இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தகவல்…

சென்னை: மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ந்தேதியுடன் கெடு முடிவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறிய நிலையில், பின்னர், ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக பிப்ரவரி 28ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்னும் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கவில்லை என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.  தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணி நவம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கியது. டிசம்பர் மாதத்தில் இருந்து … Read more

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வு நிறைவடைந்தது

சென்னை: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2, குரூப்-2 ஏ முதன்மை தேர்வு நிறைவடைந்தது. சென்னையில் 32 மையங்கள் உள்பட 20 மாவட்டங்களில் 186மையங்களில் குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வு நடைபெற்றது. காலையில் தமிழ் தகுதித் தேர்வு தாமதமாக நடந்த நிலையில் இரண்டாம் தாள் தேர்வு 2.30 மணிக்கு தொடங்கியது. பதிவெண் வரிசையில் இருந்த வேறுபாட்டால் காலையில் வினாத்தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனு: தமிழக அரசு திரும்பப் பெற்றது| Writ Petition against NEET Examination

புதுடில்லி: ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு எதிராக முந்தைய அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த, ‘ரிட்’ மனுவை தமிழக அரசு நேற்று திரும்பப் பெற்றது. எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர, ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சில், 2017 – 18ல் அறிவித்தது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க., அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு, … Read more

எடப்பாடி வசமான அதிமுக; ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்? – விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க, எடப்பாடி வசமானது. ஓ.பி.எஸ். இருப்பினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பி.எஸ் தரப்பு கூறிவருகின்றது. இதற்கிடையில், மக்களிடம் நீதி கேட்கப்போவதாகவும், அதற்கான வேலைகளைக் கூடிய விரைவில் தொடங்கப்போவதாகவும் ஓ.பி.எஸ் நேற்று தெரிவித்தார். இத்தகைய நெருக்கடியான சூழலில், ஓ.பி.எஸ்ஸின் அடுத்தகட்ட அரசியல் … Read more

நடிகர் விஜயை வைத்து உலக சாதனை படைத்த 18 வயது இளம்பெண்!

கேரளாவில் இளம்பெண்ணொருவர் நடிகர் விஜயை படமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். விஜய் ரசிகை கேரள மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணா (18) என்ற இளம்பெண் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை ஆவார். அவர் மீதான அன்பின் வெளிப்பாடாக விஜய்யின் உருவப்படத்தை ஸ்டென்சில் முறையில் கருப்பு பேனாவைப் பயன்படுத்தி அப்படியே வரைந்துள்ளார். உலக சாதனை ஒரு மணி நேரம் 56 நொடிகளில் 22க்கு 28 இன்ச் என்ற அளவில் அவர் வரைந்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார். Asian book … Read more

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில் நிலா திருவிழா…

சென்னை: தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, சென்னையில் மெரினா, பெசன்ட்நகர் கடற்கரை உள்பட 30 இடங்கள் உள்பட மாநிலம் முழுவதும் 200 இடங்களில்,  3 நாட்கள் நிலா திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் பிப் 28ம் தேதி  தேசிய அறிவியல் தினம், கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி மத்தியஅரசு அறிவியல்பூர்வமான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு வரும் 28ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட … Read more

வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடக்கம்: ரயில்வே நிர்வாகம் தகவல்

வேலூர்: வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தை ரூ.329 கோடியில் மறு சீரமைப்பு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வேலூர் கோட்டை நகரம் போன்ற வடிவமைப்புடன் காட்பாடி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

ஜோயாலுக்காஸ் நகைக்கடையின் ரூ.305 கோடி சொத்துக்கள் முடக்கம்| 305 crore assets of Joyalukas Jewelers are frozen

புதுடில்லி: கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக வைத்து செயல்படும் ஜோயாலுக்காஸ் நகைக்கடை குழுமத்திற்கு நாடு முழுதும் மற்றும் வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம், சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணத்தை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, திருச்சூர் உட்பட பல இடங்களில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறிய அதிகாரிகள், ‘ஜோயாலுக்காஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 305 … Read more

நீட் தேர்வுக்கு எதிரான உச்ச நீதிமன்ற மனுவை திரும்பப் பெற்றதா திமுக அரசு? – நீட் விலக்கின் நிலை என்ன?

நீட் தேர்வு சட்ட திருத்ததுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றதாக செய்திகள் வெளியானது. நீட் மனுவை திரும்பப்பெற்றதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தது. அதற்குரிய விளக்கத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், “அதிமுக ஆட்சியில் அவசர கோலத்தில் காலாவதியான சட்டத்தைக் குறிப்பிட்டு நீட் ரத்து செய்ய மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை திரும்பப் பெற்று புதிய மனு தமிழக அரசு சார்பாக … Read more

ஆறு கோடி செலவில் சொகுசு வில்லா வாங்கிய கோலி! 400 சதுர அடியில் நீச்சல் குளம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ரூ.6 கோடி செலவில் புதிய வில்லா ஒன்றை வாங்கியுள்ளார். விராட் கோலி மகாராஷ்டிராவின் அலிபாக்கில் உள்ள அவாஸ் கிராமத்தில் விராட் கோலி வாங்கியுள்ள சொகுசு வில்லாவின் விலை ஆறு கோடி என்று கூறப்படுகிறது. சுமார் 2,000 சதுர அடியில் உள்ள அந்த வில்லாவுக்காக முத்திரைத் தொகையாக மட்டும் ரூ.36 லட்சத்தை கோலி செலுத்தியுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த வில்லாவில் 400 சதுர அடி நீச்சல் … Read more