4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: தமிழகத்தின் 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக தமிழகத்தின் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உலக அளவில் 6,659,638 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.59 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,659,638 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 654,036,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 629,493,559 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,536 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வார ராசிபலன்: டிசம்பர் 13 முதல் 18 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ளது. படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன் முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா என்று முருகப்பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்லமுடியவில்லை என்பதால் அவனுடைய நான்கு தலைகளிலும் முருகப்பெருமான் குட்டினார். கீழே விழுமாறு தம் திருவடி கொண்டு உதைத்து பிரம்மனை சிறையில் அடைத்தார். பின்பு படைப்பு தொழிலை முருகனே செய்தார். … Read more

டிசம்பர் 13: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ரொனால்டோ மீது போத்தல் தண்ணீர் வீசிய ரசிகர்., வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

போர்ச்சுகல் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தண்ணீர் வீசியதற்காக ரசிகர் ஒருவர் போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ இடையிலான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ இடையேயான FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிப் போட்டியின் போது, ​​ரசிகர் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தண்ணீரை வீச முயன்றார். பின்னர் அவர் மைதானத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். சில வெறித்தனமான ரசிகர்கள் பற்றிய கதைகள் மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களில் வெளிவருகின்றன. அந்த வகையில், சமூக … Read more

வில்லியமை பாதுகாக்க பொய்களை அள்ளி வீசும் அரச குடும்பம்! இளவரசர் ஹரி குற்றச்சாட்டு

தனது சகோதரன் வில்லியமிற்காக பொய்களை கூறும் பக்கிங்ஹாம் அரண்மனை, தன்னை கைவிட்டதாக இளவரசர் ஹரி குற்றம்சாட்டை முன்வைத்துள்ளார். இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் பற்றிய ஆவணப்படங்களின் சமீபத்திய அத்தியாயங்களின் ட்ரெய்லர் திங்களன்று வெளியிடப்பட்டது. அதில், இளவரசர் ஹரி பக்கிங்ஹாம் அரண்மனை அவரது சகோதரர் வில்லியமுக்காக “பொய் சொல்வதில் மகிழ்ச்சி” அடைகிறது என்ற குற்றம்சாட்டினார். ட்ரெய்லரின் ஒரு பகுதியில், ஹரி (38), பக்கிங்ஹாம் அரண்மனை மீது குற்றம் சாட்டினார் மேலும் “அவர்கள் என் சகோதரனைப் … Read more

உலகக்கோப்பை கனவு பொய்த்தது., ஆனால் கத்தாரில் இருந்து வெறுங்கையுடன் திரும்பாத இங்கிலாந்து வீரர்கள்!

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்து வீரர்கள் கத்தாரில் உள்ள பயிற்சி முகாமில் இருந்து ஒரு ஆதரவற்ற பூனையை தத்தெடுத்தனர். இங்கிலாந்து வீரர்கள் வாக்கர் மற்றும் ஸ்டோன்ஸால் தத்தெடுக்கப்பட்ட கத்தார் பூனை பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்படுகிது. கடந்த சனிக்கிழமையன்று கால் இறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றது. இதையடுத்து, உலகக் கோப்பையை வெல்லும் இங்கிலாந்தின் நம்பிக்கை பொய்த்திருக்கலாம், ஆனால் மான்செஸ்டர் சிட்டி இரட்டையர்கள் கைல் வாக்கர் மற்றும் … Read more

14-ம் தேதி அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் – வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்ற செய்த வெளியான நாள்முதலே, ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப்போகிறார் எனப் பேச்சுக்கள் எழுந்தன. உதயநிதி ஸ்டாலின் இதற்கு முன்னதாக ஏற்கெனவே இதுபோன்று பேச்சுக்கள் எழுந்திருந்தாலும், இந்த முறை உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் அமைச்சராவர் எனப் பேசப்பட்டது. உதயநிதிக்கு ஒதுக்கப்போகும் இலாகா பற்றிகூட பேச்சுக்கள் பரவின. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலினின் … Read more

இதுவரை 92.26 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 92.26 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் அளித்துள்ளார். ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ள நிலையில் இதுவரை 92.26 லட்சம் பேர் இணைத்துள்ளனர்.