உள்ளாட்சி துறை திட்டங்களில் குறை இருந்தால் கூறலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

திண்டுக்கல்: உள்ளாட்சி துறையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கிய பிறகு மைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திட்டங்களில் குறையை சுட்டிக்காட்டினால் அதனை விசாரித்து சரிப்படுத்தி சிறப்பாக செயல்படுத்துவோம் எனவும் அமைச்சர் கூறினார். 

“ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்; காட்டுப்பகுதியான கோட்டைமேடு!" – சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே  கொள்ளிடம் ஆறு  வங்கக் கடலில் பழையாறு துறைமுகத்தையொட்டி கலக்கிறது. கொள்ளிடம் ஆறு கலக்கும் பகுதியருகே திட்டுப்பகுதிகள் இருக்கின்றன. அதில் ஒரு திட்டுப் பகுதிதான் கோட்டைமேடு கிராமமாகும். இந்த கிராமத்தில் விவசாயமே பிரதானத் தொழில். கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது இங்கு நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டதால், இந்தத் திட்டுக் கிராமம் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது. இங்குள்ள நிலத்தடி நீரைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்த இந்தக் கிராம மக்கள், … Read more

படித்து முடிக்கும் முன்பே… பிரித்தானிய விசா தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான தகவல்

2023ஆம் ஆண்டில் மாணவர் விசா பெறுவது கடினம் என்னும் தகவல் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. படித்து முடிக்கும் முன்பே… பிரித்தானியாவைப் பொருத்தவரை, ஒரு மாணவர் ஒரு குறிப்பிட்ட பணி செய்யும் திறனும் அனுபவமும் உடையவராக இருந்தாலும், அவருக்கு பட்டப்படிப்பு கட்டாயம் தேவை என்னும் ஒரு நிலைமை இருந்து வருகிறது. அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் ஆனால், அடுத்த ஆண்டிலிருந்து, அதாவது, 2023ஆம் ஆண்டிலிருந்து, ஒரு … Read more

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி – மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

திருச்சி:  திருச்சியில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்றும்,. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.78 கோடி வங்கிக் கடன்  உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  திருச்சிக்கு வந்தார். அவருக்கு  வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்ச ஸ்டாலின்,  மொத்தம் … Read more

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ரூ.14,000 லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். ரூபநாராயணநல்லூர் விஏஓ சுப்பிரமணியன் பட்டா மாறுதலுக்கு ராமதாஸ் என்பவரிடம் பணம் பெற்றபோது பிடிபட்டார். 

‛‛ராகுல் பாதுகாப்பில் குறைபாடு இல்லை: சிஆர்பிஎப் | Rahul yatra no defect: CRPF informs

புதுடில்லி: ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் ஏற்படவில்லை என சிஆர்பிஎப் தகவல் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி., ராகுல் மேற்கொண்டு உள்ள பாதயாத்திரையில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’என அக்கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அதில், ராகுல் மேற்கொண்டு உள்ள பாரத ஒற்றுமை யாத்திரை சமீபத்தில் புதுடில்லி வந்து சேர்ந்தது. இங்கு, சில இடங்களில் பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டன. ராகுலுக்கு ‘இசட் பிளஸ்’ … Read more

“பாஜக-வுடன் திமுக ரகசிய தொடர்பு வைத்திருக்கிறது!” – புதுச்சேரி அதிமுக சாடல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி நேற்று பந்த் போராட்டத்தை நடத்தியது அ.தி.மு.க. மாலை பந்த் முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன், “மத்திய அரசின் கீழ் இருக்கும் புதுச்சேரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால் மாநிலத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. முதல்வர் நேரில் சென்று கவர்னரை சந்தித்து கோப்புகளுக்கு கையெழுத்து பெறும் அடிமை நிலை தொடர்கிறது. புதுச்சேரி மாநில காவல்துறை தி.மு.கவின் ஏவல் துறையாக மாறி, கழக தொண்டர்களை அதிகாலை 5 மணியளவில் … Read more

ஒரேநாடு ஒரேதேர்தல்: எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம்!

டெல்லி: ஒரேநாடு ஒரேதேர்தல் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அங்கீகரித்து மத்திய சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. இதன் காரணமாக, மத்தியஅரசு அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் அதிகரித்த நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு ஓபிஎஸ் வழக்குகள் தொடுத்துள்ள நிலையில்,  இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிச்சாமி, சமர்ப்பித்த … Read more

10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 10ம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்க தகுதியானவர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் டூ படிக்காமல் டிப்ளமோ முடித்தவர்கள், 3 ஆண்டு சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி கோவை மாணவி மனுத்தாக்கல் செய்திருந்தார். 12ம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டபடிப்புக்கு … Read more