தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முடக்கம்- தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென் பொருளை அத்துமீறி இணைய வழியில் நுழைந்து செயலிழப்பு செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட்டு … Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

துாக்கி வீசப்பட்டவர்கள் நடக்கின்றனர் ராகுல் குறித்து பிரதமர் மோடி கிண்டல்| Dinamalar

சுரேந்திரநகர் : ”ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டவர்கள், மீண்டும் அரியணை ஏறும் ஆசையில் பாதயாத்திரை செல்கின்றனர்,” என, காங்., முன்னாள் தலைவர் ராகுலை கிண்டல் செய்து பிரதமர் மோடி குறிப்பிட்டார். குஜராத்தில் முதல்வர்பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டிச., ௧ மற்றும் ௫ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, சுரேந்திரநகரில் நேற்று நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி, பாரத ஒற்றுமை யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் … Read more

உக்ரைனுக்கு உதவிட கனேடிய மக்களுக்கு ட்ரூடோவின் பாரிய அறிவிப்பு!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உக்ரைன் இறையாண்மை பத்திரம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் இறையாண்மை பத்திரம் ரஷ்யாவின் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு உதவிட கனடா அரசாங்கம் 500 மில்லியன் டொலர்கள் உக்ரைன் இறையாண்மை பத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உக்ரைனின் துணிச்சலான மக்களுக்கு நேரடியாக ஆதரவளிக்கும் வாய்ப்பை கனேடியர்களுக்கு வழங்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் குளிர்காலத்தில் உக்ரேனியர்களுக்கு ஓய்வூதியம், எரிபொருள் வாங்குதல் மற்றும் ஆற்றல் உள்கட்டமைப்பை மீட்டமைத்தல் போன்ற அத்தியாவசிய … Read more

இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்

புதுடெல்லி: விமான பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகள் ஏர் சுவிதா/எஸ்டிஎஃப், முழு தடுப்பூசி புறப்படுவதற்கு முந்தைய ஆர்டிபிசிஆர் சோதனை உட்பட அனைத்து பயணத் தேவைகளும் நீக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தேவைகள் 22 நவம்பர் 2022 நள்ளிரவு 12:01AM மணி முதல் அமலுக்கு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,627,331 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,627,331 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 643,314,367 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 622,514,437 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,124 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார ராசிபலன்: நவம்பர் 22 முதல் 27 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.27 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.25 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ-22: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இறந்த காதலிக்கு தாலி கட்டி மணமுடித்த அசாம் இளைஞர்| Dinamalar

குவஹாத்தி, :உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த காதலிக்கு தாலி கட்டி, ‘இனி நான் வேறு திருமணம் செய்து கொள்ள மாட்டேன்’ என, அவரது உடல் மீது சத்தியம் செய்த இளைஞரை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வட கிழக்கு மாநிலமான அசாமின் மோரிகான் நகரில் வசிப்பவர் பிதுபன் தாமுலி. அருகிலுள்ள கோசுவா என்ற கிராமத்தில் வசித்தவர் பிரார்த்தனா போரா. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இருவர் வீட்டிலுமே சம்மதம் தெரிவித்து திருமணத்துக்கான பேச்சும் … Read more