வேலூர் உள்பட 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் 2 நாள் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். அதன்படி,   பிப்ரவரி 1, 2ந்தேதிகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பிட்ட 4 மாவட்டங்களில்,  அரசின் திட்டங்கள் மற்றும்  சட்டம் ஒழுங்கு, … Read more

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழாவில் தமிழருக்கு ‌இந்திய தூதரக விருது

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழா இன்று தூதரகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவை பணிகளில் ஈடுபட்டவர்களுக்குக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிர்தௌஸ் பாஷாவுக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஐக்கிய அரபு அமீரக இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வழங்கினார்.

“அதிமுக-வின் திட்டங்களை நிறுத்தி வைத்ததே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை!" – எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஈரோட்டில் இன்று அ.தி.மு.க தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை வகித்துப் பேசினார். கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அரசு கொறடா பா.மோகன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், கருப்பண்ணன், ராஜேந்திர பாலாஜி, செம்மலை, சண்முகநாதன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆனந்தன், செல்லூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசனைக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் … Read more

பிரித்தானிய பிரதமரின் விருதை வென்ற இந்திய வம்சாவளி பொறியாளர்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர், குறைந்த விலை கண்டுபிடிப்புக்கான இங்கிலாந்து பிரதமரின் விருதை வென்றார். இந்திய வம்சாவளி சீக்கியருக்கு பிரதமர் விருது எளிய மக்களுக்காக கைகளால் இயக்கப்படும் சலவை இயந்திரத்தாய் கண்டுபிடித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய-சீக்கிய பொறியாளர் பிரதமர் ரிஷி சுனக்கின் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் (Points of Light) விருதை வென்றுள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது வாஷிங் மெஷின் திட்டத்தை நிறுவிய நவ்ஜோத் சாவ்னி (Navjot Sawhney), மின்சாரம் இல்லாத பகுதிகளில் கைகளால் … Read more

U19-T20 உலகக்கோப்பை போட்டி : நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது இந்திய மகளிர் அணி

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் டி-20 உலகக்கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து அணி இந்திய அணிக்கு 108 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்திய U19 மகளிர் அணி 14.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து நியூஸிலாந்து அணியை 8 … Read more

முதல் டி.20 போட்டி: இந்திய அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து

ராஞ்சி: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

"மக்கள் நீதி மய்யத்தை, காங்கிரஸுடன் இணைப்பதென முடிவு..!"- ஹேக் செய்யப்பட்ட மநீம வலைதளத்தால் பரபரப்பு

கடந்த டிசம்பர் 24-ம் தேதி டெல்லியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கமல்ஹாசன் பங்கேற்றார். ராகுல் காந்தியின் தனிப்பட்ட அழைப்பினாலேயே கமல்ஹாசன் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யம் தரப்பு கூறியது. கமல் – ராகுல் இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27-ம் தேதி இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. தி.மு.க தனது கூட்டணிக்  கட்சியான காங்கிரஸுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியிருக்கிறது. … Read more

சுந்தர்.சி விரைவில் சினிமாவுக்கு முழுக்கு ?

முறைமாமன் படத்தின் மூலம் 1995 ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நுழைந்தவர் இயக்குனர் சுந்தர் .சி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மினிமம் பட்ஜெட்டில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துவருவதுடன் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து வருகிறார். 2018 ம் ஆண்டு ‘சங்கமித்ரா’ என்ற பெயரில் வரலாற்றுப் படம் ஒன்றை மெகா பட்ஜெட்டில் இயக்க திட்டமிட்டார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சர்ச்சையால் நின்றுபோனது. தனது கனவுப்படமான ‘சங்கமித்ரா’ படம் முடிவடைந்ததும் … Read more

தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம்

சித்தூர்: தென்னிந்திய அளவிலான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திராவின் சித்தூரில் நடைபெற்ற போட்டிகளில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாமிடம் பெற்றது. இந்த போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது.

நிச்சயமான நிலையில் உறவினருடன் காதல்; மகளைக் கொன்று எரித்த `கொடூர' தந்தை – கைதுசெய்த போலீஸ்!

மகாராஷ்டிரா மாநிலம், நாண்டெட் மாவட்டத்திலுள்ள பிம்ப்ரி மகிபால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி. 22 வயதாகும் இந்தப் பெண் மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தா. அவருக்கு அதே ஊரில் மாப்பிள்ளை பார்த்து பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். ஆனால், சுபாங்கி அதே கிராமத்தில் தன்னுடைய உறவினர் ஒருவரைக் காதலித்து வந்தார். இது குறித்து சுபாங்கி தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தவரை நேரில் சந்தித்து, தான் அதே கிராமத்தில் வேறு ஒரு வாலிபரைக் காதலிப்பதாகக் கூறினார். இதனால் … Read more