மத்திய பிரதேசத்தில் ஐசியு வார்டில் புகுந்த மாடு: நோயாளிகள் ‛அலறல்| Dinamalar

போபால்: மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடியது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பிரதேசத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின், ஒரு பசு ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் உட்புகுந்து நோயாளிகள் உட்கொள்ள வைத்திருந்த உணவு சாப்பிட்டது. இதனால் நோயாளிகள் அச்சமடைந்து, அலறல் சத்தம் போடுகின்றனர். மேலும் திடீரென உட்புகுந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. … Read more

கர்நாடகா: ஆட்டோ வெடித்து, தீ பிடித்ததில் இருவர் காயம் – `தீவிரவாத தாக்குதல்' என போலீஸ் தகவல்!

கர்நாடகாவில், ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் டிரைவர் உட்பட இரண்டு பேர் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இந்தச் சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. கர்நாடகாவில் திடீரென தீப்பிடித்த ஆட்டோ இன்று அதிகாலையில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், மங்களூரு ரயில் நிலையத்தில் ஒருவர் தன்னை நகரத்தில் இறக்கிடுமாறு ஆட்டோவில் ஏறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் ஆட்டோ சென்றுகொண்டிருக்கையில், நாகோரி பகுதி அருகே திடீரென ஆட்டோ வெடித்து தீப்பிடித்து … Read more

கடவுளே இனி முடியாது! மூச்சு முட்டுகிறது.. மொத்த குடும்பமும் தற்கொலை… சிக்கிய கடிதம்

இந்தியாவில் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மனதை உருகவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பறிபோன குடும்ப நிம்மதி உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் ஜிதேந்திரா ஸ்ரீவஸ்தவா (45). இவருக்கு மன்யா (16) மற்றும் மன்வி (14) என்ற இரு மகள்கள் இருந்தனர். ஜிதேந்திரா கடந்த 1999ல் நடந்த கார் விபத்தில் தனது ஒரு காலை இழந்தார். அவரின் மனைவி சிம்மி இரண்டாண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் உயிரிழந்தார். மனைவி இறப்பிற்கு பிறகு ஜிதேந்திரா வீட்டிலேயே டைலரிங் பணி … Read more

நவம்பர் 20: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 183-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 183-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 180 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

100 நாட்களில் 30,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை: 100 நாட்களில் 30,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பழுதடைந்த 44 ஆயிரம் மின்கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. கோவையில் பழுதடைந்த நிலையிலுள்ள சாலைகளை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

“நவம்பர் 21, 22-ம் தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!"- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாகப் பெரிய அளவில் மழை பதிவாகாத நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றதையடுத்து, நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் நவம்பர் 21, 22 ஆகிய … Read more

இரவு நேரத்தில் அசத்திய டோனி! சக வீரர்களுடன் ஜாலி… வைரல் வீடியோ

டோனி தனது புதிய காரில் இரவில் சக வீரர்களுடன் ஜாலியாக பயணித்த வீடியோ வைரலாகியுள்ளது. ஐபிஎல் 2022 முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் டோனி விளையாட்டில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் சில இடங்களுக்குச் சென்றார். சமீபத்தில் ராஞ்சியில் நடந்த டென்னிஸ் போட்டியில் பங்கேற்று இரட்டையர் பிரிவில் கோப்பையை வென்றார் டோனி. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2023) அடுத்த சீசனுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கும்போது, ​​சிஎஸ்கே கேப்டன் சமீபத்தில் சிஎஸ்கே அணி வீரர்களுடன் … Read more

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை வரலாற்று சாதனை

பாங்காக்: ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸில் முதல் முறையாக வெண்கல பதக்கம் வென்று இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடந்துவருகிறது. அரையிறுதியில் தோற்ற இந்திய வீராங்கனை மனிகா பத்ரா, வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஹினா ஹயாட்டா என்ற வீராங்கனையை எதிர்கொண்டார். இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய மனிகா பத்ரா, 11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2 என்ற கணக்கில் 4 … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூரில் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு: பெண் உயிரிழப்பு: சுகாதாரத்துறையினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் அசக்களத்தூரில் தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கிழக்குறிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி அமுதாவுக்கு மருத்தகத்தில் கருக்கலைப்பு  செய்யப்பட்டுள்ளது. பெண்ணுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த மருந்தகத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். 

“மத்திய அரசின் வீண் பிடிவாதத்தால்தான் 733 விவசாயிகள் உயிரிழந்தனர்!" – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து தொடங்கியது. தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, நேற்றிரவு தங்குவதற்காக புல்தானா மாவட்டத்தின் ஜல்கான்-ஜாமோத் தாலுகாவில் உள்ள பெண்ட்வால் என்ற இடத்தில் நடைப்பயணத்தை நிறுத்தினார். ராகுல் காந்தி நேற்றைய தினம் முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திரா காந்தியின் 105-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. அதோடு கடந்த ஆண்டு இதே நாளில் மத்திய … Read more