கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு | Rescue of the boy who fell into the well

லக்னோ : உத்தர பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த, 4 வயது சிறுவன், ஐந்து மணி கடுமையான முயற்சிக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டான். உத்தர பிரதேசத்தின் கோட்லா சதத் பகுதியைச் சேர்ந்த, பேச்சுக் குறைபாடு உடைய மாவியா, 4, என்ற சிறுவன், ஆழ்துளை கிணற்றில் நேற்று தவறி விழுந்தான். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்த சிறுவனுக்கு சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் வழங்கப்பட்டது. துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்ட … Read more

கர்நாடகா: `கோலார்’ தொகுதியில் களமிறங்கும் சித்தராமையா… கடும் போட்டி சூழலை எதிர்கொண்டு வெல்வரா?

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித்தலைவருமானவர் சித்தராமையா (75). 1984-களில் அரசியல் வாழ்வை தொடங்கி, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சையாக களம் கண்டு எம்.எல்.ஏ வாக வென்றுள்ளார். பின் கடந்த, 17 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தற்போது, கார்நாடக காங்கிரஸின் ‘ஐகான்’ இவர் தான். இன்னும் நான்கு மாதங்களுக்குள் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தினமும் பேச்சு, பேட்டி, அறிக்கை என, அரசியல் களத்தை சூடாகவே வைத்து வருகிறார். … Read more

இலங்கைக்கு எதிரான போட்டியில்– இந்திய அணி அபார வெற்றி

கவுகாத்தி: இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது ஒருநால் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்களில் விளையாடுகிறது. அதன்படி நடைபெற்ற டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறன. அந்த வகையில், முதலாவது ஒருநாள் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் … Read more

30 ஆண்டுகளில் 55-வது முறையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி… யார் இந்த அசோக் கெம்கா?!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா (Ashok Khemka) தன்னுடைய 30 ஆண்டு பணிக்காலத்தில் 55-வது முறையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார். திங்கள்கிழமை ஹரியானா அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்காவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவருடன் மேலும் நான்கு சிவில் சர்வீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த அசோக் கெம்கா, இப்போது ஆவணக் காப்பகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக … Read more

இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் விற்பனையில் சாதனை: நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பிரித்தானிய இளவரசர் ஹரியின் சுயசரிதை புத்தகமான “ஸ்பேர்” இதுவரை வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே மிக வேகமாக விற்பனையாகும் புனைகதை அல்லாத புத்தகம் என்ற சாதனை படைத்துள்ளது. இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” பிரித்தானிய இளவரசர் ஹரி எழுதியுள்ள சுயசரிதை நூலான “Spare” புத்தகம் ஜனவரி மாதம் 10ஆம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ள இளவரசர் ஹரியின் “ஸ்பேர்” புத்தகம் நேற்று முதல் விற்பனைக்கு வெளிவர தொடங்கியுள்ளது. And … Read more

உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.92 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 67.17 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 64.05 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தணி அருகே வாகனங்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூர்: திருத்தணி அருகே 3 வாகனங்கள் மோதிக் கொண்டதால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லட்சுமாபுரத்தில் சென்னை – திருப்பதி சாலையில் டிரெய்லர் லாரி, சரக்கு வேன், கார் அடுத்தடுத்து மோதிக் கொண்டன.

பொதுக்குழுவே கட்சியின் உயர்மட்ட அமைப்பு அ.தி.மு.க., வழக்கில் பழனிசாமி தரப்பு வாதம்| Palaniswamis argument in the case is that the General Assembly is the highest level body of the ADMK

புதுடில்லி, அ.தி.மு.க., தலைமை தொடர்பான வழக்கில், ‘பொதுக் குழுவே கட்சியின் உயர்மட்ட அமைப்பாகும். அதில் எடுக்கப்படும் முடிவு கட்சியில் உள்ள அனைவரையும் கட்டுப்படுத்தும்’ என, முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. அ.தி.மு.க., தலைமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வில்இந்த வழக்கின் விசாரணை நேற்றும் தொடர்ந்தது. அப்போது, முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஏ.சுந்தரம் வாதிட்டதாவது: கடந்த ௨௦௧௭ம் ஆண்டு … Read more

"கல்குவாரி அருகே குடும்பத்தோட இருக்க தயாரா? நாங்க உங்க பங்களாவுக்கு போறோம்" கொந்தளித்த கிராம மக்கள்!

திருப்பூர் மாவட்டம், கோடங்கிபாளையத்தில் 2.6 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள கல்குவாரி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோடங்கிபாளையம் கிராம மக்கள், கல்குவாரி அமைப்பதற்கான ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் கலந்துகொண்டனர். கருத்துக் கேட்புக் கூட்டம் கல்குவாரி லாரிகளால் சேறும் சகதியுமாக மாறிய குடியிருப்புப் பகுதி- சாலைமறியலில் இறங்கிய வேலூர் மக்கள் இக்கூட்டத்தில் கோடங்கிபாளையத்தில் வசிக்கும் விவசாயி சிவசுந்தரி பேசுகையில்,” கல்குவாரி அமையவுள்ள … Read more

லண்டன் விமான நிலையத்தில் ஆபத்தான யுரேனியம் கண்டுபிடிப்பு: தீவிரவாத தடுப்பு பொலிஸாருக்கு அழைப்பு

பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்தில் பொதி ஒன்றில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தீவிரவாத தடுப்பு பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். யுரேனியம் கண்டுபிடிப்பு பிரித்தானியாவின் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்த பொதி ஒன்றில் ஒன்றில் சிறிய அளவு யுரேனியம் இருப்பதை வழக்கமான திரையிடல் மூலம் விமான நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். டிசம்பர் 29 அன்று ஹீத்ரோ விமான நிலையத்தில் இத்தகைய அசுத்தமான மாசுப்பட்ட பொருள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் எல்லைப் படை அதிகாரிகள் அதன் … Read more