நாமக்கல்: காய்ச்சலுக்கு சிறுமி பலி! – நோய் தடுப்பு நடவடிக்கையில் இறங்கிய மாவட்ட நிர்வாகம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகிலிருக்கும் தன்செய் இடையாறு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்-ஜெயஸ்ரீ தம்பதிக்கு, ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு சிறு குழந்தைகள் இருக்கின்றனர். இதில், தம்பதியின் மூன்றரை வயது பெண் குழந்தையான சிவதர்ஷினி கடந்த சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டு, அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால், அந்தக் குழந்தையை அவரின் பெற்றோர், பரமத்தி வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். ஆனால், அந்தக் குழந்தையின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைந்ததால், கரூரிலுள்ள அரசு மருத்துவக் … Read more

தினமும் பத்தாயிரம் ஸ்டெப்ஸ் நடைப்பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

பொதுவாக தினமும் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியத்தையே வழங்குகின்றது. குறிப்பாக ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் தூரம் நடைப்பயிற்சி செய்வது நிறைய ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக சமீபத்தில் நிறைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடல் பருமன் உள்ளவர்கள், உடல் எடையை குறைக்கவும் கட்டுப்பாட்டிலும் வைக்க நினைப்பவர்கள் 10,000 ஸ்டெப்ஸ் தொலைவு நடப்பது நல்லது எனப்படுகின்றது . அப்படி நடக்கும்போது நம்முடைய உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். அந்தவகையில் தற்போத தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன … Read more

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலி! சட்டசபை செயலகம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று, எம்எல்ஏவாக இருந்து வந்தார். இவர் கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக, தமிழக சட்டசபை … Read more

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ல் வழித்தடங்கள் 3,5-ல் தண்டவாளங்கள் அமைக்க ரூ.163 கோடி ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2-ல் வழித்தடங்கள் 3,5-ல் தண்டவாளங்கள் அமைக்க ரூ.163.31 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் மிட்சுயி அன்ட் கோ நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், மாதவரம் முதல் சி.எம்.பி.டி. வரையிலும் தண்டவாளங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய உணவு கழகத்தில் ஊழல்: 50 இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு| Corruption in Food Corporation of India: CBI in 50 places Raid

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய உணவு கழகத்தில் நடைபெற்ற மெகா ஊழல் புகார் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு நிறுவனமான எப்.சி.ஐ., எனப்படும் இந்திய உணவு கழகத்திற்கு தானியங்கள் சப்ளை செய்ததில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நடந்த விசாரணையில்,தரமற்ற உணவு தானியங்கள் சப்ளை செய்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்தது தெரியவந்து. இது தொடர்பாக, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து … Read more

`என் புள்ள வயசுக்கு வந்தாலும் அது துணிய நான் துவைப்பேன்'னு அப்பா சொன்னாரு… – ஜன்னலோரக் கதைகள் – 13

என் அலுவலகத்தில் அறிமுகமான தோழி அவள். நான் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் என் குழுவில் சேர்ந்தாள். அவளின் பளிச் முகம், மனதில்படும் எதையும் வெளிப்படையாகப் பேசும் குணம், எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இவையெல்லாம் அவள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணமாக அமைந்தன. தோழிகளானோம். எங்களின் மதிய உணவுக் குழுவிலும் இணைந்து கொண்டாள். அலுவலகம் சார்ந்து பேசும்போது கண்கள் படபடக்கப் பேசுபவள், குடும்பம் சார்ந்து பேசும்போது சற்றே அமைதியாவாள். இதைப் பலமுறை கவனித்து இருந்ததால், அவளின் குடும்பம் … Read more

அமெரிக்காவில் மொத்தமாக ஸ்தம்பித்த விமான சேவைகள்: ஆயிரக்கணக்காண பயணிகள் தவிப்பு

அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகள் மொத்தமாக ஸ்தம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்தம்பித்த விமான சேவை இதனையடுத்து, பயணிகள் தங்கள் விமான சேவை நிறுவனங்களை தொடர்புகொள்ள வேண்டும் என ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. @getty தொழில்நுட்ப கோளாறினை சீரமைக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், உலகெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிலையில் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, புறப்பட தயாரான விமானங்கள் திடீரென்று … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு: இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு…

டெல்லி:  அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம்,  இருதரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. அதிமுக பொதுக்குழு வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக பொதுக்குழு விவகார வழக்கில் சென்னை உயர்நீதி மன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தொடர்ந்த … Read more

தமிழ்நாடு காங்.கமிட்டி சார்பில் 13ம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 234 தொகுதிகளிலும் 13ம் தேதி ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்துள்ளார். மாநிலம் முழுவதும் 26ம் தேதி முதல் அடுத்த 2 மாதங்களுக்கு பிரச்சார இயக்கத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஷங்கர் மிஸ்ராவுக்கு ஜாமின் மறுப்பு| Flight urinating case: Shankar Mishra denied bail

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: விமானத்தில் 70 வயது பெண் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைதாகியுள்ள போதை நபர் ஷங்கர் மிஸ்ராவக்கு கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து புதுடில்லிக்கு, ஏர் இந்தியா விமானம் கடந்த நவ., 26ல் புறப்பட்டது. அப்போது, ‘ குடிபோதையில் ஷங்கர் மிஸ்ர என்பவர், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் … Read more