சந்திரயான் – 3 விண்கலம் அடுத்த ஜூன் மாதம் ஏவப்படும்

புதுடில்லி, :”நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான, ‘சந்திரயான் – 3’ விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் ஏவப்படும்,” என, ‘இஸ்ரோ’ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ‘சந்திரயான்  -  2’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, 2019-ல் விண்ணில் ஏவியது. ஆனால், சந்திரயான் விண்கலத்தின், ‘லேண்டர்’ கலன் தொழில்நுட்பக் கோளாறால் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி உடைந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. … Read more

இளம்பெண் ஆசிரியை பாலியல் வன்கொடுமை வழக்கு; காங்கிரஸ் எம்எல்ஏ-வுக்கு 11 கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன்!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் பேட்டையைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியையான இளம்பெண் கோவளம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், “பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குந்நப்பிள்ளில் என்னிடம் நெருக்கமாக பழகினார். பின்னர் பல இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று அவரது கழுத்தில் கிடந்த செயினை அணிவித்து `உன்னை கைவிடமாட்டேன்’ என நெருக்கமாக இருந்தார். ஆனால் இப்போது அவர் என்னை விட்டு விலகிச் செல்கிறார். ஏன் விலகிச்செல்கிறீர்கள் … Read more

கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து: இறப்பதற்கு முன் மனைவியிடம் கடைசியாக போனில் பேசிய விமானி

செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) குகைக்கோவிலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிகத்தை சேர்ந்த 3 பேரும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான விமானி, விபத்துக்கு முன் கடைசியாக தனது மனைவிக்கு போன் செய்து பேசிய உருக்கமாக பேசியுள்ளார். இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத்தில், செவ்வாய்கிழமையன்று குகைக்கோவிலில் இருந்து 6 பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள Garud Chatti என்ற இடத்தில் … Read more

மியான்மர் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

நய்பிடாவ்: யாங்கூன் நகர் இன்செய்ன் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடித்தது. இதில் சிறை சாலை ஊழியர்கள், கைதிகள், பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை: நள்ளிரவில் மனைவி கொலை; கதவை பூட்டிவிட்டு கணவர் தலைமறைவு! – என்ன நடந்தது?

தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வரபிரசாதம். இவரின் மனைவி விசுவாசம் மேரி. கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்றிரவு இவர்களுக்குள் சண்டை வந்திருக்கிறது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றுவிட்டனர். மனைவி மீதான கோபத்தால் தூங்காத வரபிரசாதம், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த விசுவாச மேரியை அரிவாளால் வெட்டினார். இதில் ரத்த வௌத்தில் அவர் உயிரிழந்தார். கொலை இதையடுத்து விசுவாச மேரியின் சடலத்தை போர்வையால் மூடிய வரபிரசாதம் அந்த அறையின் … Read more

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் விசாரணைக்கு 2மாதம் இடைக்கால தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான பணமோசடி வழக்கின் அமலாக்கத்துறை விசாரணைக்கு ச்சநீதிமன்றம் 2மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை  அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாகவும் மற்றும் பணமோசடி வழக்கு அவர்மீதும், அவரது குடும்பத்தினர் மீதும்  பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அவர்மீதான சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிற்து. இந்த வழக்கின் விசாரணையை எதிர்த்து, அனிதா ராதாகிருஷ்ணன் … Read more

இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மருத்துவப்படிப்பில் இதுவரை இல்லாத அளவில் நடப்பாண்டில் 200 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 10,825-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % ஒதுக்கீட்டில் 565 மாணவர்கள் சேர உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அடுத்தாண்டு ஜூனில் சந்திராயன் 3: இஸ்ரோ| Dinamalar

புதுடில்லி: அடுத்தாண்டு ஜூன் மாதம் சந்திராயன் -3 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்., சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்து அதற்கான ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று, விண்ணில் ஏவும் பணி நடக்கிறது. இது குறித்து இன்று டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் கூறியது, அடுத்தாண்டு ஜூன் மாதம் சந்திராயன் -3 விண்ணில் செலுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். புதுடில்லி: அடுத்தாண்டு ஜூன் மாதம் சந்திராயன் -3 விண்ணில் … Read more

பைக்கில் சாகசம் செய்த இளைஞர்; நீதிமன்றத்தின் நூதன தண்டனைப்படி போக்குவரத்தை ஒழுங்கு செய்தார்!

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (19). அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 30-ம் தேதி கல்லூரி முடிந்து, காரைக்குடி அரசு கலைக்கல்லூரி வழியாக, ரயில்வே ஊழியரான கோபாலகிருஷ்ணன் என்பவரது பைக்கில் சென்றார். அப்போது, அரசுப் பேருந்துக்காக சாலை ஓரத்தில் ஏராளமான மாணவிகள் காத்திருந்துள்ளனர். அந்நேரம், மாணவிகளின் முன்பு பைக்கில் எழுந்து நின்று சாகசம் செய்யலாம் என்று மகேஸ்வரன முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அப்போது, மகேஸ்வரன் பைக்கில் இருந்து தடுமாறி  கீழே  விழுந்திருக்கிறார். இதனை … Read more

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீர் ராஜினாமா….

லண்டன்: பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் திடீரென தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 45 நாட்களிலேயே அவர் பதவி உள்ளது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து புதிய பிரதமர் தேர்வு வரும் 28ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கான தேர்தல் நடைபெற்றது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த ஆகஸ்டு மாதம் முதல்  நடைபெற்று வந்தது. … Read more