5மின் இணைப்பு இருந்தாலும் இலவசம் தொடரும்! மக்களை குழப்பும் அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை: மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் விவகாரத்தில் மின்துறை அமைச்சர்  அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களை குழப்பி வருகிறார். ஏற்கனவே மின் கட்டண உயர்வு விவகாரத்திலும், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் என்று கூறி கண்ணாமூச்சி ஆடியது போல, தற்போது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு விவகாரத்திலும் மீண்டும் கண்ணாமூச்சி ஆடி வருகிறார். இன்று  செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 5 இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் … Read more

மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: மாநிலக் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டும் பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். மாநிலக் கல்லூரியில் ரூ.63 கோடி செலவில் ஆடிட்டோரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விடுதி கட்டப்பட உள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ஒருவர் தன்னைக் கொல்ல வந்த செய்தியை அறிந்த மகாராணியார் கூறிய வார்த்தைகள்

தன்னைக் கொல்ல ஒருவர் வில் அம்புடன் வந்ததைக் குறித்து அறிந்த மகாராணியார், உடனடியாக என்ன சொன்னாராம் தெரியுமா? வில் அம்புடன் விண்ட்சர் மாளிகைக்குள் நுழைந்த நபர் இந்திய வம்சாவளியினரான Jaswant Singh Chail (20) என்பவர், பிரித்தானிய மகாராணியார், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியான கமீலா ஆகியோருடன் விண்ட்சர் மாளிகையில் இருக்கும்போது, வில் அம்புடன் மாளிகைக்குள் நுழையும்போது பாதுகாவலர்களிடம் சிக்கினார். பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1919இல் இந்தியாவிலுள்ள அமிர்தரஸ் என்ற இடத்தில் பிரித்தானிய படையினரால் இந்தியர்கள் … Read more

சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது குறித்து மத்தியஅரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும்! மா.சுப்பிரமணியன்

சென்னை: சீனாவிலிருந்து வருவோருக்கு கொரோனா சோதனை செய்வது பற்றி  மத்தியஅரசின் அறிவுறுத்தல் பின்பற்றப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்த நிலையில், தொற்று பரவலுக்கான காரணமான சீனவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், உலக சுகாதார மையமான who, விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்க தேவையில்லை என அறிவித்து உள்ளது. ஆனால், இந்திய அரசு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான … Read more

ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். நட்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்

விவாகரத்து நடந்துச்சு! கடினமான நேரத்தில் ஊக்கம் கொடுத்தாங்க… 2வது மனைவி பற்றி நடிகர் விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி

வாழ்வில் தன்னுடைய கடினமான நேரத்தில் ஜுவாலா குட்டா தான் தனக்கு ஊக்கம் கொடுத்தார் என நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார். விஷ்ணு விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினி நடராஜ் என்ற பெண்ணிற்கும் கடந்த 2010ல் திருமணம் நடந்த நிலையில் 2018ல் விவாகரத்து ஆனது. இதையடுத்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை கடந்தாண்டு விஷ்ணு விஷால் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின்னர் மனைவி குறித்து சமீபத்தில் … Read more

பழனி அருகே தனியார் பேப்பர் மில் ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து..

திண்டுக்கல்: பழனி அருகே தனியாருக்கு சொந்த நூற்பாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழனியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட எல்லையான சாமிநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பேப்பர் மில் மற்றும் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பிரிவாக நூல்களுக்கு சாயம் ஏற்றும் … Read more

திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் காரணமாக தஞ்சாவூரில் எர்ணாகுளம் விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரயில்வே திட்டங்களில் டெல்டா பகுதியை தெற்கு ரயில்வே புறக்கணிப்பதாக கூறி அணைத்து கட்சியினர் ரயில்வே மறியலில் ஈடுபட்டுள்ளனர்.