பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறப்பு

சென்னை: பூண்டி, புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் இருந்து தற்போது 2,386 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 140 கனஅடி உள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் 2,521 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 595 கனஅடி நீர் வந்துகொண்டுள்ளது.

G-20-க்குத் தலைமை… இந்தியா சாதிக்கப் போவது என்ன?

2022-ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கும் இச்சமயத்தில், சர்வதேச அளவில் இந்தியா மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நகர்வில் முக்கியமாகக் கருதப்படுவது, G-20 என அழைக்கப்படும் இருபது நாடுகள் அடங்கிய கூட்டமைப்புக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பு சுழற்சி முறையில் இந்தோனேசியாவிடமிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறது. G-20 மாநாடு ஜி-20 மாநாடு: முதன்முறையாகச் சந்தித்துக்கொண்ட பைடன், ஜி ஜின்பிங் – இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சு மேலும், அதிகாரம் நிறைந்த அமைப்பான ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின்கீழ் இயங்கும் … Read more

மகாராணியாரையே கேலி செய்யும் மேகன்: ராஜ குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர்

இளவரசர் ஹரியும் மேகனும் வெளியிட்டுள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் சோகத்தை உருவாக்கியுள்ளது. அந்த தொடரில், இளவரசர் வில்லியம் மீதும், அவரது மனைவி கேட் மீதும், மன்னர் சார்லஸ் மீதும் ஹரியும் அவரது மனைவி மேகனும் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள். முதன்முறை மகாராணியாரை சந்திக்கச் சென்ற மேகன் அந்த தொடரின் ஒரு காட்சியில், தான் மகாராணியாரை முதன்முதலாக சந்திக்கும் காட்சியையே கேலிப்பொருளாக்கியிருக்கிறார் மேகன். தானும் ஹரியும் முதன்முறையாக மகாராணியாரை சந்திக்கப்போகும் காட்சியை விவரிக்கிறார் மேகன். காரில் செல்லும்போது மேகனிடம் … Read more

கொட்டும் மழையிலும் 4வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகாதீபம்…! பக்தர்கள் வியப்பு…

திருவண்ணாமலை: ஈசனின் அக்னிஸ்தலமான  அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்று 4வது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையிலும் மகாதீபம் அணையாமல் எரிந்துகொண்டே பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறது. இரு பக்தர்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கார்த்திகை தீபத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்  10 நாட்கள் திருவிழாவான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின்  முக்கிய நிகழ்ச்சியான அண்ணாமலையார் மலையின் 2,668 அடி உயர;ததில்  … Read more

சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: சென்னை உள்பட எந்த மாவட்டத்திலும் இன்றிரவு பேருந்துகள் நிறுத்தப்படாது என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம் என தகவல் வெளியான நிலையில் போக்குவரத்து துறை விளக்கம் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பு இருக்கும் இடங்களில் மட்டுமே அந்த நேரத்தில் பேருந்துகள் நிறுத்தப்படும். மாண்டஸ் புயல் எதிரொலியால், சென்னையில் கடலை ஒட்டிய, கிழக்கு கடற்கரை சாலையில் மட்டுமே இரவில் பேருந்துகள் இயங்காது எனவும் கூறியுள்ளது.

ராஜஸ்தானில் திருமண வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து: 5 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்ற விபத்தில் உணவு தயாரிக்கும் போது காஸ் சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 52 பேர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது புங்ரா கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில் நேற்று (டிச.,8) திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்காக உணவு தயார் செய்தபோது காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காஸ் … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிகரிக்கும் நீர்வரத்து; திறக்கப்படும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு 270 தென்கிழக்கே கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 13 கி.மீ ஆகவுள்ளது. மாண்டஸ் புயல் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. தீவிர … Read more

அதிபயங்கர மாண்டஸ் புயல்… என்ன நடக்க போகிறது?தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை மற்றும் வங்க கடலை ஒட்டியுள்ள வட கிழக்கு மாவட்டங்களை மாண்டஸ் புயல் அதிபயங்கரமாக தாக்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று வீசும் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாண்டஸ் புயல் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் மாண்டஸ் புயலானது, தற்போது வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டல புயலாக மாறியுள்ளது. அதிதீவிர புயலாக உருவெடுத்து இருக்கும் இந்த மாண்டஸ் புயல் … Read more

சோனியாகாந்தி பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்பட அரசியல் கட்சி தலைவர்கள்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு  இன்று பிறந்தநாள். அதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிறந்தநாளை தனது மகன் ராகுல்காந்தியுடன் கொண்டாட சோனியா ராஜஸ்தான் சென்றுள்ளார். இதன் காரணமாக இன்று ராகுல் நடை பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  சோனியா காந்திக்கு பிரதமர் மோடி … Read more

சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னம் உள்ளிட்டவற்றுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ்-ஐ அனுமதிக்க கூடாது என ஈபிஎஸ் மனு தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல என ஈபிஎஸ் மனுவில் கூறியுள்ளார்.