மாணவிகளின் கழிவறைக்குள் புகுந்து வீடியோ எடுத்த மாணவர் பிடிபட்டார்

பெங்களூரு பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து அவர்களை வீடியோ எடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மாணவர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மாணவர் கடந்த காலங்களில் கழிவறைக்குள் எட்டிப்பார்த்தபோது பிடிபட்டு உள்ளார். மேலும் அவர் மன்னிப்பு கடிதம் சமர்ப்பித்த பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு இப்போது வீடியோ எடுத்து மாட்டிக் … Read more

Bajaj Pulsar P150: ₹ 1.17 லட்சத்தில் பஜாஜ் பல்சர் P150 விற்பனைக்கு வந்தது

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனையில் உள்ள பல்சர் N160 மற்றும் பல்சர் 150 இடையே நிலை நிறுத்தப்பட்டுள்ள பல்சர் P150 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.17 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை இருக்கை மற்றும் ஸ்பீளிட் இருக்கை என இரு விதமான ஆப்ஷனுடன் டிஸ்க் பிரேக் பெற்று சிங்கிள் சேனல் ஏபிஎஸ் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்கின்றது. பஜாஜ் பல்சர் P150 பல்சர் பி150 பைக்கில் ஏர்-கூல்டு, 149சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொடுக்கப்பட்டு 8,500ஆர்பிஎம்-ல் 14.5 எச்பி … Read more

கட்டாத கால்வாய்க்கு ரூ.9.9 லட்சம் – ‘சிட்டிசன்’ பட பாணியில் புகாரளித்த வேலூர் மக்கள்!

வேலூர் மாநகராட்சியில் அடிக்கடி ஏதாவதொரு கேலிகூத்தான சம்பவம் நடக்கிறது. தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமல், சிமென்ட் கலவையைக் கொட்டி டூவீலரின் டயர்களைப் புதைத்தனர். அடுத்ததாக, ஜீப்பை அகற்றாமல் ஏடாகூடமாக தார்ச்சாலைப் போட்டனர். அடிக்குழாயை அகற்றாமல் அப்படியே கழிவுநீர்க் கால்வாய் கட்டினர். அதைத் தொடர்ந்து, ‘குப்பைக் கொட்டினால் அபராதம்; வீடியோ எடுத்தால் ரூ.200 சன்மானம்’ என மேயரே அறிவிப்பை வெளியிட்டது; கொரோனா கிருமி பொம்மையைப்போல வேலூர் புதிய பேருந்து நிலையத்தை ஏடாகூடமாக கட்டியது என சர்ச்சை பட்டியல் … Read more

பிரான்சில் மீண்டும் ஒரு மாணவி சீரழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதால் உருவாகியுள்ள அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சமீபத்தில் மாணவி ஒருத்தி, புலம்பெயர்ந்த பெண் ஒருவரால் கொலை செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த துயர சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு 14 வயது மாணவி, கடத்தப்பட்டு, வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.   பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பாவி மாணவிக்கு நேர்ந்த சோகம் கடந்த வெள்ளிக்கிழமை பிரான்சிலுள்ள Tonneins என்ற நகரத்தில், Vanesa என்னும் 14 வயது மாணவி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்திருக்கிறாள். அப்போது, … Read more

கிராம உதவியாளர் தேர்வு தேதி டிசம்பர் 4ந்தேதிக்கு மாற்றம்! தமிழகஅரசு

சென்னை: கிராம உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு தேதி டிசம்பர் 4ந்தேதிக்கு மாற்றம் செய்து வருவாய் நிர்வாகத்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணிக்கு 10.10. 2022 முதல் 07.11.2022 வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி 5ம் வகுப்புதான் என்றாலும் பட்டதாரிகளும் இந்த பணிக்காக விண்ணப்பித்து உள்ளனர். 2748 இடங்களுக்கு  3 இலட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. … Read more

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்வு..!!

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தகவல் வெளியாகியுள்ளது.

திகார் சிறையில் ஆம் ஆத்மி அமைச்சருக்கு மசாஜ் செய்தது யார்?! – வெளியானத் தகவல்

ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கில், கடந்த மே மாதம் அமலாக்கப்பிரிவால் கைதுசெய்யப்பட்டார். அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இவருக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, திகார் சிறை அதிகாரி அஜித்குமார், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்குவதாகக் கூறி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில், பா.ஜ.க தலைவர்கள் சமூக வலைதளத்தில், அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் மசாஜ் … Read more

சுவிஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: என்னென்ன பணிகளுக்கு ஆட்கள் தேவை?

சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. சுவிஸ் நிறுவனத்துக்கு 1,500 பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். Lufthansa நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை சுவிஸ் விமான நிறுவனமான சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் Lufthansa நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம், 2023 இறுதிக்குள் 20,000 பேருக்கு பணி வழங்க இருப்பதாக நேற்று அறிவித்தது. image – worldradio கொரோனா காலகட்டத்துக்குப் பின் பயணங்கள் சூடு … Read more

குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் திறப்பு உள்பட 18 பணிகள், நகராட்சி கட்டிடங்களுக்கு அடிக்கல், 143 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: குடிநீர், பாதாள சாக்கடை திட்டம் திறப்பு, நகராட்சி கட்டிடங்களுக்கு அடிக்கல், 143 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி உள்பட பல்வேறு  நிகழ்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.11.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், பேரூராட்சிகள் ஆணையரகம், நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் பெருநகர … Read more

சென்னை அண்ணா நகரில் மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!!

சென்னை: சென்னை அண்ணா நகரில் மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராசனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. அண்ணா நகர் இல்லத்தில் இருந்து மைலாப்பூர் மயானத்திற்கு அவ்வை நடராசன் உடல் கொண்டு செல்லப்படுகிறது. உடல்நலக்குறைவால் தமிழறிஞர் அவ்வை நடராசன் (85) சென்னையில் மருத்துவமனையில் நேற்று காலமானார். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகளுக்கு பின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. வைரமுத்து, ஜெகத்ரட்சகன் உடலை சுமந்து சென்றனர்.