திருவாரூர்: தாலிகட்டும் நேரத்தில் சைல்டுலைனுக்கு அழைத்து தன் திருமணத்தை நிறுத்திய சிறுமியின் துணிவு!

திருவாரூர் மாவட்டத்தில், ஒரு பெற்றோர் திருமண வயதை அடையாத நிலையில் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் கூடியிருக்க, மணமேடையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வீசிய சிறுமி, `எனக்குத் தாலி கட்டாதே…’ எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துப்பேட்டையில் திருமணத்தை நிறுத்திய சிறுமி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரின் பெற்றோர் … Read more

மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன்! தந்தையின் நினைவிடத்தை தேடி சென்ற நபர் குறித்து முதலமைச்சர் டிவிட்…

சென்னை: மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தந்தையின் நினைவிடத்தை தேடி மலேசியா  சென்ற நபர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் டிவிட் பதிவிட்டுள்ளார். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தெரிவித்துள்ளார். தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் அவர்கள், தனது தந்தை இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து … Read more

உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டின் பெயர் மாற்றப்படும்: இந்து மகாசபை

லக்னோ: உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டின் பெயர் மாற்றப்படும். மீரட்டின் பெயர் நாதுராம் கோட்சே நகர் என மாற்றப்படும் என்று  இந்து மகாசபை அறிவித்துள்ளது.

"தந்தையாகப் பதவி உயர்வு கிடைச்சிருக்கு!"- மகளுக்காக உயர்பதவி வேலையை ராஜினாமா செய்த தந்தை

ஒரு குழந்தையின் பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. குழந்தை பிறந்த பிறகு பெற்றோர்கள் தங்கள் முழுக் கவனத்தையும் அவர்கள் மீது செலுத்த விரும்புவார்கள். ஆனால் அப்போது குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே விடுப்பு என்பது கொடுக்கப்படும். இதனால் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாகத் தந்தைகளுக்கும் உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனது செல்ல மகளைப் பார்த்துக் கொள்வதற்காக   மூத்த துணைத்தலைவர் பதவியை விட்டுவிட்டு தனது வேலையையும் ராஜினாமா செய்திருக்கிறார் ஐ.ஐ.டி. … Read more

FIFA உலகக் கோப்பை 2022: ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா இடையிலான இன்றைய ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார். உலகக் கோப்பை சாதனை கட்டாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டியில், இன்று நடந்த ஆட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான அரேபியாவுக்கு எதிராக பெனால்டி ஷாட் மூலம் அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, போர்த்துகலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார். இன்றைய போட்டியில், மெஸ்ஸி அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடினார். … Read more

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லஞ்சம் பெற்றதாக வழக்கு! வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லஞ்சம் பெற்றதாக  தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் கணபதி  தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி இருந்தபோது, பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவர்மீது, ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தன்மீதான வழக்கை   ரத்து … Read more

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: டென்மார்க், துனிசியா அணிகள் 0-0 என்ற சமநிலையில் முடிந்தது

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. குரூப் டி பிரிவில் அல் ரய்யான் பகுதியில் உள்ள எடுகேஷன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதின. அதில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற சமநிலையில் முடிந்துள்ளது.

FIFA World Cup: அர்ஜெண்டினாவின் ஆதிக்கத்தை அடக்கிய அந்த 6 நிமிடங்கள்; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா!

கால்பந்து உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் அதிக எதிர்பார்ப்புடன் அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியாவை எதிர்கொண்டிருந்தது. சந்தேகமேயின்றி இந்தப் போட்டியை அர்ஜெண்டினாதான் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. மேட்சுக்கு முன்பான பில்டப்கள் அத்தனையிலுமே மெஸ்ஸி புகழ் மட்டுமே பாடப்பட்டிருந்தது. ஆனால், அங்கே களத்தில் நடந்தது வேறு. அர்ஜெண்டினாவுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வியை சவுதி அரேபியா அளித்திருக்கிறது. 2-1 என அர்ஜெண்டினா தோற்றிருக்கிறது. மெஸ்ஸியின் கடைசி உலகக்கோப்பை என்பதால் பயங்கர எதிர்பார்ப்புடனே இந்தப் போட்டி தொடங்கியிருந்தது. இந்தப் போட்டியை இரண்டு … Read more

சிட்னி காவல் நிலையத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக! ஜாமீன் பெற்ற பிறகு வெளியான முதல் புகைப்படம்

அவுஸ்திரேலியாவில் துஷ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல்முறையாக பொதுவெளியில் காணப்பட்டார். காவல் நிலையத்தில் தனுஷ்க குணதிலக டேட்டிங் செயலியில் சந்தித்த சிட்னி பெண்ணை துஷ்பிரயோகம் செய்த வழக்கில், கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா, இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்முறையாக பொது இடத்தில் காணப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. கடந்த வியாழகிழமை … Read more

2024 உலக கோப்பை டி20 போட்டிகளில் சூப்பர் 12 நீக்கம் ‘சூப்பர் 8’ அணிகள் மட்டுமே…

2021, 2022 ஆகிய உலகக்கோப்பை டி20 போட்டிகளில் அதற்கு முந்தைய போட்டி தொடரில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணிகளுடன் புதிதாக நான்கு அணிகள் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 12 அணிகள் கொண்ட சூப்பர் 12 சுற்றுடன் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டது. துகுதிச் சுற்றில் தேர்வான நான்கு அணிகளுடன் முந்தைய தொடரில் 9 முதல் 12வது இடத்தைப் பிடித்த நான்கு அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டது. இரண்டு குழுவிலும் முதல் … Read more