பயங்கரவாதத்திற்கு நிதியுதவி முக்கிய புள்ளி அதிரடி கைது| Terrorist financing is the key point of action

ஸ்ரீநகர், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கில், ஸ்ரீநகரைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். ஜம்மு – காஷ்மீர் சிவில் சங்கங்கள் என்ற அரசு சாரா அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்ததை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, 2020 அக்டோபரில் கண்டுபிடித்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய புள்ளியான இர்பான் மெஹ்ராஜ் என்பவரை, ஸ்ரீநகரில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று … Read more

பிரான்ஸ் தேசிய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக எம்பாப்பே நியமனம்!

அடுத்த சர்வதேச போட்டிகளுக்கான பிரெஞ்சு தேசிய அணியின் புதிய கேப்டனாக கைலியன் எம்பாப்பே இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கோல் நாயகன் 24 வயதான கைலியன் எம்பாப்பே பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கத்தார் நாட்டில் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரில், எம்பாப்பே 8 கோல்கள் அடித்து மிரட்டினார். @Soccrates Images/GettyImages அதனைத் தொடர்ந்து பிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் உயர்ந்தார். கிளப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி பல சாதனைகளையும் … Read more

புரி ஜெகன்நாதர் கோவிலில் எலி தொல்லை இயந்திரம் வைத்து விரட்ட பூசாரிகள் எதிர்ப்பு| Priests protest against rat pest control machine in Puri Jagannath temple

புவனேஸ்வர், ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோவிலில் எலி தொல்லைக்காக பொருத்தப்பட்ட எலி விரட்டும் இயந்திரம், கடவுளின் துாக்கத்தை கெடுப்பதாக பூசாரிகள் குற்றஞ்சாட்டியதால், அந்த இயந்திரம் அகற்றப்பட்டது. வாய்ப்பு ஒடிசாவின் புரியில், 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகன்நாதர் கோவில் உள்ளது. இங்கு, எலி தொல்லை மிக தீவிரம் அடைந்துஉள்ளது. எண்ணில் அடங்காத எலிகள் கோவில் முழுதும் சுற்றி வந்து அசுத்தம் செய்கின்றன; சுவாமிக்காக நெய்யப்பட்ட ஆடைகளை கடித்து குதறி கிழித்து விடுகின்றன. இதே நிலை நீடித்தால், மரத்தாலான சுவாமி … Read more

நெல்லை: ”நரேந்திரரே தனித்து வா… 40 இடங்களில் தாமரையை மலரச்செய்வோம்” – பரபரக்கும் பா.ஜ.க போஸ்டர்கள்

நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் நடைபெறவிருக்கும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் காலூன்றச் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மாநிலத் தலைவரான அண்ணாமலை அதிரடி அரசியல் நடத்திவருகிறார். அதனால் அவரது செயல்பாடுகளை விமர்சித்தும், ஆதரித்தும் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவருகின்றன. “2 வருடங்கள் தலைவராக இருந்த பிறகு கட்சிக்குள் இதைப் பேச ஆரம்பித்திருக்கிறேன்!”- அண்ணாமலை கூறுவதென்ன? ஆளுங்கட்சியான தி.மு.க-வை மட்டுமல்லாமல், தங்களின் கூட்டணியிலுள்ள அ.தி.மு.க-வையும் அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்துவருகிறார். அண்மையில் அவர், “அ.தி.மு.க-வுடன் கூட்டணி இல்லாமலேயே நம்மால் … Read more

ஒருநாள் போட்டியை பார்க்க சலிப்பா இருக்கு.. – சச்சின் டெண்டுல்கர் கருத்து…!

ஒருநாள் போட்டியை பார்க்கவே ரொம்ப சலிப்பா இருக்கிறது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். Ind Vs Aus 3 ஒருநாள் போட்டி – ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது. சலிப்பா இருக்கு … Read more

மார்ச் 31-ம் தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் மார்கத்தில் ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மார்ச் 31-ம் தேதி முதல் நெல்லை-திருச்செந்தூர் மார்கத்தில் ரயில்களில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது என்று தெற்குரயில்வே அறிவித்துள்ளது. நெல்லை-திருச்செந்தூர் விரைவு ரயில்வேகம் அதிகரிப்பால் 10நிமிடம் முன்னதாக திருச்செந்தூர் சென்றடையும். வேகம் அதிகரிப்பால் சென்னையில் புறப்படும் ரயில்கள் 1.10 மணி நேரம் முன்னதாக திருச்செந்தூர் சென்றடையும் என்று தெரிவித்துள்ளனர்.

தூக்கிலிடுவதை விட வலி குறைந்த தண்டனைக்கு… மாற்று என்ன?| What is the alternative to a less painful punishment than hanging?

புதுடில்லி, துாக்கிலிடுவதைத் தவிர, மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான மாற்று வழிகள் குறித்து விவாதிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவைப்பட்டால் நிபுணர் குழுவை அமைக்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.‘மரண தண்டனையை நிறைவேற்ற துாக்கிலிடுவது வலி நிறைந்த செயல்பாடு. அதனால், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு … Read more

திருடிய நகையை ஃபிரிட்ஜில் பதுக்கிய பெண் யூடியூபர்; காட்டிக்கொடுத்த சிசிடிவி… கைதுசெய்த போலீஸ்!

சென்னை, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி (37). இவரின் மனைவி மாலதி (31). சபாபதி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சபாபதி வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டார். அவரின் மனைவி மாலதியும் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய மாலதி, கதவைத் திறந்து உள்ளே சென்றார். யதேச்சையாக பீரோவைத் திறந்து பார்த்தபோது, அங்கு வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகைகள், பத்தாயிரம் ரூபாய் … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கைக்கு இந்தியா மறுப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானப் போக்குவரத்து உரிமைக்கான கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமானப் போக்குவரத்து உரிமைகளை அதிகரிப்பதற்கு இந்தியா பார்க்கவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகபட்ச இருக்கைகளை வாரத்திற்கு 50,000-ஆக அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது, ஆனால் சிந்தியா, “இந்த கட்டத்தில், நாங்கள் அதை அதிகரிக்கப் பார்க்கவில்லை” என்றார். travelobiz உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விமானச் … Read more

உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்

சென்னை: உலக தண்ணீர் தினத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக் கூட்டம் நடைபெறும். புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.