சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாபா ராம்தேவுக்கு கண்டனம்| Dinamalar

மும்பை : பெண்களின் ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது, பெண்கள் அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மஹாராஷ்டிராவின் தானே பகுதியில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசின் மனைவி அம்ருதா பட்னவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில், பாபா ராம்தேவ் பேசுகையில்,”சமூக விதிகளுக்கு … Read more

Doctor Vikatan: எடையைக் குறைக்க உதவுமா பார்லி?

Doctor Vikatan: என்னுடைய தோழி எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறாள். அவள் வாரத்துக்கு இரண்டு முறை பார்லியை உணவில் சேர்த்துக்கொள்கிறாள். பார்லி என்பது எல்லோருக்குமான உணவா? அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? எடையைக் குறைக்க உதவுமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர். அம்பிகா சேகர் நிறைய மருத்துவப் பலன்களைக் கொண்டது பார்லி. இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலமில்லாதபோது நார்ச்சத்து குறைவான, செரிமானத்துக்கு சிரமமில்லாத பார்லி கஞ்சியை மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. சளி சவ்வுப் படலத்தில் … Read more

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம்

சென்னை: திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதுதவிர, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். அந்தவகையில், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்கிறார்.. முதல்வரின் இந்த வருகையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் … Read more

ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் காலாவதியானது

சென்னை: ஆன்லைன் சூதாட்ட அவசர தடைச் சட்டம் நேற்றோடு காலாவதி ஆகிவிட்ட நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழ்நாட்டில் தடையில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுப்பிய கேள்விகளுக்கு, அடுத்த நாளே தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Motivation Story: தினம் ரூ.3 கோடி நன்கொடை;`இன்ஜினீயர் டு உலக பணக்காரர்' HCL ஷிவ் நாடார் வளர்ந்த கதை

`நமக்கு என்ன கிடைக்கிறதோ அதைக்கொண்டு வாழ்கிறோம். ஆனால், நம்மிடம் இருப்பதைப் பிறருக்குக் கொடுப்பதன் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறோம்.’ – வின்ஸ்டன் சர்ச்சில் அது, 1994-ம் ஆண்டு. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரும், நிறுவனருமான ஷிவ் நாடார், தன் பெயரில் ஓர் அறக்கட்டளையை ஆரம்பித்தார். தமிழ்நாடு, ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்கினார். ஹெச்.சி.எல் நிறுவனம் லாபத்தில் கொழித்துக்கொண்டிருந்த நேரம் அது. `இந்த நேரத்தில் இவர் ஏன் அறக்கட்டளையைத் தொடங்கி சமூக சேவையில் ஈடுபட … Read more

பணத்தை தண்ணீராக செலவழித்து மனைவியை கனடாவுக்கு அனுப்பிய இந்தியர்! எல்லாம் போச்சு என கதறும் பரிதாபம்

கனடாவில் spouse விசாவில் சென்று அங்கேயே நிரந்திரமாக வாழும் கணவில் இருந்த நபர் தனது மனைவியால் பல லட்சம் பணத்தை இழந்துள்ளார். spouse விசாவில்  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பம்மிபுராவை சேர்ந்தவர் மந்தீப் சிங். இவருக்கும் ககந்தீப் என்ற பெண்ணிற்கும் கடந்த 2019ல் திருமணம் நடந்தது. ககந்தீப்பின் படிப்பு விசாவுக்கான செலவுகளை மந்தீப் ஏற்றுக்கொண்டால், திருமணத்திற்குப் பிறகு spouse விசாவில் கனடாவுக்கு அவரை அழைத்து செல்ல உதவுவதாக குடும்பத்தார் உறுதியளித்தனர். இதையடுத்து கல்லூரி கட்டணம், விமான கட்டணம், … Read more

4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது

குஜராத்: குஜராத் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறுகிற 89 தொகுதிகளில் நாளை பிரசாரம் ஓய்கிறது. 182 இடங்களை கொண்ட சட்டசபைக்கு டிசம்பர் 1, 5-ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதி தேர்தல் நடப்பதால் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது.

4 ஆண்டுக்கு பின் பக்தர்களுக்கு அனுமதி புல்மேடு பாதையில் அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

சபரிமலை : கேரளாவில், 2018ல் ஏற்பட்ட பெருமழை சேதத்துக்கு பின், இந்தாண்டு முதல் புல்மேடு பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாரிகள் அப்பாதையில் நடந்து சென்று ஆய்வு நடத்தினர். கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் துவங்கியுள்ளன. இங்கு 2018ல் பெருமழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பெண்கள் சபரிமலை வரும் பிரச்னை, கொரோனா பரவல் போன்ற காரணங்களால், நான்கு ஆண்டுகளாக இப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த … Read more

உ.பி: 5-ம் வகுப்பு மாணவனை எலக்ட்ரிக் ட்ரில் மூலம் கொடுமைப்படுத்திய ஆசிரியர் – காரணம் தெரியுமா?!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர், 2-ம் வாய்ப்பாடு சொல்லத் தவறிய 5-ம் வகுப்பு மாணவனை, எலக்ட்ரிக் ட்ரில் கொண்டு சித்ரவதை செய்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கான்பூர் மாவட்டத்தின் பிரேம்நகரிலுள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மாணவன் சிசாமா எனும் பகுதியில் வசிப்பவர். இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தாருக்கு தெரியவந்ததையடுத்து, பள்ளிக்கு பெற்றோர் வர, பள்ளி வளாகம் பரபரப்பானது. பள்ளி இந்த விவகாரம் போலீஸுக்கு சென்றபோது அந்த … Read more