பிபின் ராவத் மறைந்து ஓராண்டு நிறைவு; டெல்லி தேசிய போர் நினைவகத்தில் அஞ்சலி

புதுடெல்லி, நீலகிரி மாவட்டம் குன்னுார், வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சி கல்லுாரி உள்ளது. இதில் நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர் கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமான படை தளத்தில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி காலை 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர். ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பாதையிலுள்ள … Read more

கடற்படையில் பாலின சமத்துவம்; அக்னிபாத் திட்டம் மூலம் முதன்முறையாக பெண் மாலுமிகள்!

மத்திய அரசு, அக்னிபாத் என்ற திட்டத்தை கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படைகளில் தற்போது பலர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டமானது, நான்கு வருடங்களுக்கான ஒப்பந்த அடிப்படையிலான வேலை என்ற போதிலும் இதில் இணைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னொருபுறம் இத்திட்டத்திற்கு சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்திய கடற்படை இந்த நிலையில், இந்திய கடற்படை தனது அனைத்து பிரிவுகளிலும் பாலின சமத்துவத்துக்கு வழிவகுக்கும் … Read more

உலகக் கோப்பையின் 'கவர்ச்சியான' ரசிகைக்கு அடித்த ஜாக்பாட்! அழகிய இளம்பெண்ணின் வாழ்க்கையை மாற்றிய சம்பவம்

2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை போட்டியை காணவந்த கவர்ச்சியான இளம்பெண் ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் அவரது வாழ்க்கை மாற்றத்தைக் கண்டார். அது அது கொஞ்ச காலம் கூட நீடிக்கவில்லை என்பதே அதிர்ச்சியான சம்பவம். உலகக் கோப்பை என்பது நாளைய நட்சத்திரங்கள் தனக்கென ஒரு பெயரை உருவாக்குவதற்கான ஒரு தளமாகும். இது போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளராக கலந்துகொண்ட ரசிகருக்கும் பொருந்தும். பல ரசிகர்கள் தங்கள் நல்ல தோற்றத்திற்காக கேமராக்களால் கவரப்பட்டு புகழ் பெற்றுள்ளனர். … Read more

மாண்டஸ் புயல்: கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை – சென்னையில் 2 நாள் மழை! பாலச்சந்திரன் தகவல்

சென்னை:  மாண்டஸ் புயல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்,  கடலூர், டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்  என கூறினார். மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு  ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவையில் … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சிவகங்கை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

குஜராத் மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் – ராகுல்காந்தி

புதுடெல்லி, குஜராத் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் அக்கட்சி 156 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளை வெற்றி பெற்ற அக்கட்சி தற்போது 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில், இந்த தீர்க்கமான வெற்றிக்காக இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. அனைத்து காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தலைவர்களுக்கும் … Read more

கிருஷ்ணகிரி: காதல் திருமணம் செய்தால் ரூ. 25,000 அபராதம்; அதிர்ச்சி தரும் கட்டுப்பாடுகள்!

தமிழகம் முழுவதிலும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பலவகை கட்டுப்பாடுகள் செலுத்தப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், ஒரே சாதியில் பெற்றோர் விருப்பமின்றி காதல் திருமணம் செய்வோரை எல்லாம் ஊரை விட்டுத்தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது என பலவகை கொடுமையான கட்டுப்பாடுகள் இன்றளவும் உள்ளன. கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொடுமைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், மாதவிடாய் நாள்களில் பெண்கள் ஊருக்கு வெளியேதான் தங்க … Read more

எந்த எதிரியையும் கண்டு பயப்பட மாட்டோம்! முதல் முறையாக மௌனம் கலைத்த ரொனால்டோ

இறுதிவரை கனவுக்காக போராடும் அணி தான் போர்த்துக்கல் என கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார். வெடித்த சர்ச்சை சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ பென்ச்சில் அமர வைக்கப்பட்ட விடயம் சர்ச்சையானது.  அதனைத் தொடர்ந்து ரொனால்டோவுக்கும், அணி மேலாளர் சண்டோஸுக்கும் இடையே உரசல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கு பதிலளிக்கும் வகையில் சாண்டோஸ், தனக்கும் ரொனால்டோவுக்கும் இடையே எந்த வித மோதலும் இல்லை என்று விளக்கம் அளித்தார். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த ரொனால்டோ தற்போது மௌனம் கலைத்துள்ளார். … Read more

மாண்டஸ் புயல்: திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை…

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், திருவள்ளுர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டல் புயல் காரணமாக, இன்று தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் நாளை இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், இன்றுமுதல் 10ந்தேதி வரை சென்னை உள்பட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் … Read more

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருச்சி: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.