ரூ.121 கோடி போதை மாத்திரை குஜராத் சோதனையில் சிக்கியது| Dinamalar

ஆமதாபாத்:குஜராத்தில் மருந்துக் கடைக்காரர் வீட்டில் இருந்து 121 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தில், பயங்கரவாத தடுப்புப் படையினர், வதோதராவில் உள்ள சைலேஷ் கட்டாரியா என்ற மருந்துக் கடைக்காரரின் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 121.40 கோடி ரூபாய் மதிப்புள்ள 24.28 கிலோ ‘மெப்ட்ரோன்’ என்ற போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கடந்த 29ம் தேதி வதோதராவின் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, 478 கோடி ரூபாய் மதிப்புள்ள … Read more

08.12.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 8 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் Source link

காயத்துடன் மீண்டும் வந்து அரைசதம் அடித்த ரோஹித் ஷர்மா., 2-வது ஒருநாள் போட்டியில் அரிய சாதனை!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து. ஆனால் இப்போட்டியில் விரலில் காயம் ஏற்றப்பட்ட பிறகும் கடைசியாக களமிறங்கி 28 பந்துகளில் 51* ஓட்டங்கள் எடுத்துள்ளார். இப்போட்டியில், அரைசதம் அடித்தது மட்டுமின்றி அரிய சாதனையை படைத்துள்ளார். வங்கதேசம் முதலில் துடுப்பாடத் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே ரோஹித்துக்கு இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. வழியால் துடித்த அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். பின்னர் எக்ஸ்-ரே எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். … Read more

திற்பரப்பு அருவியில் குளிக்க தடை நீடிப்பு

குலசேகரம்: குமரி  மாவட்டத்தில் உள்ள முக்கிய இயற்கை சுற்றுலாத்தலம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு  அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 2வது நாளாக திற்பரப்பு அருவியில்  அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

இளம் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்த யு டியூபர் கைது

புதுடில்லி,:புதுடில்லியில், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கவைத்து விடுவதாக மிரட்டி, இளம் தொழில் அதிபரிடம் இருந்து 80லட்சம் ரூபாயை பறித்த, பிரபல பெண் ‘யு டியூபரை’ போலீசார் நேற்று கைது செய்து, அவரது கணவரை தேடி வருகின்றனர். புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பிரபல யு டியூபராக இருக்கும் நம்ரா காதிரை, 22, லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இவரது கணவர் விராட் பெனிவால். இந்நிலையில், புதுடில்லியில் விளம்பர நிறுவனம் நடத்தி வரும் … Read more

விலையுர்ந்த பரிசை கேட்கும் இந்திய மாமியார்., கனேடிய கர்ப்பிணி பெண் குமுறல்

இந்தியரை திருமணம் செய்துகொண்ட கனேடிய பெண் ஒருவர், தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும், தனது மாமனார் மாமியார் ஐபோன்களை பரிசாக கேட்பதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணம் பல இந்திய மக்களிடம் உள்ளது. ஆனால், அது எப்போதும் அப்படி இருக்காது, ஒவ்வொரு நபருக்கும் அவரவர் சொந்தப் போராட்டங்கள் இருக்கும். சமீபத்தில், கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது இந்திய … Read more

புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவு..!!

சென்னை: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு தர உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க ரிலையன்ஸ் ரீட்டெய்ல், பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் கோர்ட் ஆணையிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வக்குமாரசாமி, ரிலையன்ஸ் ஷோரூமில் 2017ல் புதிதாக டிவி வாங்கியுள்ளார். புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதான நிலையில் அது சரி செய்யப்பட்டு மீண்டும் பழுதானதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

“The spirit of Ukraine" – 2022-ம் ஆண்டின் உலகின் சிறந்த நபர் ஜெலன்ஸ்கி; டைம் பத்திரிகை தேர்வு!

உக்ரைன் நேட்டோவில் சேர்வதற்கு கடுமையான எச்சரிப்புகளை விடுத்துவந்த ரஷ்யா, கடந்த பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைனில் போர்தொடுத்தது. பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள், ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கெதிராக தீர்மானம், ரஷ்யா மீது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை என பல நிகழ்ந்தும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை. உக்ரைன் – ரஷ்யா கடந்த வாரம்கூட, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக், “ரஷ்யா – உக்ரைன் மோதலின்போது உக்ரேனிய படைவீரர்கள் 10,000 முதல் … Read more

மகனின் புகைப்படத்தை பகிர்ந்து பிரித்தானிய பெற்றோரை எச்சரித்த தாயார்: அறிகுறிகளை கவனியுங்கள்!

தமது மகனின் நெஞ்சை உலுக்கும் புகைப்படத்தை பகிர்ந்த தாயார் ஒருவர், Strep A தொற்று பாதிப்பின் ஆபத்து குறித்து எச்சரித்துள்ளார். இதுவரை 9 சிறார்கள் கடந்த ஒரு வாரமாக பிரித்தானியாவில் Strep A தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 9 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஏழு வயது ஹன்னா ரோப் உட்பட மரணமடைந்த கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் ஆரம்ப பள்ளி வயதுடையவர்கள் மட்டுமின்றி, credit: amylaura36 சிறுமி ஹன்னா ரோப் லேசான இருமலுடன் காணப்பட்டவர், 24 … Read more

ஆன்லைன் விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநர் ரவியுடன் சந்திப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் நடைபெற்ற சந்திப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.