தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மூன்றாம் பாசன பகுதிக்கு வினாடிக்கு 2,500 கனஅடி நீர் திறப்பு..!!

தேனி: தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து மூன்றாம் பாசன பகுதிக்கு வினாடிக்கு 2,500 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று முதல் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2,500 கனஅடி வீதம் 1,533 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படும். ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களுக்கு பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

'வேகமெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்' – சாதக, பாதகங்கள் என்னென்ன?!

‘ஸ்டேடிக்’ மீட்டர்: தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. அதில், விவசாயத்திற்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளை பொறுத்தவரை 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்ய ‘ஸ்டேடிக்’ என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மின்சாரம் துல்லியமாக பதிவு செய்யப்படும். 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளுக்கு … Read more

கம்ப்யூட்டரில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக பயனாளர்கள் அவதி

சென்னை: கம்ப்யூட்டரில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்ப்யூட்டரில் ட்விட்டர் கணக்கை லாக்கிங் செய்யும்போது பயனாளர்களுக்கு Error என்ற தகவல் வருகிறது.

`விஜிலென்ஸ் விசாரணை கேட்ட திமுக பெண் கவுன்சிலர்!’ – அதிர்ந்த நெல்லை மாநகராட்சி மேயர்

நெல்லை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமையில் நடந்த மாமன்றக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அனைத்து கவுன்சிலர்களும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா இதனிடையே, மாநகராட்சியில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த இருப்பதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் … Read more

இன்று துவங்குகிறது பொங்கல் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு

சென்னை: பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை, 8 மணிக்கு துவங்க உள்ளது. பொங்கல் பண்டிகை நெரிசல் கருதி, தாம்பரம் – திருநெல்வேலி, தாம்பரம் – நாகர்கோவில், கொச்சிவேலி – தாம்பரம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல், தாம்பரம் – திருநெல்வேலி என, ஐந்து சிறப்பு கட்டண ரயில்கள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், சென்னை-பொங்கலுக்காக அறிவிக்கப்பட்ட ஐந்து சிறப்பு கட்டண ரயில்களுக்கான முன்பதிவு, இன்று காலை, 8 மணிக்கு துவங்க … Read more

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிப்பு

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் 4வது நாளாக குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் வழக்கம்போல் மக்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றை குறை கூறிவரும் பிரதமர் மோடி – பாஜக மாற்றி எழுத விரும்புவது எதை?!

“தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும்.” `இந்தியாவின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும்’ என்கிற கருத்தை பா.ஜ.க-வினர் தொடர்ந்து முன்வைத்துவருகிறார்கள். மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியப் பண்பாட்டை ஆய்வுசெய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றும், தமிழர் ஒருவர்கூட அதில் இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மோடி இந்த நிலையில், சமீபத்தில் சில நிகழ்ச்சிகளில் பேசிய பிரதமர் மோடி, இந்திய வரலாறு கருத்து … Read more

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை! வெளியான அதிர்ச்சி அறிக்கை

ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின்படி, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரில் கிட்டத்தட்ட 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கீவ் இண்டிபென்டென்ட் தெரிவித்துள்ளது. பத்து மாதகால போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருகிறது. கனரக பீரங்கிகள், பல ஏவுகணை ராக்கெட் அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் உக்ரனைத் தொடர்ந்து தாக்கி வருகிறது. Twitter@ZelenskyyUa   கிறிஸ்துமஸ் ஈவ் அன்று, கெர்சன் நகரின் மையப்பகுதி ரஷ்ய துருப்புக்களால் குறி வைக்கப்பட்டது. … Read more

உலகளவில் 66.31 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 66.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 66.31 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 63.55 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படை 4 மீனவர்களை கைது செய்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றது.