பாட்டிக்கு தூக்க மாத்திரை; பேத்தி பலாத்காரம்: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

மாண்டியா : பாட்டிக்கு துாக்க மாத்திரை கொடுத்து, பேத்தியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மாண்டியா நாகமங்களா அருகே உள்ள பெல்லுார் கிராசை சேர்ந்தவர் யூசுப், 25. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவிக்கு புதிய மொபைல் போன் வாங்கி கொடுத்து அடிக்கடி பேசினார். ‘வாட்ஸ் ஆப்’ வீடியோ காலில் பேச வைத்து, அவரது ஆபாச படங்களை எடுத்து வைத்து கொண்டார். பின் அந்த படங்களை காண்பித்து, … Read more

`இதுல காற்று கூட வராது' – குழாய் அமைப்பதில் முறைகேடு? வைரலான வீடியோ; தலைவர், பி.டி.ஓ சொல்வது என்ன?

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள இந்திரவனம் கிராமத்தில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில்… குடிநீருக்கான இணைப்பு ஏதும் ஏற்படுத்தப்படாமல், முறைகேடு செய்திருப்பதாக முரளிக்கிருஷ்ணன் என்னும் இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ காட்சியில் பேசும் முரளிக்கிருஷ்ணன், “எங்க ஊரில் 2020 – 23ம் ஆண்டுக்கான 15-வது நிதி குழுவின் கீழ், வீடு தோறும் புதிய குடிநீர் குழாய் அமைக்கிறார்கள். இந்த வருடத்திலிருந்து குழாய் இணைப்புக்கும், தண்ணீருக்கும் வரி போடுவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், … Read more

கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து: அமைச்சர்

சென்னை: கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த சீராய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திருக்கோயிலில் அனைவரும் சமம். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் . விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்று கூறினார்.

நவ-23: பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

அசாம் – மேகாலயா எல்லையில் போலீசுடன் மோதல்: 6 பேர் பலி

குவஹாத்தி, அசாம் – மேகாலயா எல்லையில், மரக்கடத்தலால் ஏற்பட்ட வன்முறையை அடுத்து, நேற்று வனக்காவலர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மேற்கு கார்பி ஆங்லாங் மாவட்ட வனப்பகுதியில் இருந்து, கடத்தல்காரர்கள் நிறைய மரங்களை வெட்டி லாரியில் வைத்து கடத்தினர். இவர்களை, மேகாலயா எல்லையில் வைத்து அசாம் போலீசார் தடுத்தனர். ஆனால், அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. உடனே, போலீசார் … Read more

காலியாகும் இத்தாலிய நகரத்தில் மக்கள் குடியேற வேண்டும்: யூரோக்களை வாரி வழங்க அதிகாரிகள் முடிவு

இத்தாலியில் உள்ள நகரம் ஒன்றுக்கு மக்கள் செல்ல அங்குள்ள அதிகாரிகள் சுமார் 25.1 லட்சம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நகரங்களில் குடியேற அரசு நிதி இத்தாலியின்  புக்லியாவின் சன்னி பகுதியில் உள்ள பிரெசிஸ் என்ற நகரத்திற்கு உலகம் முழுவதும் இருந்து மக்களை ஈர்ப்பதற்காக அந்த நாட்டு அதிகாரிகள் சுமார் 3000 யூரோக்கள் (சுமார் ₹ 25.1 லட்சம்)  வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இத்தாலியில் உள்ள பல சிறிய நகரங்களுக்கு மக்களை ஈர்க்கும் வகையில் இந்த கவர்ச்சியான … Read more

நவம்பர் 23: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 186-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 186-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இளம்பெண் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லியில் காதலியை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி வீசிய அப்தாபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா, தன் காதலி ஷ்ரத்தாவுடன் புதுடில்லியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார். காதலியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து, உடலை ௩௫ துண்டுகளாக்கி, அதை புதுடில்லியின் பல்வேறு இடங்களில் அப்தாப் வீசினார். இதையடுத்து அப்தாபை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை நாட்டையே … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,628,540 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,628,540 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 643,743,334 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 622,805,748 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,113 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.