ஊட்டி வரை எதிரொலித்த மாண்டஸ் புயலின் தாக்கம்; கடும் பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மாண்டஸ் புயலாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திலும் மாண்டஸ் புயலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. ஊட்டியில் மழை நீலகிரியில் தற்போது பனிக்காலம் என்றாலும், இன்று காலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. … Read more

வெற்றியை ஊகித்த தாத்தா…1 மில்லியன் டாலர் லொட்டரி பரிசு அள்ளிய 18 வயது இளைஞர்!

அமெரிக்காவின் டல்லாஸ் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய டால்டன் ராட்ஃபோர்ட் என்ற இளைஞருக்கு சுமார் 1 மில்லியன் மதிப்புள்ள லொட்டரி பரிசு தொகை கிடைத்துள்ளது. லொட்டரி வெற்றி அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் உள்ள டல்லாஸ் பகுதியை சேர்ந்த டால்டன் ராட்ஃபோர்ட் என்ற இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை தனது முதல் பணியை முடித்து விட்டு, இரண்டாவது பணிக்காக சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது மக்கள் சேவை துறையில் பணிபுரிந்து வரும் டால்டன்  ராட்ஃபோர்ட், டல்லாஸ் நெடுஞ்சாலையில் உள்ள வில்ஸ் உணவு … Read more

ரூ.1.14 கோடியில் அமைக்கப்பட்டு உதயநிதியால் திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம்…..!

சென்னை: மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை கண்டு ரசிக்கும் வகையில், தமிழகஅரசும், மாநகராட்சியும் ரூ.1.14 கோடி செலவில் அமைத்து, திறக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான   கடற்கரை மரப்பாலம் 12 நாளில் உடைந்து நொறுங்கிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. இது சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என மாநகர மேயர் பிரியா தெரிவித்து உள்ளார். இந்தியாவிலே முதல்முறையாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க … Read more

வடதமிழக கடலோரத்தில் இன்று மதியம் முதல் மாலை வரை மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி

சென்னை: வடதமிழக கடலோரத்தில் இன்று மதியம் முதல் மாலை வரை மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புயல் கரையை கடந்த பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 3 மணிநேரத்தில் வலுவிழக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்; 24 பெண்கள் போட்டியிட்டதில் ஒருவர் மட்டுமே வெற்றி!

இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிபெற்று இருக்கிறது. இத்தேர்தலில் பாஜக 6 பெண்களையும், ஆம் ஆத்மி கட்சி 5 பெண்களையும், காங்கிரஸ் 3 பெண்களையும் வேட்பாளர்களாக நிறுத்தின. இதுதவிர சுயேச்சை பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 24 பெண்கள் போட்டியிட்டதில், பா.ஜ.க சார்பாக களமிறக்கப்பட்ட ரீனா என்ற பெண் மட்டும் வெற்றி பெற்று இருக்கிறார். ரீனா கடந்த 2021-ம் ஆண்டு நடந்த … Read more

16மணி நேரத்தில் பல்டி: சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என அறிவிப்பு…

சென்னை: இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இரவு பேருந்துகள் இயங்காது என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பேருந்துகள் சேவை நிறுத்தப்படாது., வழக்கம்போல் இயங்கும் என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவித்து உள்ளது. அதுபோல் ஆம்னி பேருந்து சேவை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மாண்டஸ்புயல் சென்னை … Read more

பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து தற்போது 2,386 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 140 கனஅடி உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 2,521 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 595 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.

G-20-க்குத் தலைமை… இந்தியா சாதிக்கப் போவது என்ன?

2022-ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் இச்சமயத்தில், சர்வதேச அளவில் இந்தியா மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நகர்வில் முக்கியமாகக் கருதப்படுவது, G-20 என அழைக்கப்படும் இருபது நாடுகள் அடங்கிய கூட்டமைப்புக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் இந்தோனேசியாவிடமிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது. G-20 மாநாடு ஜி-20 மாநாடு: முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட பைடன், ஜி ஜின்பிங் – இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சு மேலும், அதிகாரம் நிறைந்த அமைப்பான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின்கீழ் இயங்கும் … Read more

மகாராணியாரையே கேலி செய்யும் மேகன்: ராஜ குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர்

இளவரசர் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் சோகத்தை உருவாக்கியுள்ளது. அந்த தொடரில், இளவரசர் வில்லியம் மீதும், அவரது மனைவி கேட் மீதும், மன்னர் சார்லஸ் மீதும் ஹரியும் அவரது மனைவி மேகனும் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். முதன்முறை மகாராணியாரை சந்திக்கச் சென்ற மேகன் அந்த தொடரின் ஒரு காட்சியில், தான் மகாராணியாரை முதன்முதலாக சந்திக்கும் காட்சியையே கேலிப்பொருளாக்கியிருக்கிறார் மேகன். தானும் ஹரியும் முதன்முறையாக மகாராணியாரை சந்திக்கப்போகும் காட்சியை விவரிக்கிறார் மேகன். காரில் செல்லும்போது மேகனிடம் … Read more

கொட்டும் மழையிலும் 4வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகாதீபம்…! பக்தர்கள் வியப்பு…

திருவண்ணாமலை: ஈசனின் அக்னிஸ்தலமான  அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்று 4வது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையிலும் மகாதீபம் அணையாமல் எரிந்துகொண்டே பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இரு பக்தர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  10 நாட்கள் திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான அண்ணாமலையார் மலையின் 2,668 அடி உயர;ததில்  … Read more