இனி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம்: அரசாணை வெளியீடு

சென்னை: இனி தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளுக்கு இனி தேர்வாக தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அரசாணை வெளியீடு. தமிழ் கட்டாயம் என்கிற நிலையை கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றி மற்ற மாநிலத்தவருக்கு தாரைவார்த்த உரிமையை இன்று மீண்டும் தமிழர்களுக்கு பெற்றுத்தந்துள்ளது என்று அறிவாலயம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தாலும் பிரச்சினை இல்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.

கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளக்காடான சீர்காழி – அமைச்சர்கள் நேரில் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரேநாளில் 44 செ.மீ மழை கொட்டித் தீர்த்ததால் எல்லாப் பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், சீர்காழி அருகேயுள்ள மணிகிராமத்தில் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மெய்யநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாட புத்தகங்கள் மற்றும் ஆவணங்களை உடனே வழங்குமாறு  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். வெள்ளத்தில் தவிக்கும் சீர்காழியில் அமைச்சர்கள் ஆய்வு கனமழை காரணமாக சீர்காழி  நகரம் மட்டுமின்றி சுற்றியுள்ள பல கிராமங்களும் முழுவதுமாக … Read more

வெளியேற்றிய பிரித்தானியா… 18 ஆண்டுகள் விமான நிலையத்திலேயே வசித்தவர் மரணம்

பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தையே கடந்த 18 ஆண்டுகளாக குடியிருப்பாக மாற்றிய ஈரானியர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானியரான மெஹ்ரான் கரிமி நசேரி சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாத இராஜாங்க சிக்கலில் சிக்கிக்கொள்ள, 1988 முதல் பாரிஸ் நகரின் Charles de Gaulle விமான நிலையத்தின் ஒரு பகுதியில் வசித்து வந்துள்ளார். @getty தாயாரை கண்டுபிக்க ஐரோப்பாவுக்கு மேலும், இவரது நிலை அறிந்து பிரான்ஸ் நிர்வாகம், குடியிருப்பு அனுமதி வழங்கியது. ஆனால் சில வாரங்கள் முன்பு மீண்டும் … Read more

ஆஞ்சநேயர் கோயிலில் QR Code மூலம் காணிக்கை

நாமக்கல்: உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உலக புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஒற்றை கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை வழிபட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாமக்கல் வருவது வழக்கம். இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு(QR code) மூலம் … Read more

மேட்டூர் அணை நீர்திறப்பு 20,000 கன அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியில் இருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து பகல் 12.30 மணி அளவில் 20,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மும்பை விமான நிலையத்தில் ஷாருக் கான் தடுத்து நிறுத்தம்| Dinamalar

மும்பை,-பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பாலிவுட் நடிகர் ஷாருக் கான், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷார்ஜா நகரில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவுக்கு சமீபத்தில் சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில், அவர் மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியேறுகையில், சுங்கத் துறை அதிகாரிகள் அவரையும், அவரது உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களையும் தடுத்து நிறுத்தினர். … Read more

"உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்"- பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் பதிலடி

கடந்த மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது  T20 உலகக்கோப்பை இன்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் மட்டுமே முன்னேறின. அதில் நியூசிலாந்துடன் மோதி வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியும், இந்தியாவுடன் மோதி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியும் இன்று(13.11.2022) போட்டியை எதிர்கொள்கிறது. 2009-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியும், 2010-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து … Read more

நடுவானில் நெருப்பு கோளமான இரு விமானங்கள்: துயரத்தில் முடிந்த சாகச நிகழ்ச்சி

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இரண்டாம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சியில் நடுவானில் இரு விமானங்கள் மோதி நெருப்பு கோளமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரண்டாம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சியானது டல்லாஸ் நகரில் முன்னெடுக்கப்பட்டது. Credit: AP எதிர்பாராத நொடியில் இதில், போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் ஒன்றும் சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற … Read more

அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் – ஈரான் அதிகாரிகள் குற்றச்சாட்டு

ஈரான்: அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தனர் என்று ஈரான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஈரானிய மனித உரிமைகளுக்கான உயர் சபையின் செயலாளரும், சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய நீதித்துறையின் பிரதித் தலைவருமான காசிம் க்ஹரிபாடி செய்தியாளரகளிடம் பேசுகையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் என்று குற்றம் சாட்டினார். ஈரானிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி நாட்டில் இதுவரை 7,560,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், … Read more