பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறப்பு

திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து மேலும் 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. பூண்டி நீர்தேக்கத்தில் மழை காரணமாக நீர் மட்டம் உயரந்துள்ளது. இதையடுத்து நாளை மேலும் 1000 கன அடி நீர் கொச்ஸ்தல ஆற்றுக்கு திறக்கப்பட உள்ளது. இதனால், கொச்ஸ்தல ஆற்று கரையோரபகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனஅறிவரறுத்தப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

சென்னை: கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

நான் சாதாரண ஸ்டாலின் அல்ல- முதல்வர் பேச்சு| Dinamalar

சென்னை: ”நான் சாதாரண ஸ்டாலின் அல்ல… தமிழகத்தை நிச்சயமாக நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன்”, என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக அலுவலகத்தில் நடந்த திருமண விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டுள்ளீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த போது கோவிட் தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை … Read more

"மோடி, அமித் ஷாவைப் போல் அனைத்து கிராமங்களுக்கும் செல்லுங்கள்!" – காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவுரை

இந்தியாவில் இந்த ஆண்டில் மட்டும் நடைபெற்ற ஏழு மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐந்து மாநிலங்களில் பாஜக-வும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலா ஒரு மாநிலத்திலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் மார்ச்சில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில்கூட வெற்றிபெறாமல் படுதோல்வியைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸின் இடைக்காலத் தலைவர் பொறுப்பிலிருந்து சோனியா காந்தி விலகிய பிறகு, மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைவரானார். மல்லிகார்ஜுன கார்கே அதன்பிறகு தற்போது நடந்து முடிந்த இமாச்சல், … Read more

மாணடஸ் புயல் சென்னையில் 140 டன் கழிவுகள் அகற்றம் – மாநகராட்சி தகவல

சென்னை: மாணடஸ் புயல் சென்னையில் 140 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்டஸ் புயல் சென்னையில் நேற்று கரையை கடந்தது. இந்த புயலினால் சென்னை முழுவதும் கழிவுகள் அதிகமானது. தண்ணீர் தேங்காமல் மாநகராட்சி உழியர்கள் இரவோடு இரவாக இந்தப் பணியில் ஈடுபட்டார்கள். 1 முதல் 8 மண்டலம் வரையுள்ள பகுதிகளில் 47.67 மெட்ரிக் டன் தாவரக் கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரை 893.42 மெட்ரிக் … Read more

பலத்த காற்றின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் 18-வது கொண்டை ஊசி வளைவில் மிகப்பெரிய மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

சேலம்: பலத்த காற்றின் காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் 18-வது கொண்டை ஊசி வளைவில் மிகப்பெரிய மரம் விழுந்துள்ளது. ஏற்காடு மலைப்பாதையில் பெரிய மரம் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதியார் பிறந்த நாள்; காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை| Dinamalar

லக்னோ: பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, உ.பி., காசியில் உள்ள அவரது உருவ சிலைக்கு, இன்று(டிச.,11) மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிச., 11 ல் சின்னச்சாமி ஐயர் – லட்சுமி அம்மையார் தம்பதிக்கு மகனாக அவதரித்தார் மகாகவி பாரதியார். பெற்றோர் அவருக்கு இட்டபெயர் சுப்ரமணி. ஆனால் 11ஆவது வயதில் கவிபாடும் ஆற்றலினால், எட்டயபுரம் மன்னரால் பாரதி என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அன்று முதல் சுப்பிரமணிய … Read more

BANvIND: இஷானிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வங்கதேசம்; இயல்பு நிலைக்குத் திரும்பும் இந்தியா!

திரில்லர் போட்டிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டுவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் இந்தியா எப்படி விளையாடுமோ அப்படி ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. வங்கதேசம், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து என்று வரிசையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இறங்கு முகத்தில் இருந்த இந்திய அணி அதிகாரப்பூர்வமாக தற்போது தன்னுடைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டத் தொடங்கியுள்ளது. கடைசி வரை போய் போராடி ஜெயிப்பது, கடைசி பந்து போடும் வரை யார் வெற்றி பெறுவார் என்றே தெரியாமல் இருப்பது போன்ற … Read more

உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 65.33 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.57 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.88 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 'வந்தே பாரத்' ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மகாராஷ்டிரா: நாக்பூர் – பிலாஸ்பூர் இடையிலான 6-வது வந்தே பாரத்’ ரயில் சேவையை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவின் முக்கியமான நகரங்களில் மட்டுமே இந்த வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு வருகிறது. முதன்முதலில் டெல்லி- வாரணாசி வழித்தடங்களுக்கு இந்த  வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.