கெலாட் Vs பைலட்: ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் சண்டை… தீர்த்து வைப்பாரா ராகுல் காந்தி?!

சில காலம் அடங்கியிருந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சண்டைகள், தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. முதலமைச்சர் அசோக் கெலாட் தரப்புக்கும், காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரைக்காக ராஜஸ்தான் வரவிருக்கும் நிலையில் கட்சிக்குள் மோதல் வெடித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. எப்போது ஆரம்பித்தது மோதல்? 2013 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். இதையடுத்து, ராஜஸ்தானில் கட்சியை மீட்டெடுக்கும் பணி சச்சின் பைலட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவிரமாக … Read more

குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழப்பு

போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் டிச.1 மற்றும் டிச. 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர ஓட்டு வேட்டை நடந்து வருகிறது. தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ … Read more

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை: பொது சுகாதாரம் இயக்ககம்

சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என பொது சுகாதாரம் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஷ்ரத்தா கொலை: அஃப்தாப் திகாரின் 4-ம் நம்பர் சிறையில் அடைப்பு!

மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்பவர் கடந்த மே மாதம் தன் காதலி ஷ்ரத்தாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தபோது, அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தான். கொலைசெய்த பிறகு உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து பல்வேறு இடங்களில் போட்டுவிட்டான். இன்னும் ஷ்ரத்தாவின் தலைப்பகுதி கிடைக்கவே இல்லை. போலீஸார் அஃப்தாப் பூனாவாலாவிடம் ஒரு வாரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை போட்டதாகச் சொல்லப்படும் இடங்களுக்கு அவனை நேரில் அழைத்துச் சென்று … Read more

கத்தார் உலக கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி! சட்டையை கழற்றி நடனமாடி வீரர்கள் கொண்டாடிய வீடியோ

கத்தார் உலக கோப்பை லீக் போட்டியில் மெக்சிகோ அணியை வீழ்த்திய உற்சாகத்தை அர்ஜெண்டினா அணி வீரர்கள் ஓய்வறையில் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அஜெண்டினா அணி வெற்றி லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் தற்போது வெற்றி கனியை பறித்துள்ளது. The celebrations in the … Read more

சீர்காழியில் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் : அமைச்சர் பன்னீர் செல்வம்

மயிலாடுதுறை: சீர்காழியில் விவசாயிகளுக்கு நிவாரணத்தை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும்பணிகள் நடந்து வருவதாகவும் அமைச்சர் காரைக்காலில் பேட்டி அளித்தார். மடுலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 87% பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலிகை சூப், பிரண்டைத் துவையல், ஹெர்பல் பாஸ்தா | ஹெல்த்தி வீக் எண்டு விருந்து

மழையும் பனியுமாக சட்சட்டென மாறிக்கொண்டிருக்கிறது வானிலை. குளிருக்கு இதமாக சூடாகக் கேட்கும் நாவிற்கு, சத்தாகவும் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்த வார வீக் எண்டை ஹெல்த்தியாக ஆரம்பிக்கலாங்களா? மூலிகை சூப் தேவையானவை: எலுமிச்சைப்பழச் சாறு – 2 டீஸ்பூன் அரைக்க: தூதுவளைக் கீரை – அரை கப் அப்பக் கோவை இலை – அரை கப் முசுமுசுக்கு இலை – 6 துளசி இலைகள் – 4 வெல்லம் – ஒரு சிட்டிகை கற்பூரவல்லி இலை – ஒன்று … Read more

சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் அடையாளம் கண்டுபிடித்தது தேர்தல் ஆணையம்

சென்னை: சென்னையில், 16 தொகுதிகளில் மொத்தம் 2.6 லட்சம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுபிடித்துள்ளது. அதிகபட்சமாக வேளச்சேரி – 24,414, விருகம்பாக்கம் – 23,073, சைதாப்பேட்டை – 19,883, அண்ணா நகர் – 19,506 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாரம்பரிய நெல் நாற்றுகளால் மூவேந்தர்களின் கொடிகள்: இயற்கை விவசாயி அசத்தல்| Dinamalar

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் அருகே, விவசாயி ஒருவர் தனது வயலில் மூவேந்தர்களின் கொடிகள், தமிழக அரசின் சின்னம் ஆகியவற்றை வயல்களுக்கு நடுவில் கருப்புக் கவுனி நெல் நாற்றுகளால் வடிவமைத்துள்ளார். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மழவராயநல்லூரைச் சேர்ந்தவர், விவசாயி செல்வம். இவர் ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் ரகம் ஒன்றைப் பயிரிட்டு, அதன் விதைநெல்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். 15 ஆண்டுகளாக இச் சேவையை செய்து வருகிறார்.கருப்புக்கவுனி, பூங்காறு, சொர்ணமுகி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பயிரிட்டு, … Read more

ஈரோடு: கழிவுநீரால் செந்நிறமாக மாறிய குளம்; அமைச்சர் ஆய்வு… மூடப்பட்ட இரும்பு உருக்காலை!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சென்னிமலை பகுதிகளிலுள்ள பெரிய வேட்டுவபாளையம், சின்ன வேட்டுவபாளையம், ஈங்கூர், எழுதிங்கள்பட்டி, வெட்டுக்காட்டுவலசு, கடப்பமடை, காசிபில்லாம்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், குட்டப்பாளையம், குமாரபாளையம், ஓடைக்காட்டூர், பாலிகாட்டூர், சேடங்காட்டூர், கம்புளியம்பட்டி, வரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்த விவசாய நிலங்களில் 2,800 ஏக்கர் நிலங்கள் பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க 1994-ம் ஆண்டில் கையகப்படுத்தபட்டது. இதைத் தொடர்ந்து சிப்காட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன. இந்த சிப்காட் தொழிற்பேட்டையில் சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று … Read more