FIFA உலகக் கோப்பை! தமிழ் வம்சாவளி பெண்ணின் கணவரை தொடர்ந்து இன்னொரு நபர் திடீர் மரணம்

கத்தார் உலகக் கோப்பையில் இரண்டாவது பத்திரிக்கையாளர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் வம்சாவளி பெண்ணான செலின் கவுண்டரின் கணவரும், அமெரிக்க பத்திரிக்கையாளருமான கிராண்ட் வஹி (48) சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பையில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். கிராண்ட் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவரின் சகோதரர் பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த நிலையில் கிராண்ட் உயிரிழந்த 48 மணி நேரத்திற்குள் இன்னொரு பத்திரிக்கையாளர் கத்தார் உலகக் கோப்பையின் போது உயிரிழந்துள்ளார். opindia புகைப்பட பத்திரிக்கையாளரான … Read more

ராகுல் பாரத் ஜோடோ யாத்திரையுடன் பிரியங்கா காந்தி கணவர் மகளுடன் பங்கேற்பு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வரும்  பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகள் மிராயா வத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், யாத்திரை யாத்திரையின் போது ராஜஸ்தானில் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் ஆடிய கலைஞர்களுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார். 2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கிலும், நாட்டு மக்களிடையே ஒற்றுமையை … Read more

ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ராணிப்பேட்டை: தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரு கரையோரங்களிலும் உள்ள 30 கிராமங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு அணைக்கட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு வினாடிக்கு 1724 கனஅடி உபரிநீர் பாலாற்றில் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் யாரும் இறங்கவோ, குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ கூடாது. கால்நடைகளை பாலாற்றில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ராணுவ வீரர்களுக்காக கொண்டுசென்ற 4,000 முட்டைகள்… ஆட்டோவோடு களவாடிச்சென்ற டிரைவர் – தேடலில் போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், ராணுவ வீரர்களுக்காக ஆட்டோவில் கொண்டுசெல்லப்பட்ட 4,000 முட்டைகளை டிரைவர் களவாடிச்சென்ற சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியளித்திருக்கிறது. குவாலியர் மாவட்டத்தின், முரார் பகுதியிலுள்ள ராணுவ கன்டோன்மென்ட் மெஸ்ஸுக்கு உணவுப் பொருள்களை சப்ளை செய்பவர் நிஜாமுதீன் கான். ஒப்பந்ததாரரான இவர், நேற்று நான்காயிரம் முட்டைகளை ராணுவ கன்டோன்மென்ட் மெஸ்ஸுக்கு சப்ளை செய்வதற்காக வாங்கியிருக்கிறார். வாங்கிய முட்டைகளை மெஸ்ஸுக்கு கொண்டு செல்வதற்காக ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். முட்டைகள் பின்னர் முட்டைகளை ஆட்டோவில் ஏற்றிய பிறகு, தன்னுடைய மோட்டார் … Read more

கொலை வழக்கில் சிறை சென்ற நபர்..ஏழு ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த காதலி..அம்பலமான உண்மை

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த நபர், கணவருடன் வாழ்ந்து வரும் காதலியை அடையாளம் காட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழு ஆண்டுகள் சிறை ராஜஸ்தான் மாநிலம் ரசீத்பூரைச் சேர்ந்தவர் சோனு சைனி. இவர் கடந்த 2015ஆம் தனது காதலி ஆரத்தியை கொலை செய்துவிட்டதாக கைது செய்யப்பட்டார். குறித்த பெண்ணின் பெற்றோர் சோனு தங்கள் மகளை திருமணம் செய்து கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சோனு சைனி … Read more

 சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்க ரூ.3.80 கோடி நிதி ஒதுகீடு! தமிழகஅரசு அரசாணை!

சென்னை: 2022-ஆம் ஆண்டு முதல் சிறந்த கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல் தொடர்பாக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரம் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிம்போது, கிராம ஊராட்சித் தலைவர்களின் தலைமைப் பண்பினை வெளிக் கொணரக்கூடிய வகையிலும், ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய கிராம ஊராட்சித் தலைவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், … Read more

சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணியில் 2000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..

சென்னை: சென்னையில் மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றும் பணியில் 2000 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 300 தூர்வாரும் எந்திரங்கள், 177 ஜெட் டிராடிங் எந்திரங்கள், 60 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றது. மழைநீர் மற்றும் கழிவுநீர் குறித்து புகார் அளிக்க 044-45674567, 1916 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

“புதுச்சேரியில் திமுக ஆட்சி மலரும்!” – காங்கிரஸ் கட்சியை சீண்டிய ஸ்டாலின்; பின்னணி என்ன?

புதுச்சேரி மாநில தி.மு.க-வின் அவைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி சிவக்குமாரின் மகன் திருமணம், புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான பட்டானூர் சங்கமித்ரா திருமண நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான ஸ்டாலின், “தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சி மலர்ந்திருக்கிறது. அதை திராவிட மாடல் ஆட்சி என இன்று பெருமையுடன் கூறுகிறோம். அப்படிப்பட்ட ஒரு திராவிட மாடல் ஆட்சி புதுவைக்கு வருவது தேவைதான். … Read more

லண்டனுக்கு தப்பி சென்று தஞ்சமடைந்த ஆசிய பிரபலம்! பல கோடி பணம் ஏப்பம்… சொந்த நாடு திரும்பினார்

லண்டனுக்கு தப்பியோடிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த நாடு திரும்பியுள்ளார். சுலைமான் ஷெஹ்பாஸ் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018-ம் ஆண்டு இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சுலைமான் ஷெஹ்பாஸ் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் பிரித்தானிய தலைநகர் லண்டனில் தஞ்சம் புகுந்தார். … Read more

நாளை அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது! வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: அரபிக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்ட  வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த  இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  கேரளாவின் வடபகுதியில் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் எந்த பாதிப்பும் இருக்காது என்றவர், அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி … Read more