மே.வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி உறுதி| Dinamalar

கோல்கட்டா: மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அந்த மாநில பாஜ., தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது: சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை, ஆலோசனை நடத்தி வருகிறோம். மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் … Read more

“பெண்கள் உடை அணியாவிட்டாலும்..!" – மீண்டும் சர்சையைக் கிளப்பிய பாபா ராம்தேவ்; வலுக்கும் கண்டனங்கள்!

அவ்வப்போது சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசி பரவலாகப் பேசுபொருளாகும் பாபா ராம்தேவ், தற்போதும் மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சால் கண்டனங்களுக்குள்ளாகியிருக்கிறார். இதற்குமுன் பலமுறை நீதிமன்றங்களே பாபா ராம்தேவின் பேச்சுக்களை எச்சரித்திருக்கின்றன. பாபா ராம்தேவ் இந்த நிலையில் மகாராஷ்டிராவில் யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாபா ராம்தேவ், “பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள். சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். என் பார்வையில் அவர்கள் எதையும் அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள்” என்று பெண்களைப் பற்றி சர்ச்சைக்குரிய விதமாகப் பேசியிருக்கிறார். இத்தனைக்கும் அவர் இதைப் … Read more

கத்தார் உலகக்கோப்பை கால்பந்துக்கு பெரும் சிக்கல்! பீதியை கிளப்பும் ஒட்டக காய்ச்சல்

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து திருவிழா காரணமாக மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும் வேளையில் அங்கு ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை உலக சுகாதார அமைப்பு இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலக கோப்பை தொடர் நவம்பர் 20ஆம் திகதி கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் டிசம்பர் 18ஆம் திகதி வரை நடைபெறுகிது. உலகக் கோப்பையை காண பல்வேறு நாடுகளில் இருந்து 12 லட்சம் மக்கள் கத்தாருக்கு வருகை தந்துள்ளனர். … Read more

சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள்

சென்னை: சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டு கொண்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், சென்னையில் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக வேளச்சரியில் 24 ஆயிரத்து 414, விருகம்பாக்கத்தில் 23 ஆயிரத்து 073, சைதாப்பேட்டையில் 19 ஆயிரத்து 883, அண்ணாநகரில் 19 ஆயிரத்து 506 பேரும், போலி வாக்காளர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகே 6 வீடுகளின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே ஒரே இரவில் 6 வீடுகளின் பூட்டை உடைத்து துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. 6 வீடுகளில் இருந்து ரூ.55,000 ரொக்கப் பணம், 15 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து ஓலக்கூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கெலாட் Vs பைலட்: ஓயாத ராஜஸ்தான் காங்கிரஸ் சண்டை… தீர்த்து வைப்பாரா ராகுல் காந்தி?!

சில காலம் அடங்கியிருந்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சண்டைகள், தற்போது மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. முதலமைச்சர் அசோக் கெலாட் தரப்புக்கும், காங்கிரஸ் இளம் தலைவர் சச்சின் பைலட் தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்திருக்கிறது. ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரைக்காக ராஜஸ்தான் வரவிருக்கும் நிலையில் கட்சிக்குள் மோதல் வெடித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. எப்போது ஆரம்பித்தது மோதல்? 2013 சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது காங்கிரஸ். இதையடுத்து, ராஜஸ்தானில் கட்சியை மீட்டெடுக்கும் பணி சச்சின் பைலட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. தீவிரமாக … Read more

குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழப்பு

போர்பந்தர்: குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் டிச.1 மற்றும் டிச. 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. குஜராத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தீவிர ஓட்டு வேட்டை நடந்து வருகிறது. தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ … Read more

விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை: பொது சுகாதாரம் இயக்ககம்

சென்னை: வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எவ்வித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என பொது சுகாதாரம் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஷ்ரத்தா கொலை: அஃப்தாப் திகாரின் 4-ம் நம்பர் சிறையில் அடைப்பு!

மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்பவர் கடந்த மே மாதம் தன் காதலி ஷ்ரத்தாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தபோது, அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தான். கொலைசெய்த பிறகு உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து பல்வேறு இடங்களில் போட்டுவிட்டான். இன்னும் ஷ்ரத்தாவின் தலைப்பகுதி கிடைக்கவே இல்லை. போலீஸார் அஃப்தாப் பூனாவாலாவிடம் ஒரு வாரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை போட்டதாகச் சொல்லப்படும் இடங்களுக்கு அவனை நேரில் அழைத்துச் சென்று … Read more

கத்தார் உலக கோப்பையில் அர்ஜென்டினா வெற்றி! சட்டையை கழற்றி நடனமாடி வீரர்கள் கொண்டாடிய வீடியோ

கத்தார் உலக கோப்பை லீக் போட்டியில் மெக்சிகோ அணியை வீழ்த்திய உற்சாகத்தை அர்ஜெண்டினா அணி வீரர்கள் ஓய்வறையில் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. அஜெண்டினா அணி வெற்றி லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் சவுதி அரேபியா அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில் தற்போது வெற்றி கனியை பறித்துள்ளது. The celebrations in the … Read more