ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று 2  லக்ஷர்-இ-தொய்பா 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை 100 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட உள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் என்றும் காஷ்மீர் மாநில ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில், புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த யாத்திரையை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர். அதை தடுக்க ராணுவமும், காவல்துறையும் தீவிர ரோந்துபணி மற்றும் தடுப்பு பணிகளில் … Read more

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, சவரன் ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம்  ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.66-க்கு விற்பனை ஆகிறது.

தேர் கவிழ்ந்து விபத்து; 2 பக்தர்கள் பலி| Dinamalar

இந்திய நிகழ்வுகள் பஞ்சாபி பாடகர் கொலையில்முக்கிய குற்றவாளிகள் கைது புனே,-பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூசேவாலா கொலை வழக்கில் தொடர்புடைய இருவரை, குஜராத்தில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பஞ்சாபி பாடகரும், காங்., பிரமுகருமான சித்து மூசேவாலா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். டில்லி திஹார் சிறையில் உள்ள நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் என்பவர், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் லாரன்சை காவலில் எடுத்து … Read more

ஆப்பிளுக்கு நாம தரப்போக்கும் $8 பில்லியன் வருமானம்: எப்படி தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் கேம்கள் மற்றும் மியூசிக்கை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை நாம் தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபோன் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனம் மியூசிக் மற்றும் கேம்கள் சேவையையும் செய்து வருகிறது என்பது தெரிந்ததே. வரும் 2025ம் ஆண்டுக்குள் கேம்கள் மற்றும் மியூசிக் மூலம் 8.2 பில்லியன் வருமானம் ஆப்பிள் நிறுவனத்திற்கு உயரும் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இனிமேல் தண்ணீர் பிரச்சனையே இல்லை: பெங்களூர், … Read more

Doctor Vikatan: கோவிஷீல்டு இரண்டு டோஸ் செலுத்தியாகிவிட்டது; பூஸ்டர் டோஸும் அதைத்தான் போட வேண்டுமா?

Doctor Vikatan: எனக்கு வயது 81. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டுள்ளேன். அதன் பிறகுதான் எனக்கு கோவிட் தொற்று வந்தது. இப்போது மூன்றாவதாக, பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள காத்திருக்கிறேன். அதை எப்போது போட்டுக்கொள்ளலாம்? கோவிஷீல்டுதான் போட்டுக்கொள்ள வேண்டுமா? பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வதற்கு முன், எனது உடல்நலம் அதற்குத் தயாராக இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டுமா? – மனோகரன், விகடன் இணையத்திலிருந்து. தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பூங்குழலி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி FAQ: உங்கள் … Read more

வெளிநாட்டில் குற்றம் செய்து சிக்கிய தமிழ்ப்பெண்! நடந்தது என்ன? திருமண பந்தத்தில் துன்புறுத்தல் அனுபவித்ததாக கூறும் சக தமிழர்

சிங்கப்பூரில் காப்பகத்தில் பணிபுரிந்த தமிழ்ப்பெண் திருட்டு மற்றும் ஏமாற்றுதல் வழக்கில் சிக்கிய நிலையில் நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது. லதா நாராயணன் (59) என்ற பெண் காப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 65 வயதான முதியவரை கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2019ல் அந்த முதியவரின் ஏ.டி.எம் கார்டை எடுத்து ரூ 2,58,579.80 (இலங்கை மதிப்பில்) பணத்தை திருடியதோடு, கார்டை பயன்படுத்தி உணவு பொருட்கள் மற்றும் கழிப்பறைக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளார். குறித்த முதியவர் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 5 அம்ச கோரிக்கைகள்: ஜூன் 27ந்தேதி வங்கி ஊழியர்கள்வேலைநிறுத்தம்

டெல்லி: பழைய ஓய்வூதியத் திட்டம், வாரத்தில் 5நாட்கள் வேலை உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் ஜூன் 27ந்தேதி (திங்கட்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், மாத இறுதியில் 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வங்கிகளுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற எங்களது … Read more

மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை

சென்னை : மின் தட்டுப்பாட்டை தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டம்,  தொழில் நிறுவனங்களுக்கான மின்சார வசதி குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

சிவப்பு ரேஷன்கார்டில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் களையெடுப்பு!| Dinamalar

புதுச்சேரி: சிவப்பு ரேஷன் கார்டு வைத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் குறித்த விபரங்களை திரட்டி, அவர்களை நேரடி உணவு மானிய திட்டத்தில் இருந்து நீக்குவதற்கான பணியை குடிமைப்பொருள் வழங்கல் துறை முடுக்கி விட்டுள்ளது.புதுச்சேரியில் குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் மக்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.மாநிலத்தில் இதுவரை 3,51,429 மஞ்சள், சிவப்பு நிற ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற கார்டு வழங்கப்பட்டுள்ளது. ரூ.140 கோடி மானியம் அவர்களுக்கு, மாநில அரசின் … Read more

இலங்கை அதிகாரி திடீர் ராஜினாமா: அதானிக்கு மின் திட்டம் வழங்க அழுத்தமா?

அதானி மற்றும் இந்திய பிரதமர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை எந்தவிதமான டெண்டரும் இன்றி இந்தியாவை சேர்ந்த அதானி நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தலைவர் பெர்னாண்டோ குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் தனது குற்றச்சாட்டையும் அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் மின்சார சபை அதிகாரியின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக காஞ்சனா … Read more