"தயவு செய்து அவரைப்பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள்"- பிரசாந்த் கிஷோர் மீது நிதிஷ் குமார் தாக்கு

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்த பிறகு, நிதிஷ் குமாரை பா.ஜ.க ஒருபக்கம் விமர்சிக்க, மறுபக்கம் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரும் அவரை விமர்சித்துவருகிறார். இரண்டு நாள்களுக்கு முன்புகூட, “நிதிஷ் குமார் இன்னும் பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார். அதற்கான சூழல் வரும்போது மீண்டும் அவர் பா.ஜ.க-வுடன் இணைவார்” என பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். பிரசாந்த் கிஷோர் இந்த நிலையில், பிரசாந்த் கிஷோரின் இத்தகைய பேச்சுக்கு, நிதிஷ் குமாரும் தன்னுடைய பதில் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் குறித்து செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய நிதிஷ் குமார், … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 தாசில்தார் சஸ்பெண்டு!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பணியில் இருந்த 3 வட்டாட்சியர்களை சஸ்பெண்டு செய்து  மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில்  ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின்போது,  அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் வெளியிடப்பட்டது. இதில் அப்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு … Read more

தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தால் ஜாமின் கிடையாது: சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவு

சென்னை: தடை செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்து கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க முடித்து என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஆசிப் முஸ்தகீன் என்பவரின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கின் புலன் விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளதால் ஜாமின் வழங்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனியில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு… ஓபிஎஸ் மகனுக்கு வனத்துறை சம்மன்!

​தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத்-க்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த ​மாதம் ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்கவேல்​ ஆகியோர்​ மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.   பலியான சிறுத்தை சிறுத்தை மரணம்… சிறை வைக்கப்பட்ட அப்பாவி விவசாயி! ​எம்பி மீது வழக்குப்பதிவு செய்யாமல் … Read more

டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர் உதவி…

சென்னை: தலைமைச்செயலகம் வந்துகொண்டிருந்தபோது, சென்னை  அண்ணா சாலையில் டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவருக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உதவி செய்தார்.  விபத்தில் சிக்கியவரை மீட்டு பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அண்ணா சாலை வழியாக அலவலகம் வந்துகொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போது,  டிஎம்எஸ் அருகே விபத்தில் சிக்கியவரை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கான்வாய் பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி வந்து விபத்தில் சிக்கியவருக்கு உதவியுள்ளார்.  வாகனம் அண்ணாசாலையில் டிஎம்எஸ் அருகே வந்துகொண்டிருந்தபொது சாலையில் இருசக்கர வாகனம் … Read more

நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில்

சென்னை: நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மாலை 3 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது; இதற்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,338 கோடி அபராதம்| Dinamalar

புதுடில்லி : ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’ இயங்குதளங்களில் இதர போட்டியாளர்களுக்கு சரிசமமான வாய்ப்பு அளிக்காமல் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றஞ்சாட்டி, ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 1,338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஆண்ட்ராய்டு மொபைல் போன்’களில் தரவிறக்கம் செய்யப்படும் அனைத்து செயலிகளையும் கூகுள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் புதிதாக வாங்கும் ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் நிறுவனத்தின் அனைத்து செயலிகளும் ஏற்கனவே தரவிறக்கம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை அவர்கள் நீக்கவும் முடியாது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த … Read more

ஒரு பனையேறியின் கனிவான கோரிக்கை! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் பனைக்கு கற்பக விருட்சம் என்ற பெயர் உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 5 கோடிக்கும் மேலான பனை மரங்கள் இருந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் கணக்கிட முடியாத அளவுக்கு, பனை மரங்கள் செங்கல் சூளைக்கும், வீட்டுமனைகள் கட்டுவதற்கும் வெட்டப்பட்டதால், இப்போது … Read more

தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி! டிஜிபி எச்சரிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்பான ‘மெசேஜ்’ மோசடி நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும்  டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். kமாநிலம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக, மின்கட்டணம் கட்டவில்லை, அதனால், உங்கள் மின்இணைப்பு துண்டிக்கப்பட உள்ளது. உடனே கீழேஉள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள், அல்லது இணையதளத்தை தொடர்பு கொள்ளுங்கள் என பலருக்கு குறுஞ்செய்தி (மெசேஜ்) வருகிறது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வருவதுடன், இதுதொடர்பாக மின்வாரியத்திலும் புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், டிஜிபி … Read more

தீபாவளியை முன்னிட்டு பொள்ளாச்சி சந்தையில் ஆடு, சேவல் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் நேற்று வாரந்தையின் போது, தீபாவளியை முன்னிட்டு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட ஆடு மற்றும் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதனை வாங்க, வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் ஒருபகுதியில், வியாழக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இதில், மாட்டுச்சந்தை கூடும்போது, அதன் அருகேயே ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்படுகிறது. ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் அதிகம் வருகின்றனர். இந்நிலையில், வரும் 24ம் தேதி  தீபாவளி பண்டிகை … Read more