மோடி குறித்த ஆவணப்படத்திற்கு தடை: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்| Supreme Court Notice To Centre Over Appeals Against Blocking BBC Series

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பிரிட்டனை சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த படத்திற்கு தடையும் விதிக்கப்பட்டது. … Read more

அதானி விவகாரம் தொடர்பாக விவாதிக்க மறுப்பு… எதிர்க்கட்சிகள் அமளி…. 6ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு…

இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ள அதானி நிறுவனம் மீது உலகின் முன்னணி நிதி மற்றும் வங்கித்துறை நிறுவனங்கள் மோசடி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அதானி பங்கு பத்திரங்களின் மதிப்பை பூஜ்ஜியமாக்கியது சுவிட்சர்லாந்து நாட்டின் கிரெடிட் சுவிஸ் வங்கி. இதனைத் தொடர்ந்து சிட்டி குரூப் வங்கியும் அதானியின் பங்கு பத்திரங்களை வைத்து கடன் வழங்க மறுத்துள்ளது. … Read more

ரிசர்வ் வங்கி இயக்குனர்களை சந்திக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: பிப்ரவரி 11-ல் ரிசர்வ் வங்கி இயக்குனர்களை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  சந்திக்கிறார். பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகான வழக்கமான நடைமுறையாக ரிசர்வ் வங்கி இயக்குனர்களை நிதியமைச்சர் சந்திக்கிறார்.  

பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்யும்: அதிமுக வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு| General Assembly to finalize candidate: Supreme Court order in AIADMK case

புதுடில்லி : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்ய பழனிசாமி – பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளடக்கிய அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டி, ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் 27 ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில், பழனிசாமி – பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். இதனால், கட்சியின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் … Read more

இடைத்தேர்தல்: “சுமார் 50,000 வாக்காளர்கள் தொகுதியிலேயே இல்லை" – தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், இரட்டை இல்லை சின்னம், தன்னுடைய கையொப்ப அதிகாரம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுவுக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்திருந்தது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், இந்த இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக டெல்லி தேர்தல் ஆணையத்திடம் இன்று புகார் மனு அளித்திருக்கிறார். சி.வி.சண்முகம் அதன்பின்னர் புகார் மனு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், “மிகப்பெரிய முறைகேடுகள் வாக்காளர் பட்டியலில் … Read more

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரிக்கும் சமையல் கலைஞராக பணியாற்றும் ஒருவரை சர்வதேச பொலிசார் கைது செய்துள்ளார்கள். பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது பிரான்ஸ் நாட்டிலுள்ள இத்தாலிய உணவகங்களில் பீட்சா தயாரிக்கும் சமையல் கலைஞராக பணியாற்றிவந்தவர் Edgardo Greco (63). ஒரு கட்டத்தில் சொந்தமாக ஒரு இத்தாலிய உணவகத்தையே நடத்திவந்துள்ளார் அவர். அவர் தற்போது சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போலால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிரவைக்கும் பின்னணி உண்மையில் இந்த Edgardo, இத்தாலியில் Ndrangheta என்னும் ஒரு … Read more

அதானி விவகாரத்தில் அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல்…

அதானி விவகாரத்தில் அரசு செய்வதற்கு ஒன்றுமில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரஹ்லாத ஜோஷி தெரிவித்துள்ளார். தேசிய மயமாக்கப்பட்டா வங்கிகளில் உள்ள பொதுமக்கள் பணத்தை கடனாகப் பெற்று பங்கு வர்த்தகத்தில் மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று சவடால் விட்ட அதானி நிறுவனம் ஒருவாரமாக அதற்கான முகாந்திரம் இல்லாமல் திணறி வருவதை அடுத்து அதன் பங்குகளின் மதிப்பு சந்தையில் குறைந்து வருவதோடு சொத்து மதிப்பும் … Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகள் நாளை செயல்படும்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் உத்தவிட்டுள்ளார்.  புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

குழந்தை திருமணம்: அசாமில் 1,800 பேர் கைது| “Zero Tolerance”: Over 1,800 Arrested Across Assam Over Child Marriages

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கவுகாத்தி: அசாம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக 1,800 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா கூறுகையில், குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறியவர்கள் மீது மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 1,800 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான மனிதநேயமற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சகித்து கொள்ள மாட்டார்கள். குழந்தை திருமணம் தொடர்பாக 4 … Read more