்பு ‘சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் ரஷ்யா 2022 பிப்ரவரி 24-ஆம் திகதி உக்ரைனுக்குள் நுழைந்து அதன் தாக்குதலை தொடங்கியது. அதன்படி, உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடங்கி சரியாக ஒரு வருடம் நிறைவடையுள்ளது. இப்போரில் வெடிகுண்டு வீசியதில் ஆயிரக்கணக்கான உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டதோடு அல்லாமல் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். Reuters இந்த … Read more

பொது இடங்களில் மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது! ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா

சென்னை: சமூக வலைதள தகவல்களை பார்த்து வட மாநிலத்தவர்கள் மீது தாக்குதல்  நடத்தப்பட்டு உள்ளதாகவும், பொது இடங்களில் தனிப்பட்ட, மொழி வாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது என ரயில்வே ஏ.டி.ஜி.பி. வனிதா கூறினார். தமிழ்நாட்டில் சமீக நாட்களாக வடமாநிலத்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகின்றன. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், எந்தவித முன்யோசனையும் இன்றி வடமாநிலத்தவர்களை விரட்டியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். ஆனால், வடமாநிலத்தவர்கள் இல்லையென்றால், தமிழ்நாட்டின் வர்த்தகம் முடங்கி விடும், … Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான மேலும் 2 பேருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த குர்தீஷ் பாஷா, அஷ்ரப் உசைன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஆரிப், ஆசாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இருவரை கைது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

எதிரி சொத்து விற்பனை வாயிலாக அரசுக்கு ரூ.3,400 கோடி வருவாய்| 3,400 crore revenue through enemy property

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :எதிரி சொத்து தொடர்பான பிரச்னைகளை தீர்வு கண்டு, அவற்றை விற்பனை செய்ததன் வாயிலாக, அரசுக்கு 3,400 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கடந்த, 1947ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் வசித்த பலர், தங்கள் நிலம், நகை ஆகியவற்றை இங்கேயே விட்டு விட்டு, பாகிஸ்தானுக்கு சென்று குடியேறினர். அவர்கள் விட்டுச் சென்ற நிலம், நகை, பங்குகள் ஆகியவை எதிரி சொத்துக்கள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், … Read more

"உங்களை நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன் அம்மா!"- ஸ்ரீதேவி குறித்து ஜான்வி கபூர் உருக்கம்

தமிழ், இந்தி, தெலுங்கு எனப் பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி. இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாடப்பட்டவர். தமிழில் `துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, தன் நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களில் முத்திரைப் பதித்தவர். 1996-ல் போனி கபூரைத் திருமணம் செய்துகொண்ட அவர், அதன் பிறகு எந்தப் படமும் நடிக்காமலிருந்தார். பதினைந்து வருடங்கள் பெரிய திரையில் நடிக்காமலிருந்த … Read more

3-வது டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியில் இணையும் பவுலர்! பல அதிரடி மாற்றங்களால் இந்தியாவுக்கு நெருக்கடி

இந்தியா அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி பல அதிரடி மாற்றங்களுடன் களமிறங்குகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி இந்தியா அவுஸ்திரேலியாவிற்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.  2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த அவுஸ்திரேலிய அணி வரும் போட்டிகளில் வெற்றி பெற தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. அணியில் மாற்றம் 3வது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.  … Read more

“ரஷ்யா தனது இருப்பை காத்துக்கொள்ள போராடி வருகிறது” ரஷ்ய அதிபர் புடின் பேச்சு

அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஆண்டுக்கு ஒருமுறை பேசுவதை வழக்கமாகக் கொண்ட ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டு இந்த கூட்டத்தை நடத்தவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு மற்றும் மக்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதிலளிக்கும் நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் … Read more

வெளிநாடு தப்பிய பொருளாதார குற்ற தடுப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க டிஜிபி உத்தரவு

சென்னை: வெளிநாடு தப்பிய பொருளாதார குற்ற தடுப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க டிஜிபி உத்தரவு அளித்துள்ளார். ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிறுவனங்களின் மோசடி வழக்கு பற்றி அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யவும் இந்தியாவில் தலைமறைவாக உள்ள நிதிநிறுவன மோசடி குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கவும் டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிடி ஆயோக்கிற்கு புதிய தலைமை செயல் அதிகாரி| New Chief Executive Officer for Nidi Aayog

புதுடில்லி: ‘நிடி ஆயோக்’ அமைப்பின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, பி.வி.ஆர். சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த பரமேஸ்வரன் ஐயர், உலக வங்கியின் செயல் இயக்குனராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவரது இடத்துக்கு பி.வி.ஆர். சுப்ரமண்யம் நியமிக்கப்பட்டுள்ளார். பரமேஸ்வரன் ஐயர், அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் டி.சி.,யில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் செயல் இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார். இவர் மூன்று ஆண்டுகள் இப்பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரமண்யம், நிடி ஆயோக்கின் தலைமை … Read more

தமிழக வனத்துக்குள் ஊடுருவிய‌ வேட்டைக் கும்பல் – ஊட்டியில் முகாமிட்டு வனத்துறை தீவிர சோதனை!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் உள்ள அரசூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிலர் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் இருப்பதாகவும் சிலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினர், அவர்களின் தங்குமிடத்தைச் சோதனை செய்துள்ளனர். அவர்களிடமிருந்த பைகளை சோதனை செய்ததில் புலித்தோல், புலிநகம், மற்றும் எலும்புகள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து, தொடர்புடைய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு … Read more