வாணி ஜெயராம் கொலை செய்யப்பட்டாரா? காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: வீட்டில் தனியாக வசித்து வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல திரையிசைப் பாடகி வாணி ஜெயராம்  . சென்னை நுங்கம்பாக்கம், ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் வாணி ஜெயராம் தனியாக வசித்து வந்த நிலையில், அவர் தலையில் காயத்துடன் மரணமடைந்து கிடந்ததால், இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்த ஆயிரம் விளக்குக் காவல்துறையினர், அவரது … Read more

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் குழுவுடன் வேளாண்துறை செயலாளர் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய உள்ளனர்.

`இனி தெருக்களில் நிர்வாணமாக சுற்றலாம்'- 29 வயது இளைஞனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் அனுமதி! ஏன் தெரியுமா?

ஸ்பெயின் நாட்டின் வலென்சியா(Valencia) பகுதியிலுள்ள ஒரு நகரத்தின் தெருக்களில் நிர்வாணமாகத் திரிந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்ட 29 வயது இளைஞனுக்கு ஆதரவாக மீண்டும் நிர்வாணமாகச் சுற்றித்திரிய நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. தீர்ப்பு ஸ்பெயினில் 1988-ம் ஆண்டு முதல் பொது நிர்வாணம் என்பது சட்டப்பூர்வமாக இருக்கிறது. அதன்படி யார் வேண்டுமானாலும் கைதுசெய்யப்படாமல் தெருவில் நிர்வாணமாக நடக்கலாம். இருப்பினும் வல்லடொலிட்(Valladolid), பார்சிலோனா(Barcelona) போன்ற சில பகுதிகளில் மட்டும் நிர்வாணத்தைக் கட்டுப்படுத்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் தான், அலெஜான்ட்ரோ கொலோமர்(Alejandro Colomar) … Read more

சுவிட்சர்லாந்துக்கு ஐ.நா அமைப்பு ஒன்று பாராட்டு: பின்னணியில் ஒரு அகதிக்குடும்பம் சந்தித்த பிரச்சினைகள்

சுவிட்சர்லாந்துக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்றின் பாராட்டு கிடைத்துள்ளது. பாராட்டு கிடைத்துள்ளதற்குக் காரணம் நான்கு குர்திஷ் இனச் சிறுவர்கள் மற்றும் அவர்களது தாயாருக்கு விரைவாக புகலிடம் வழங்கியதற்காகத்தான் சுவிட்சர்லாந்தை ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் ஆணையம் பாராட்டியுள்ளது. அந்த குர்திஷ் இனப்பெண் சிரியாவிலிருந்து தப்பி வந்த நிலையில், நாடுகடத்தப்படும் நிலையை அடைய நேர்ந்தது. ஆனாலும், மேல்முறையீட்டைத் தொடர்ந்து அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. யார் அந்தப் பெண்? 10 முதல் 14 வயது வரையுள்ள … Read more

வாணி ஜெயராமின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி இசை பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரது திடீர் மறைவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாணி ஜெயராம் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள திரையுலகினர், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இநத் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  … Read more

சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர்..!!

சென்னை: சென்னை அருகே கோவளம் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கினர். கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள் சஞ்சய், சொர்ணகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

“பாஜக மாநில தலைவர் அதிகாரமாகச் சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” – சொல்கிறார் புகழேந்தி

உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பெற்றபின் வீட்டில் ஓய்வில் இருக்கும் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணி) கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி நாகர்கோவில் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவான ஆணை பிறப்பித்திருக்கிறது. அதில் எங்களுக்கு மாற்று கருத்தே இல்லை. உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உச்ச நீதிமன்றம் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறது. பொதுக்குழுவை கூட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்தை தெரிந்துகொண்டு, … Read more

சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது! தமிழ்நாடு அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம்…

சென்னை: சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சென்னை, கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்கக் கோரி தூய்மை பணியாளர்கள் ஜெயபால், மாரிமுத்து ஆகியோர்  வழக்கு தொடர்ந்தனர்.  அவர்களது மனுவில், , குறைந்த ஊதியம் உள்ள தூய்மைப் பணியாளர்களான தங்களை ஓட்டுநர்களாகப் பயன்படுத்திவிட்டு, கல்வித் தகுதியை காரணம் காட்டி தற்போது … Read more

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் தொடங்கியது..!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து நடைபெறும் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.