உலகிலேயே முதன்முதலில் தோன்றிய உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆருத்ரா தரிசனம்…

சென்னை: உலகிலேயே முதன்முதலில் தோன்றிய பழம்பெரும் சிவன்கோவிலான உத்திரகோச மங்கை சிவாலயம் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று ஆருத்ரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த … Read more

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரம்

மதுரை: மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. காளைகளுக்கான தகுதிச் சான்று அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களால் வழங்கப்படவுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அதிர்ச்சி தகவல்| Shocking information for men affected by Corona

புதுடில்லி,:பீஹாரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்து உயிரணுக்களின் வீரியம் குறைவதாக தெரியவந்துள்ளது. பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சமீபத்தில் ௩௦ ஆண்களிடம் சோதனை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும், ௨௦௨௦ அக்., மற்றும் ௨௦௨௧ ஏப்., கால இடைவெளியில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ௧௯ – ௪௩ வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களது விந்தணுவில், கொரோனாவுக்கு காரணமான, ‘சார்ஸ்கோவ் – ௨’ வைரஸ் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. … Read more

“அண்ணாமலைக்கு அடிப்படை கொள்கை, லட்சியம் என்பது இல்லை" – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் பகுதி திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக நிதி வழங்கப்பட உள்ளதை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட திருக்கோயில் நிர்வாகிகளை நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியிலிருந்து அரசு அதிகாரிகள் முன்னிலையில், பேருந்து மூலம் வழி அனுப்பி வைத்தார் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறார். அமைச்சர் … Read more

ஒன்றுக்கு இரண்டு மகள்கள் இருந்தும் கவனிக்க ஆள் இல்லையே! மனமுடைந்து தம்பதி தற்கொலை

குடும்பத்தில் இரண்டு மகள்கள் இருந்தும் கவனிக்க யாருமில்லையே என்ற விரக்தியில் தம்பதி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வயதான தம்பதி தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி முருகேசன் (65), பாப்பா (60). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்த நிலையில், அவரவர்கள் கணவருடன் தனித்தனியே வாழ்ந்துவருகின்றனர். வயதான தம்பதி, அப்பளம் போடும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்துவந்துள்ளனர். அதில் கிடைத்த கூலிப் பணத்தை வைத்து, காலத்தை நகர்த்தி வந்ததாகச் … Read more

ரஜினிகாந்த் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர் வி.எம்.சுதாகர் காலமானார்…

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர் வி.எம்.சுதாகர் உடல்நலம் பாதிப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக இருந்தவர்  வி.எம். சுதாகர் . இவர் நீண்ட காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை   காலமானார். அவரது மறைவை,  ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 சரிந்து ரூ.41,520க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து ரூ.5,190க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50 காசுகள் குறைந்து ரூ.73.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Doctor Vikatan: உணவுகளுக்கும் உயர் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்புண்டா?

Doctor Vikatan: உணவுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் தொடர்பு உண்டா? சில வகை உணவுகள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், சில உணவுகள் குறைக்கும் என்றும் சொல்லப்படுவது உண்மையா? ஹை பிபி, லோ பிபி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன் ஸ்ரீமதி வெங்கட்ராமன் Doctor Vikatan: சில உணவுகளைச் சாப்பிடும்போது வயிற்று உப்புசம் வருவது ஏன்? உணவுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் நிச்சயம் … Read more

புரொபஷனல் கொரியர் நிறுவன இடங்களில் 3வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை…

சென்னை: சென்னையி உள்ள பிரபல கொரியர் நிறுவனமான  புரொபஷனல் கொரியர் நிறுவன இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக … Read more

மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களில் 4 மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரம்: மண்டபம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்களில் 4 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். சக மீனவர்கள் தேடிச்சென்றும் கண்டுபிடிக்க முடியாததால், மீனவ கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.