ஈராக், சிரியா மீது துருக்கி விமானப்படை தாக்குதல்: வீடியோவை வெளியிட்டு பதிலடி வழங்கப்பட்டதாக அறிவிப்பு

இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில்,  சிரியா மற்றும் ஈராக் உள்ள இலக்குகள் மீது துருக்கி விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி குண்டுவெடிப்பு கடந்த நவம்பர் 13ம் திகதி இஸ்தான்புல்லின் பாதசாரிகளின் இஸ்டிக்லால் அவென்யூவில் திடீரென அதிர்ச்சியூட்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல் மையப்பகுதியில் அரங்கேறிய பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் வரை உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ❗Blast hits central … Read more

விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு நடிகர் விஜய் வருகை: ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்தித்தார். சென்னை பனையூர் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொளவதற்காக 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் பனையூர் வந்துள்ளனர். 

ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்பு| Dinamalar

மும்பை: மஹாராஷ்ராவில் 74வது நாள் ராகுல் யாத்திரையில் ஹிந்தி நடிகர் அமோல் பலேகர் மனைவியுடன் பங்கேற்றார். காங்., எம்,பி ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி முதல் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7-ந் தேதி முதல் மஹாராஷ்ராவில் நடைபயணம் நடந்து வருகிறது. நேற்று 73வது நாளாக அவரது நடைபயணம் மஹாராஷ்ராத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் தொடர்ந்தது. அவர் செல்லும் வழியில் பொதுமக்களுடன் கலந்துரையாடினார். இரவில் ஜல்காவ் மாவட்டத்தை … Read more

மும்பை: தீயாகப் பரவும் தட்டம்மை, 1,250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்பு: 9 பேர் உயிரிழப்பு!

மும்பையில் தட்டம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில் உள்ள கோவண்டியில் மட்டும் இந்த நோய்க்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் 8 பேரும், புறநகரான பிவாண்டியில் ஒருவரும் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து வந்தனர். அதன் பிறகுதான் மும்பை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, குழந்தைகள் உயிரிழப்புக்கு தட்டம்மை நோய்தான் காரணம் என்பதை உறுதிசெய்தது. தற்போது மும்பையில் மட்டும் தட்டம்மை நோய் அறிகுறிகளுடன் 1,256 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்டால் … Read more

ராஜகுடும்பத்தில் இனி இந்த உணவு பரிமாறக் கூடாது: தடை செய்து உத்தரவிட்ட மன்னர் சார்லஸ்

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் எந்த இல்லத்திலும் இனி foie gras உணவு சமைக்க வேண்டாம் என மன்னர் சார்லஸ் தடை செய்து உத்தரவிட்டுள்ளார். கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த பிரஞ்சு உணவை பரிமாறுவது என்பது நெறிமுறையற்ற செயல் எனவும் மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, ராணியார் மறைவுக்கு முன்னர் வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றிருந்த காலகட்டத்திலும், தமது கிளாரன்ஸ் மாளிகையில் குறித்த உணவை சார்லஸ் தடை செய்திருந்தார். @PA wire foie gras உணவு என்பது வாத்துகளுக்கு அவைகளுக்கான உணவை வலுக்கட்டாயமாக … Read more

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரனை

கோவை: மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு தொடர்பாக உதகையை சேர்ந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆட்டோவில் குண்டுவெடித்தபோது காயமடைந்த ஒருவரின் செல்போன் சிம்கார்டு தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிம்கார்டு வாங்க தந்த ஆதார் எண், உதகை அருகே குந்தசப்பை கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர். குந்தசப்பையை சேர்ந்தவரை கோவைக்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‛‛குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றியை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்| Dinamalar

ஆமதாபாத்: குஜராத்தில் அனைத்து ஓட்டுப்பதிவு சாவடிகளிலும் பா.ஜ., வின் வெற்றியை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசினார். குஜராத் மாநிலத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, வரும் டிசம்பர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக பாஜ., தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு … Read more

PM-Kisan: `11-வது தவணையில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67% குறைந்திருக்கிறது!' – ஆர்.டி.ஐ தகவல்

பிரதம மந்திரி கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள், நான்கு மதங்களுக்கு ஒருமுறை இரண்டாயிரம் ரூபாய் என ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுப் பலனடைந்துவருகின்றனர். 2019-ல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு நிதியளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கிசான் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 11-வது தவணை பணத்தில் பலனடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 67 சதவிகிதம் குறைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி இது தொடர்பாக, ஆர்.டி.ஐ ஆர்வலர் கன்ஹையா … Read more

புதிய வீட்டில் காலை உணவு சாப்பிட்டு சென்ற பிரபல நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் திடீர் தற்கொலை

பிரபல நட்சத்திர ஓட்டலான ராடிசன் புளூவின் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Radisson Blu hotel உரிமையாளர் தற்கொலை இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத்தின் கௌசாம்பியில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலின் (Radisson Blu hotel) உரிமையாளர் அமித் ஜெயின் (Amit Jain), காமன்வெல்த் விளையாட்டு (CWG) கிராமத்தில் உள்ள அவரது கிழக்கு டெல்லி இல்லத்தில் சனிக்கிழமை இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அமித் ஜெயின், அவரது குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் … Read more

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் வாடா தமிழ்நாட்டில் பெருமபாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.