ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து… ராகுல் காந்தியின் வாக்குறுதி, `வாக்கு' அரசியலா?!

பலத்த பாதுகாப்புடன் ஜம்மு காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி, ரம்பான் மாவட்டத்தில் மழை பெய்து, நிலச்சரிவு ஏற்பட்டதால், பயணத்தை இரண்டு நாள்கள் ஒத்திவைத்திருக்கிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராகுல் காந்தி 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும், அங்கு சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட … Read more

2023 தைப்பூசம் எப்போது ? விரதம் இருக்கும் முறை எப்படி?

 தமிழர்கள் பாரம்பரியமாக பல விழாக்களை கொண்டாடுவது மரபாகும் அவற்றுள் தைப்பூசமும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. தைப்பூச திருநாளில் உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். முருகனுக்கு உகந்த தினம் தைப்பூச தினம் எனக் கூறுவர். இந்தவருடம் தைப்பூச திருநாள் எந்தநாளில் வருகின்றது? விரதம் எப்படி இருக்கலாம் என்பதை பார்ப்போம்.  எப்போது? தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணையும் நாளை தைப்பூசம் என்கிறோம். … Read more

Let’s Get Married : தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் பெயர் வெளியானது …

தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் (DEPL) நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் முதல் படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தமிழில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married – LGM என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை DEPL நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தோனியும் அவரது மனைவி … Read more

வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்கபப்ட்டுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் தமிழ் தொழிலாளர்களை வட வட மாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பசுவதை தடுக்கப்பட்டால் பூமியில் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும்… குஜராத் நீதிமன்றம் கருத்து!

நாட்டில் பசு வதைக்கு எதிரான குரல் அதிகரித்து வருகிறது. குஜராத் மாநிலம் தபி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பசுமாடுகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. பசு பசு – `தேசிய விலங்கு’ – அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்து உணர்த்துவது என்ன? இவ்வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி சமீர் வினோத்சந்திரா, பசுவரட்டியில் (சாணம்) கட்டப்படும் வீடுகளை அணு கதிர்வீச்சு தாக்குவதில்லை. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல நோய்களை … Read more

பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டபோது, தமிழ்நாட்டில் டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்கள்! ஆளுநர் ரவி குற்றச்சாட்டு…

சென்னை: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக, பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கட்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்தபோது,  தமிழ்நாட்டில்  டஜன் கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை பிஎப்ஐ நடத்தியது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை அரங்கேறி வந்தது. இதனால், இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டே … Read more

"கட்சி அலுவலகம் கட்ட, என்னுடைய நிலத்தை அபகரித்துவிட்டனர்!" – திமுக எம்.பி மீதான புகாரும், விளக்கமும்

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க அலுவலகம் அமைக்கும் பணியை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போது எம்.எல்.ஏ-வாக இருந்த உதயநிதி ஸ்டாலின், முதல் செங்கல்லை எடுத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கும்பகோணம் தி.மு.க அலுவலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்த உதயநிதி உடன் கல்யாணசுந்தரம் இந்த நிலையில், தி.மு.க அலுவலகம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான சுமார் 1,000 சதுர அடி இடத்தை, தி.மு.க மாவட்டச் செயலாளர் … Read more

பரிட்சை சர்ச்சை : CwSN மாணவர்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத பிரதமர் மோடியின் PPC2023

பரிட்சாபே சர்ச்சா என்ற பெயரில் 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிவரும் சம்பிரதாய உரை ஆறாவது முறையாக இந்த ஆண்டும் நடைபெற்றது. இந்த உரையாடலில் ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் (Child with Special Needs – CwSN) குறித்தும் பரிட்சையை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தோ எந்த ஒரு முக்கிய ஆலோசனையும் வழங்கப்படவில்லை. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் (Learning Disorder … Read more

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீன் வீரர் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் கச்சாநோவை 7 – 6, 4 – 6, 7-6, 6 – 3 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வீழ்த்தினார்.

குஜராத் கலவரம்: பிபிசி ஆவணப்படத்துக்குத் தடை; தொடரும் திரையிடல்களும் எதிர்ப்புகளும் – நடப்பது என்ன?

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்து பிபிசி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படம் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இரண்டு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் சென்ற வாரம் வெளியானது. இது வெற்றுப் பிரசாரத்தைப் பரப்புவதாகவும் இந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதாகவும் கூறி, சமூக வலைதளங்களில் அது தொடர்பான அனைத்து இணைப்புகளுக்கு மத்திய ஒளிப்பரப்பு அமைச்சகம் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி தடை விதித்தது. இந்தத் தடை எதிர்க்கட்சிகள் சார்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. … Read more