வீட்டில் கஞ்சா செடி… நண்பர்களை கொண்டு மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ – இன்ஜினியர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரில், 34 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர், 30 வயதான பெண்ணை கடந்த, 2011ல் திருமணம் செய்து ஒரு குழந்தையுடன், பெங்களூரின் சம்பிகேஹல்லி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அப்பெண் நேற்று, சம்பிகேஹல்லி போலீஸ் ஸ்டேஷனில் கணவர் மீது பரபரப்பு புகாரளித்துள்ளார். அவர் கூறிய புகாரில், ‘‘என் கணவர் என்னை அவரின் நண்பர்கள் இருவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளுமாறு வற்புறுத்தி, என்னை அடிக்கிறார். அவரின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுடன் என்னை சேர்த்து பலவந்தமாக … Read more

வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ருத்ர தாண்டவமாடிய இந்திய வீரர்கள்! இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம்!

டாக்கா: வங்க தேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  இந்திய வீரர்கள் ருத்ர தாண்டம் அடியுள்ளனர்.  இஷான் கிஷான் இரட்டை சதம், கோலி ஒற்றை சதம் அடித்து சாதனைகளை செய்துள்ளனர். இதன் காரணமாக,  இஷான் கிஷன் உலக சாதனை வரிசையில் இடம் பிடித்துள்ளார். அதுபோல, ஒருநாள் போட்டியில் 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. மிர்புரில் நடந்த முதலாவது … Read more

புயல் வரும் நாளில் சாலையில் பாஜக கொடி கட்டிய விவகாரம்: அண்ணாமலை வருத்தம்..!

சென்னை: புயல் வரும் நாள் அன்று நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் வைத்திருந்த பாஜக கொடி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து டிவிட்டரில் கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலருக்கு பதிலளித்த பாஜக தலைவர் அண்ணாமலை; உங்களுடைய கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரிடம் இது குறித்து அறிவுறுத்தியுள்ளோம். அடுத்த முறை நடக்காதவாறு பார்த்துக் கொள்கிறோம். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் மகா நந்தி சிலை மீது விரிசல் – அதிகாரிகள் சொல்வதென்ன?!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக மக்களை கவர்ந்திருக்கும் பெரிய கோயிலின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் பெரிய நந்தி இருந்து வருகிறது. கோயிலுக்கு வருபவர்கள் நந்தியை தவறாமல் தரிசித்து செல்வார்கள். இந்த நிலையில் நந்தி சிலை மீது இரண்டு அடி நீளத்துக்கு ஏற்பட்டிருக்கும் விரிசல் பெரிய கோயில் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய … Read more

வெப் சீரிஸில் அதிகரிக்கும் ஆபாசங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி…

டெல்லி: வெப் சீரிஸில் அதிகரிக்கும் ஆபாசங்களை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன? பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்தார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு, வெப் தொடர்கள் மற்றும் சமூக வலைதளங்களில்  ஆபாசங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோல ஆபாசம் மற்றும் அநாகரிகமான காட்சிகளை தடுக்க மத்தியஅரசு என்ன நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என … Read more

மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை: மாண்டஸ் புயலால் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.3.45 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகியுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயம்பேடு, ஈக்காட்டுதாங்கல், சின்னமலை, கிண்டி ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகள் புயலால் சேதமாகியுள்ளது. அண்ணா நகர், அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள், இதரப் பொருட்கள் சேதமாகியுள்ளது. 

48,500 ஆண்டுகள் பழைமையான ஜோம்பி வைரஸ்களின் திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

`ஜோம்பி வைரஸ்கள்’ சில திரைப்படங்களால் இந்த பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியது.. இந்த `ஜோம்பி வைரஸ்கள்’ பற்றி சமீபத்தில் வெளிவந்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவும் ஆனது.. சமீபத்தில் ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உறைபனி ஏரியில் 48,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த 13 வைரஸ்களை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ்களை ‘ஜோம்பி வைரஸ்கள்’ Zombie Virus என்று விஞ்ஞானிகள் அழைகின்றனர். உலகத்தரத்தில் “தேசிய தொல்லுயிர் படிம அருங்காட்சியகம்’’ தமிழகத்தில் அமைய வேண்டும்… ஏன்? காலநிலை மாற்றம் … Read more

உலகக்கோப்பையில் இனி விளையாடமாட்டேன்! தோல்விக்குப்பின் சூசகமாக கூறிய நெய்மர்

கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 போட்டியில், காலிறுதியில் தோல்வியடைந்த பிறகு நெய்மர் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். உலகக்கோப்பையில் மீண்டும் விளையாடுவேன் என ‘உத்தரவாதம் இல்லை’ என கூறி, சர்வதேச கால்பந்தில் இருந்து விலகலாம் என்று பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் சூசகமாக கூறியுள்ளார். கத்தாரில் வெள்ளிக்கிழமை இரவு எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதி போட்டியில், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசில், குரோஷியா அணிக்கு எதிராக தோல்வியை … Read more

போரினால் பாதிக்கப்படும் உக்ரேனியர்களின் துன்பங்கள் குறித்து பிரார்த்தனையின்போது போப் பிரான்சிஸ் கண்ணீர்…

மாஸ்கோ: ரஷியா, உக்ரைன் போரினால், உக்ரைன் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து பிரார்த்தனை நிகழ்ச்சியில் வருத்தத்துடன் பேசிய போப் பிரான்சிஸ் கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்தோரிடையே அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இத்தாலியில் ஒரு தேசிய விடுமுறையின் போது, மாசற்ற கருத்தரிப்பு விழா மத்திய ரோமில் மடோனாவில் உள்ள  ஒரு சிலையின் அடிவாரத்தில்,  பாரம்பரிய பிரார்த்தனை நடந்தது.   இந்த பிரார்த்தனையின் போது உக்ரேனியர்களின் துன்பங்களைக் குறிப்பிட்ட போப் பிரான்சிஸ் உடைந்து … Read more

மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவியும் மக்களை வெளியேற்றி வரும் போலீசார்

சென்னை: மெரினா பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவியும் மக்களை போலீஸார் வெளியேற்றி வருகின்றனர். எச்சரிக்கையை மீறி, சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை புகைப்படம் எடுத்துள்ளனர். தடை விதித்தும் மெரினா, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை மீட்புப் பணிகளை தாண்டி மக்களை அப்புறப்படுத்தி வரும் காவல்துறையினர்.