உயர்கல்வி நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது – யூ.ஜி.சி.

புதுடெல்லி, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர்கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை யூ.ஜி.சி. வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்வி நிறுவனம் சார்பில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும். மாணவிகளுக்கு அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கான தொடர்பு எண்கள் வழங்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை 2022 அடிப்படையில் தொழில் முனைவோர்களாக பெண்களை மாற்றுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதியுடன் கூடிய சுகாதாரமான கழிப்பறை ஏற்படுத்தித் … Read more

“பேரரசர் தளபதி; சிற்றரசர் உதயநிதி!” – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு

திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் கே.என்.நேரு நிகழ்ச்சியின்போது அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “தலைவர் கலைஞர் அவர்கள் 1996-லிருந்து 2001 வரை முதலமைச்சராக இருந்தபோது 50 முறை திருச்சிக்கு வந்திருக்கிறார்கள். … Read more

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் இந்த நிச்சயதார்த்த விழாவை நடந்தது. ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். ஆனந்த் மற்றும் ராதிகா சில வருடங்களாக ஒருவரையொருவர் … Read more

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த 2 பேருக்கும், மலேசியா, சீனாவில் இருந்து வந்த தலா ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 889 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் இதுவரை 10 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

பிப்.,21- மார்ச் 10 வரை யுஜிசி, நெட் தேர்வு | Feb. 21- March 10 UGC, NET Exam

புதுடில்லி: உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி, நெட் தேர்வு பிப்., 21- மார்ச் 10 வரை நடைபெறும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி, நெட் தேர்வுக்கு இன்று(டிச.,29) முதல் வரும் ஜன., 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை நடத்தப்படும். உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு கணினி வழியில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். … Read more

விகடன் பிரசுரம்: 2022-ன் டாப் புத்தகங்கள் ஒரு பார்வை! | Vikatan Books Rewind

டிசம்பர் என்றாலே ரீவைண்ட் சீசன்தான். 2022 – இரண்டு வருட கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைத்து துறைகளும் மீண்டெழுந்த, மீண்டெழ முயற்சி செய்த காலம். அந்த வகையில் பேச, விவாதிக்க நிறையவே தரவுகளும் நிகழ்வுகளும் இந்த வருடம் இருக்கின்றன. விகடனிலும் ரீவைண்ட் கட்டுரைகள், குவிஸ் போட்டிகள் என வாசகர்களுக்கு விருந்தளிக்கப் பல விஷயங்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. இம்பர்ஃபெக்ட் ஷோ குவிஸ் டாப் நிகழ்வுகள் குறித்த குவிஸ் பொழுதுபோக்கு சம்பந்தமான குவிஸ் 2022-ன் சிறந்த கட்டுரைகள் 2022 ரீவைண்டு … Read more

திறமையான புலம்பெயர்ந்தோர் வாருங்கள்: கனடா அமைச்சர் அழைப்பு

கனடாவில் இன்னும் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் வீட்டுவசதி அமைச்சர் அகமது ஹசென் அழைப்பு விடுத்துள்ளார். புலம்பெயர்ந்தோருக்கு அரிய வாய்ப்பு நாட்டின் கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், குடியிருப்புகளின் தேவை உயர்ந்துள்ளதால் திறமையான புலம்பெயர்ந்தோருக்கு இது அரிய வாய்ப்பு எனவும் அமைச்சர் ஹசென் குறிப்பிட்டுள்ளார். @globalnews தற்போது வரையில் 1 மில்லியன் வேலைவாய்ப்புகள் கனடாவில் நிரப்பப்படாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ஹசென், இதனால் கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர்கள், தொழில் … Read more

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிச.31-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை: காவல்துறை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிச.31-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விமர்சனங்கள் வரத்தான் செய்யும், ஆனால்..!”- திருச்சியில் அமைச்சர் உதயநிதி குறித்து முதல்வர் ஸ்டாலின்

திருச்சி மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மாவட்டம் வாரியாக நடைபெறும் இந்த நிகழ்வில் முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், சமீபத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டார். விழா மேடையில் முதல்வர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “திருச்சியில் எது நடந்தாலும் பிரமாண்டமாகத்தான் … Read more

2022-ல் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 கால்பந்து வீரர்கள்: ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளிய எம்பாப்பே!

கால்பந்து என்பது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டிற்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல், அதிக பணப்புழக்கம் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக கால்பந்து உள்ளது. நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு அதிக ஊதியம் பெறும் கால்பந்தாட்ட வீரர்களும் உள்ளனர். ஃபோர்ப்ஸ் சமீபத்தில் உலகின் முதல் 10 பணக்கார கால்பந்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்த வீரர்கள் தங்கள் அபாரமான திறமை, கடின உழைப்பு மற்றும் வணிக முயற்சிகள் மூலம் தங்கள் செல்வத்தை சம்பாதித்துள்ளனர். … Read more